web log free
April 28, 2025
kumar

kumar

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தொடர்பான அறிக்கை மீது நாடாளுமன்றத்தில் உடனடியாக விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை குறித்தான சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை நேற்றுமுன்தினம் வெளிவந்தது. நாளை அமைச்சரவையில் அது பற்றி ஆராயப்படவுள்ளது.

இந்நிலையிலேயே நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில்  (25) கொழும்பு ஹைட் பார்க்கில் இடம்பெற்ற சத்தியாகிரகத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டிருந்தனர்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் கரு பரனவிதான, மாகாண சபை உறுப்பினர் நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க, உடகப்பிரிவின் தலைமை பொறுப்பதிகாரி தனுஸ்க ராமநாயக்க உள்ளிட்டவர்கள் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

அரசாங்கத்தின் தற்போதைய செயற்பாடுகள் தொடர்பில் எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மகாசங்கத்தினர் எதிர்வரும் 31ஆம் திகதி அபயாராமயவில் கூடி தீர்மானிக்கவுள்ளதாக பிக்குகள் குரல் அமைப்பின் தலைவர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

ஏமாற்றமடையாத வீட்டில் இருந்து ஒரு கிளாஸ் தண்ணீரை கொண்டு வருமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாகவும், அரசாங்கத்தின் நிர்வாகத்தையும் மேற்பார்வையையும் ஜனாதிபதி ஏற்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

நாரஹேன்பிட்டி அபயாராம விகாரையில் நேற்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே தேரர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதேவேளை, இந்நாட்டின் தேசிய வளங்கள் வெளிநாடுகளுக்கு விற்கப்பட்டுள்ளமை குறித்து தாம் பெரும் ஏமாற்றமடைவதாக எல்லே குணவன்ச தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ரயில் கட்டணங்களில் திருத்தங்கள் செவ்வாய்க்கிழமை (29) முதல் மேற்கொள்ளப்படும் என போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் அறிவித்ததன் பின்னரே திருத்தம் குறித்து அறிவிக்கப்படும் என்றார்.

எனினும், பஸ் கட்டணங்களுக்கு நிகராக ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்பட மாட்டாது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் சிறிலங்கா விஜயம் செய்யவுள்ளார்.


இவர் இம்மாதம் 28 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதிகளில் சிறிலங்கா விஜயம் மேற்கொள்ள உள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸின் அழைப்பின் பேரில் இந்திய வெளிவிவகார அமைச்சர் இந்த விஜயத்தினை மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அவர் இந்த விஜயத்தின் போது, கொழும்பில் நடைபெறும் பிம்ஸ்டெக் (BIMSTEC) அமைச்சர்கள் மாநாட்டிலும் பங்கேற்கவுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் உள்ள எண்ணெய் சேமிப்புக் கிடங்கு மீது யேமனின் ஹெளதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
நேற்று (வெள்ளிக்கிழமை) ஆளில்லா விமானத்தின் ஊடாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், இந்த தாக்குதலின் போது எவ்வித உயிரிழப்பும் பதிவாகவில்லை.


இதே எண்ணெய் சேமிப்புக் கிடங்கு மீது ஹெளதி கிளர்ச்சியாளர்கள் சில தினங்களுக்கு முன்பு தாக்குதல்களை நடத்திய நிலையில், நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற இருக்கும் ‘கிராண்ட் பிரிக்ஸ்’ கார் பந்தயத்தை தடுக்கும் விதமாக மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான வடக்கு ஜெட்டா எண்ணெய்க் கிடங்கு, மெக்கா புனிதப் பயணம் மேற்கொள்ளும் ஆயிரக்கணக்கான முஸ்லிம் யாத்ரீகர்கள் வந்திறங்கும் ஜெட்டா சர்வதேச விமான நிலையத்துக்கு அருகே தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது.


இந்த எண்ணெய் சேமிப்பு நிலையத்தில் டீசல், கேசோலின், ஜெட் விமான எரிபொருள் ஆகியவை சேமித்து வைக்கப்பட்டுள்ளன.


இந்தத் தாக்குதல் தொடர்பாக சவுதி அரேபியா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கிளர்ச்சியாளர்கள் நகரில் உள்ள தண்ணீர் தொட்டியை குறிவைத்தே தாக்குதலை நடத்தியுள்ளனர். ஆனால், தாக்குதலில் சில வீடுகளும், வாகனங்களும் சேதமடைந்தன.


மற்றொரு தாக்குதல், யேமன் எல்லைக்கு அருகே சவுதி அரேபியாவின் தென்மேற்கு பகுதியில் துணை மின் நிலையத்தை குறிவைத்து நடத்தப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.


யேமனில் ஜனாதிபதி மன்சூர் ஹாதி தலைமையிலான அரச படைகளுக்கும், ஹெளதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 2015ஆம் ஆண்டு முதல் சண்டை நடந்து வருகிறது.


இதில் யேமன் அரசுக்கு சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் ஆதரவு அளித்து வருகிறது. இந்த கூட்டுப்படையில் ஐக்கிய அரபு அமீரகமும் அங்கம் வகிக்கிறது. இதனால் ஹெளதி கிளர்ச்சியாளர்களுக்கும், சவுதி தலைமையிலான கூட்டு படைகளுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது.

காணி விடுவிப்பு விவகாரங்களை பற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நேற்றைய தினம் ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட சந்தர்ப்பத்தில் பதிலளித்த அமைச்சர்களான ஜீ.எல்.பீரிஸ், அலி சப்ரி ஆகியோர் 13ஆவது திருத்தத்தில் காணி, பொலிஸ் அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் உள்ளன. ஆட்சிக்கு வந்த எந்த அரசாங்கமும் அதனை முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை. ஆகவே எமக்கும் அந்த சிக்கல் இருக்குமென தெரிவித்துள்ளனர்.

