web log free
April 26, 2024

அமைச்சுப் பதவி கேட்டு ஜனாதிபதிக்கு தொடர்ந்தும் தொல்லைக் கொடுக்கும் மொட்டுக் கட்சி

அவசர அவசரமாக அமைச்சரவையில் அதிகளவானவர்களை நியமிப்பது தொடர்பில் அரசாங்கத்தில் கடுமையான நெருக்கடி நிலை தொடர்ச்சியாக எழுந்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் மொட்டுவில் இருந்து பெயர் பட்டியல் அனுப்பப்பட்டுள்ளதாக முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், அந்த நியமனங்கள் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்படாததால், கூடிய விரைவில் அமைச்சரவை அமைச்சர்களை நியமிக்குமாறு மொட்டுவின் பலமானவர்கள் தொடர்ந்தும் கேட்டுக் கொண்டனர்.

இது தொடர்பில் மொட்டு அமைச்சர்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில், கட்சித் தலைவர்களின் அறிவித்தலுக்கு அமைய சாகர காரியவசம் எம்.பி இது தொடர்பாக ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மொட்டுவினால் நியமிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.