web log free
April 25, 2025

புதிய அரசியல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை ஆரம்பம்

புதிய அரசியல் கூட்டணியை உருவாக்குவது குறித்த பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மொட்ட்டுவமற்றும் ஐ.தே.க.வின் தலைமையில் பல கட்சிகளின் சிரேஷ்டர்களின் பங்கேற்புடன் இந்தப் புதிய அரசியல் கூட்டணி உருவாக்கப்படவுள்ளது.

ஜனாதிபதிக்கும் பசில் ராஜபக்ஷவுக்கும் இடையில் ஆரம்பக்கட்ட கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

எதிர்வரும் பொதுத் தேர்தலை இலக்காகக் கொண்டு இந்தப் புதிய கூட்டணி அமைக்கப்படவுள்ளது.

அதற்காக  மொட்டுவும் ஐ.தே.கவும் நேரடியாக ஈடுபட்டுள்ளதுடன், சுதந்திர கட்சியின் ஒரு பகுதியினரையும், சமகி ஜன பலவேகவின் எம்.பி.க்கள் குழுவையும் உள்வாங்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஆனால், வரும் உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக இந்தக் கூட்டணி அமையாது என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd