web log free
September 10, 2025

கொரோனா தடுப்பூசிகளுள் ஒன்றான மொடோனா தடுப்பூசியின் எதிர்ப்பு சக்தி தொடர்பான ஆய்வறிக்கை அடுத்த வாரம் வெளியாகும் என ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு உயிரியல் துறை பிரிவின் தலைவர் சந்திம ஜுவந்தர தெரிவித்துள்ளார்.

மொடோனா தடுப்பூசிகள் பெற்றுக்கொண்டாவர்களின் மாதிரிகள் ஆய்விற்கு அனுப்பப்பட்டு தற்பொழுது ஆய்வுகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஸ்புட்னிக்V தொடர்பான ஆய்வுகள் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதும் அண்மையில் சைனபார்ம் தடுப்பூசியின் எதிர்ப்பு சக்தி தொடர்பான ஆய்வறிக்கை வெளியிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

 பேராதனை பல்கலைக்கழகம் COVID-19 நோயாளிகளை கண்டறிய இடைக்கால சோதனை முறையாக ஒரு சோதனை கருவியை உருவாக்கியுள்ளது.

பேராதனை பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் ருச்சிகா பெர்னாண்டோ தலைமையிலான குழுவால் இந்த சோதனை கிட் வடிவமைக்கப்பட்டது.

இது கோவிட் -19 நோயாளர்களைக் கண்டறிய ஒரு திறமையான மற்றும் குறைந்த விலை முறையாகும். முதலீட்டாளர்கள் ரூ. 1500  என்ற சிறிய விலைக்கு , ஏற்கனவே தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட இந்த கருவி மூலம் ஒரு கோவிட் -19 சோதனையை நடத்தப்படலாம் என சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது .

பேராதனை பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எம்.டி.லாமவன்சா உள்ளிட்ட குழுவினரால் புதிய சோதனை கருவி சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd