web log free
April 25, 2024

சுற்றுலா விசாவில் துபாய் சென்றவர்கள் நடுவீதியில் நிர்க்கதி

சுற்றுலா விசாவில் வெளிநாட்டு வேலைக்காக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் துபாய் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

சுற்றுலா விசா பெற்று நாட்டுக்கு வேலைக்குச் சென்ற இவர்களில் பலர் நாட்டில் வேலை கிடைக்காமல் பெரும் அவதிக்குள்ளாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சில இலங்கை இளைஞர்கள் ஒன்றும் செய்ய முடியாமல் வீதிகளில் தங்கி இலங்கையர்களிடம் பணம் கேட்பதாகவும் கூறப்படுகிறது.

வேலை அனுமதிப் பத்திரமாக தயாரிக்கப்பட்ட சுற்றுலா விசாக்கள் காரணமாக டுபாய் மாநிலத்தில் பலர் இலங்கைக்கு திரும்புவதற்கு கடவுச்சீட்டு பெற முடியாமல் தவிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, துபாய் சென்று பலாத்காரத்திற்கு உள்ளான பெண்கள் உள்ளிட்டவர்களை இந்த நாட்டுக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.