web log free
May 10, 2025

வீட்டில் கஞ்சா செடிகள் வளர்க்கும் பாராளுமன்ற உறுப்பினர்

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வீட்டில் கஞ்சா பயிரிடப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் காணொளிகள் பரவி வருவதாக சமகி ஜன பலவேகய நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா குறிப்பிடுகின்றார்.

எனவே, இதுகுறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

மேலும், கஞ்சா செய்கையில் ஈடுபடும் சாதாரண நபர் கண்டறியப்பட்டால், சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் எனவும் எம்பி என்றால் கண்டுகொள்வதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

வரவு செலவுத் திட்ட குழு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd