web log free
March 28, 2024

சிறைக்குள் தொலைபேசி - இசுரு பண்டார சிக்கலில்

நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலியின் காதலன் இசுரு பண்டார வெலிக்கடை சிறைச்சாலையில் தனிப்பட்ட கையடக்கத் தொலைபேசியை பயன்படுத்தினாரா அல்லது சிறையில் தொலைபேசி கொடுத்தனரா என்பது தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்.

இசுரு பண்டார நபர் ஒருவருடன் தொலைபேசி உரையாடலில் ஈடுபடும் ஆடியோ பதிவு தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இதன்படி, இசுறு சிறைச்சாலையின் நலன்புரி பிரிவில் உள்ள கைதிகளின் தொலைபேசியில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டதா அல்லது அவர்களின் தனிப்பட்ட தொலைபேசியை அவர்கள் பயன்படுத்தினார்களா என்பது தொடர்பில் சிறைச்சாலை விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னதாக திலினி பிரியமாலியிடம் இருந்து இரண்டு செல்போன்களை சிறை அதிகாரிகள் கைப்பற்றினர்.