web log free
April 20, 2024

ஓமான் தூதரகத்தில் 77 இலங்கை பெண்கள் தஞ்சம்

ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் பாதுகாப்பு இல்லத்தில் தற்போது 77 இலங்கைப் பெண்கள் வசிப்பதாகவும் அவர்களில் 12 பேர் மாத்திரமே இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாகவும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

ஏனைய பெண்கள் அனைவரும் வேறு வழிகளில் ஓமானுக்கு வந்தவர்கள் எனவும், இந்த பெண்கள் அனைவரும் பல்வேறு அனர்த்தங்களுக்கு உள்ளாகி ஆதரவை நாடி வருவதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.