இதன்போது ஆவேசப்பட்ட சம்பந்தன், மேசையில் ஓங்கி அடித்து 13ஆம் திருத்தச் சட்டத்தை கூட முழுமையாக அமுல்படுத்த முடியாவிட்டால் நாங்கள் ஏன் பேச வேண்டும், அரசாங்கம் எமது பிரச்சினைகளை கவனத்தில் கொள்ளவில்லை என்றால் இவ்வாறான பேச்சுவார்த்தைகளை நடத்துவதில் பயனில்லை. நாம் எமது வழியில் பயணிக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து உடனடியாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, அதை அமுல்படுத்த முடியாதென நாம் தெரிவிக்கவில்லை. அதிலுள்ள சில முரண்பாடுகளையே குறிப்பிட்டோம். அதிகாரப்பகிர்வு குறித்து முரண்பாடுகளை நாமும் உருவாக்க விரும்பவில்லை. முழுமையான அதிகாரப்பகிர்விற்கு அனைத்து முயற்சிகளையும் செய்வோம் என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, 2000 தொன் அரிசியை இலங்கைக்கு வழங்க சீனா தீர்மானித்துள்ளது.

இலங்கையின் தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு சீன அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளதாக கொழும்பில் உள்ள சீன தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலங்காலமாக இரு நாடுகளும் பரஸ்பரம் ஆதரவளித்து வருவதால் சீன அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான மருந்துப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில் 14 முக்கியமான மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு 100 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
 
முக்கியமான மருந்துகளை இறக்குமதி செய்வதற்காக நிதி அமைச்சின் செயலாளரான எஸ்.ஆர்.ஆட்டிகலவுடன் இணைந்து இந்த விடயம் குறித்து மதிப்பீடு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
இதற்கமைய, அடுத்த ஆறு மாதங்களுக்கு 14 முக்கியமான மருந்துகள் இறக்குமதி செய்யப்படும் திட்டத்தை தயாரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
எனவே, ஏனைய மருந்துகளுக்கும் முன்னுரிமை கொடுப்பதால், எதிர்காலத்தில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
எனினும், அந்நியச் செலாவணி நெருக்கடி காரணமாக மருந்துகளை இறக்குமதி செய்வதில் தாமதம் ஏற்பட்டிருந்தமையினையும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
 
75 வீதத்திலிருந்து 80 வீதமான மருந்துகள் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன, அதேவேளை ஐந்து வீதம் சீனாவி லிருந்தும், மேலும் ஐந்து முதல் 10 வீதம் பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தானிலிருந்தும், ஐரோப்பாவிலிருந்து மிகக் குறைவான அளவில் மருந்துகள் இறக்குமதி செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

'இருண்ட எதிர்காலத்தை ஒளியேற்றுவோம்' எனும் தொனிப்பொருளில் ஐக்கிய தேசியக் கட்சி ஏற்பாட்டில் கொழும்பு ஹைட் பார்க் மைதானத்தில் நடைபெற்ற சத்தியாக்கிரகத்தில் 43ஆவது பிரிவின் பிரதிநிதிகள் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் அனுமதியுடன் கலந்துகொண்டனர்.

இது சம்பிக்க ரணவக்கவின் சமீபத்திய மற்றுமொரு அரசியல் பாய்ச்சல் என்பதையே காட்டுகிறது. சம்பிக்க ரணவக்கவின் சரித்திரமே இவ்வாறான அரசியல் மாற்றங்கள் நிறைந்ததாகவே தெரிகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பின் பேரில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் கரு பரணவிதான, நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க, ஊடகப் பிரிவின் பிரதானி தனுஷ்க ராமநாயக்க உள்ளிட்ட 43ஆவது பிரிவின் பிரதிநிதிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். 

கடந்த 15ஆம் திகதி சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் தற்போது ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் சம்பிக்க ரணவக்கவும் தீவிரமாக கலந்துகொண்டார். இதற்காக அவரது 43வது பிரிவின் துருப்புகளும் ஈடுபடுத்தப்பட்டன.

காலத்துக்கு காலம் அரசியலை மாற்றும் சம்பிக்க ரணவக்க மற்றுமொரு அரசியல் பாய்ச்சலுக்கு தயாராகி வருவதாகத் தெரிகிறது.

1994 இல், அவர் சிஹல உறுமய (JHU) என்ற அமைப்பை உருவாக்கினார். 2001 தேர்தலில் தேசியப்பட்டியல் ஆசனத்தை பெற்றதுடன் அந்த ஆசனத்திற்காக கட்சிக்குள் கடும் முரண்பாடுகள் ஏற்பட்டன.

அதன் பின்னர் சோம தேரரின் பிரபல்யம் என்ற போர்வையில் சிங்கள பௌத்தத்தை முன்னிறுத்தி சம்பிக்க ஹெல உறுமயவல உருவாக்கினார்.

நாட்டின் பல பிரபலமான துறவிகள் 2004 பொதுத் தேர்தலில் போட்டியிட்டு தர்ம அரசை உருவாக்குமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

நகர்ப்புறங்களில் இருந்து கணிசமான எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்று 10 ஆசனங்களைப் பெற்றனர். அங்கும் பெற்ற ஆசனங்களால் கட்சிக்குள் நெருக்கடி ஏற்பட்டது.

கடந்த மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்திலும், ரணில் மற்றும் மைத்திரியின் நல்லாட்சியிலும் பல்வேறு அமைச்சுப் பதவிகளை வகித்த சம்பிக்க ரணவக்க, கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி சஜித் பிரேமதாசவுடன் இணைந்துகொண்டார்.

கடந்த 15ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தி போராட்டத்திலும் சம்பிக்க ரணவக்க கலந்துகொண்டார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd