web log free
April 27, 2024

காலி முகத்திடலில் மீட்கப்பட்ட சடலம்

காலி முகத்திடலில் உள்ள கொடிக்கம்பத்திற்கு அருகில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 27 ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய அவர் நேற்று (28) காலை வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் உறவினர்களால் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.