web log free
May 01, 2026

நாடு திரும்பிய பசிலுக்கு அவரது அணி அமோக வரவேற்பு

முன்னாள் அமைச்சரும் பொதுஜன ஐக்கிய பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ஷ இன்று (20) காலை கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நாட்டை வந்தடைந்தார்.

இவர் ஒரு மாதத்திற்கு முன்பு அமெரிக்கா சென்றிருந்தார்.

எமிரேட்ஸ் எயார்லைன்ஸ் விமானம் EK-650 மூலம் திரு.பசில் ராஜபக்ஷ இன்று காலை 08.30 மணியளவில் டுபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்திருந்தார்.

ரோஹித அபேகுணவர்தன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, காமினி லோககே, பவித்ரா வன்னியாராச்சி, சாந்த பண்டார, எஸ்.எம்.சந்திரசேன, பிரசன்ன ரணவீர, பியல் நிஷாந்த உள்ளிட்ட அமைச்சர்கள் குழுவும் அவரை வரவேற்க கட்டுநாயக்க விமான நிலைய விசேட விருந்தினர் அறைக்கு வருகை தந்திருந்தனர். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd