web log free
December 17, 2025
kumar

kumar


ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20) :

உங்கள் ராசிபலனில் சுற்றி வரும் கிரகங்களின் தொடரில் ஒரு கிரகம் மற்றொரு கிரகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, தொழில்முறை முடிவுகளை எடுக்க இது ஒரு சரியான தருணம். எல்லாவற்றிற்கும் மேலாக, நீங்கள் உங்களுக்காக சிறிது கூடுதல் நேரத்தை ஒதுக்க வேண்டும்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21) :

நீங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நபர், குடும்ப உறுப்பினர்கள் அடிக்கடி உங்களைக் குறைத்து மதிப்பிடுவதைப் பற்றி மிகவும் நுண்ணுணர்வு கொண்டவர். இருப்பினும், இன்று சந்திரன் மிகவும் செல்வாக்கு செலுத்துவதால், நீங்கள் உறுதியாக நின்று உங்களை நம்ப வேண்டும். இறுதியில் மற்றவர்களும் உங்களை நம்புவார்கள்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21) :

இது செயல்படுவதற்கும் வளர்ச்சிக்குமான நேரம். ஆனால், முரண்பாடாக, அது நீங்கள் சந்திக்கும் தாமதங்கள், ஏமாற்றங்கள், கட்டுப்பாடுகளுக்கு உங்களுடைய எதிர்வினையைப் பொறுத்து இருக்கும். கற்பனையான தடைகளால் உங்களுடைய அற்புதமான வாய்ப்புகளை மறைக்க விடாதீர்கள். ஒரு பெரிய சிக்கலைப் எதிர்பாருங்கள். நீங்கள் அது எவ்வளவு வேகமாக காணாமல் போகிறது என்பதையும் பார்ப்பீர்கள்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23) :

இன்று ஆதிக்கம் செலுத்தும் கிரக அம்சம் அடுத்த வாரத்திற்கான உங்கள் வாழ்க்கையை வண்ணமயமாக்குகிறது. ஒத்துழைப்பை முன்னிலைப்படுத்துவதே உங்களுக்கான ஆலோசனை. ஆனால், மற்றவர்கள் உங்கள் யோசனைகளையும் திட்டங்களையும் தலைகீழாகப் பின்பற்றுவதைவிட வலியுறுத்த வேண்டும். இப்படி பின்பற்றுவது அடிக்கடி நடக்கிறது. இதற்குத் தேவை உங்கள் மென்மையான, வற்புறுத்தும் வசீகரம்தான் முக்கியம்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23) :

உங்கள் ராசியில் தொழில்முறை தாக்கங்கள் வார இறுதியில் முடிவடையும் முன் சிறிது தீவிரமடைகின்றன. உங்களின் அக்கறை, இரக்க குணம் ஆகியவற்றால் சக ஊழியர்கள் ஈர்க்கப்படுவார்கள். மேலும், உணர்ச்சிவசப்படுவதும் சீராக குறையும். நீங்கள் உண்மையிலேயே அவர்களின் நலனில் அக்கறை கொண்டிருப்பதைக் கண்டு மற்றவர்கள் மகிழ்ச்சியடைவார்கள்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23) :

இன்று சந்திரன், முதலில் உங்கள் ராசிக்கட்டத்தில் ஆழ்ந்த சாதகமான நிலையில் இருக்கிறது. மேலும், உங்கள் உணர்ச்சிகளை உறுதிப்படுத்தவும், உங்களை திருப்தியான மனநிலையில் வைத்திருக்கவும் உதவும். நீங்கள் ஒரு சிறிய இடைவெளியை எடுக்கவில்லை என்றால், இப்போதே செய்யுங்கள். நீங்கள் ஏற்கனவே, திட்டமிட்டிருந்தால் விவரமாக செயல்படுவதற்கான நேரம் இது.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23) :

கடந்த காலத்தில் உங்கள் முயற்சிகளும் தியாகங்களும் எல்லாமே வீண் என்று நீங்கள் கற்பனை செய்யலாம். இருப்பினும், தவறான காரணங்களுக்காக இருந்தாலும், சில நாட்களுக்குள் நீங்கள் சரியானதைச் செய்தீர்கள் என்பதை பார்ப்பீர்கள். குறைந்த பட்சம் அடுத்தமுறை அதே பிரச்சனையை எப்படி சமாளிக்கலாம் என்பதை அறிந்து கொள்வதில் ஓரளவு திருப்தி இருக்கும்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22) :

இந்த நேரத்தில் நீங்கள் உண்மையில் மிகவும் பிரகாசமாக இருக்கிறீர்கள். உங்களைவிட புத்திசாலிகள் என்று கற்பனை செய்யும் நபர்களால் கடந்த காலத்தில் நீங்கள் எப்படி தாழ்த்தப்பட்டிருந்தாலும், இப்போது நீங்கள் உங்கள் யோசனைகளை முன்வைத்து ஊக்குவிக்க வேண்டும். நீங்கள் முதலில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், வேறு யாரும் செய்ய மாட்டார்கள்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22) :

இன்று புதனின் ராசி மண்டல உறவுகள் நீங்கள் மிகவும் விரும்பக்கூடியது, அசாதாரணமானது, தூண்டிவிடுவது, சாகசமானது அதே நேரத்தில் சுதந்திரமானது. நீங்கள் கற்பனை செய்த ஒரு திட்டம் அல்லது புராஜெக்ட் நிச்சயமாக வெற்றி பெறும், எனவே முழுமையாக பரிசீலனை செய்வது பயனளிக்கும். எல்லாமே பிடித்துப் போகிறது.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20) :

பல மகர ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையைப் பற்றி புகார் செய்கிறார்கள். உங்கள் எல்லா பிரச்சனைகளும் உங்கள் மனப்பான்மையை மாற்றுவதன் மூலம் தீர்க்கப்படலாம். ஒரு அளவிற்கு, உங்கள் யோசனைகள் இப்போது காலாவதியானவையாக உள்ளன. அவை காலம் தாழ்ந்து உள்ளன. அவை இறுதியில் விரைவாக நிகழ்காலத்துக்கு திரும்பும். ஆனால், இன்னும் திரும்பவில்லை.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19) :

உங்களிடம் தவறான புரிதல்கள், தவறுகள் அல்லது தவறுகளுக்கான உண்மையான வாய்ப்புகள் எதுவும் தெரியவில்லை. மாறாக, உங்கள் ராசி ஒரு பிரகாசமான வாய்ப்பைப் பெறுகிறது. இது சிறந்த குடும்பம் மற்றும் தனிப்பட்ட உறவுகளை அதிகம் பயன்படுத்த உதவுகிறது. உங்களுக்கு தொழில்முறை நன்மைகள் கூட இருக்கலாம்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20) :

தற்போதைய சந்திரனின் அமைப்பு மீன ராசியினருக்கு ஆதரவாக உள்ளது. ஏனெனில், இது உங்கள் பரவலான உணர்ச்சிகளை உறுதிப்படுத்த உதவுகிறது. இருப்பினும், நீங்கள் விட்டுவிட விரும்பும் சில நடைமுறைப் பணிகளைக் கையாள்வது அல்லது விவாதிக்க வேண்டியதன் அவசியத்தையும் இது உங்களுக்கு நினைவூட்டும்!

 

நாட்டில் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ள நிலையில் தற்போது குடிநீர் போத்தல்களின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

குடிநீர் போத்தல்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையை நீக்கி கடந்த மாதம் 29ம் திகதி அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தல் விடுத்த பின் குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள் விலை அதிகரிப்பு செய்துள்ளன.

அதன்படி புதிய விலை வருமாறு,

500 மில்லி  லீட்டர் குடிநீர் போத்தல் 15 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு புதிய விலை 50 ரூபா
ஒரு லீட்டர் குடிநீர் போத்தல் 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு புதிய விலை 70 ரூபா
ஒன்றரை லீட்டர் குடிநீர் போத்தல் 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு புதிய விலை 90 ரூபா
5 லீட்டர் குடிநீர் போத்தல் 50 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு புதிய விலை 200 ரூபா
7 லீட்டர் குடிநீர் போத்தல் 70 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு புதிய விலை 240 ரூபா

 

கடந்த வாரம் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இருந்து 2 படகுகளில் கடலுக்கு சென்ற 21 மீனவர்கள் கச்சத் தீவு அருகே இலங்கை கடற் படையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்களை விடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்தியா வந்துள்ள இலங்கை வெளியுறவு மந்திரி ஜி.எல்.பீரீஸ் டெல்லியில் நேற்று மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்தும் பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

இதனிடையே, தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை அரசு ஏலம் விடுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பிரதமருக்கு மோடிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதியுள்ளார்.

இந்நிலையில் ராமேஸ்வரத்தில் இருந்து 3 விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்ற 16 மீனவர்களை எல்லை தாண்டியதாக கூறி இலங்கை கடற்படை கைது செய்துள்ளனர்.

தொடர்ந்து இலங்கை கடற்படை மீனவர்களை கைது செய்து வருவது தமிழக மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

நாளைய தினம் பாராளுமன்றத்தில் விசேட உரையாற்ற சந்தர்ப்பம் வழங்குமாறு எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உரையின் ஊடாக அமைச்சர் தனது பதவி இராஜினாமா அறிவிப்பை வௌியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று முற்பகல் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற ஆளும் கட்சிக் குழுக் கூட்டத்தில் அமைச்சர் கம்மன்பிலவுக்கு எதிராக பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு வௌியிட்டதால் கம்மன்பில விரக்தியுடன் வௌியேறியதாக அறியமுடிகிறது.

மக்கள் எதிர்நோக்கும் உண்மையான பிரச்சினை மற்றும் அதன் பின்னணியில் உள்ள உண்மையான காரணங்கள் குறித்து மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் கம்மன்பில கூறியுள்ளார்.

அடுத்த இரண்டு வருடங்களுக்கு தொழில் வழங்குவதற்கு வழியில்லை என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பெலியத்த பிரதேசத்தில் நேற்று (06) இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.வேலைவாய்ப்பைக் கட்டுப்படுத்தும் வகையில் நிதி அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் தமிழ்,சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் 10 புதிய தொழிற்சாலைகள் திறக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

 

இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரீஸ் 3 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். அவர் இன்று டெல்லியில் இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது இரு தரப்பு உறவுகளின் அனைத்து அம்சங்கள் குறித்தும் பேசப்பட்டது.

கடுமையான அந்நிய செலாவணி மற்றும் எரிசக்தி நெருக்கடியில் தத்தளித்து வரும் இலங்கைக்கு, இந்தியா 500 மில்லியன் டொலர் கடன் வழங்க உள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் கடந்த 2ம் திகதி கையெழுத்திட்ட நிலையில், இந்த பேச்சுவார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இலங்கையின் வெளியுறவு அமைச்சர் பீரிஸை வரவேற்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைவதாக ஜெய்சங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

பீரிஸின் சுற்றுப்பயணத்தின்போது, இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டியதன் அவசியத்தையும் இந்தியா வலியுறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் அனைத்து மக்களும் சுகாதார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு பொறுப்புடன் செயற்பட வேண்டுமென இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நாட்டில் மீண்டும் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்றும் அவர் கூறினார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக  பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படுமா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 செயலகங்களை அதிகரிப்பது தொடர்பாக எற்கனவே வெளியிடப்பட்ட வர்த்தமானியை மலையக பகுதிகளில் நடைமுறைபடுத்துவதற்கு எந்தவிதமான நடவடிக்கையையும் இந்த அரசாங்கம் எடுக்கவில்லை.

ஆனால் பெரும்பான்மை மக்கள் வாழுகின்ற காலியில் அதனை உடனடியாக நடைமுறைபடுத்தி அதற்கு தேவையான வசதிகளையும் செய்து கொடுத்துள்ள அரசாங்கம் மலையக மக்களை மறந்து செயற்படுவதை காண முடிகின்றது என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் நேற்று நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.கூட்டத்தில் கலந்து கொண்டு வெளியேறிய வேலுசாமி இராதாகிருஸ்ணனிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், 

நல்லாட்சி அரசாங்கத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணி மனோகணேசன் திகாம்பரம் வேலுகுமார் மற்றும் என்னுடைய ஒத்துழைப்புடனும் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட சட்டமே பிரதேச செயலகங்களை அதிகரிக்க வேண்டும் என்பது.இதற்கு யாரும் தனியாக உரிமை கோரவோ அல்லது நான் தான் செய்தேன் என்று சொல்லவோ முடியாது.

நாங்கள் ஒற்றுமையாக தமிழ் முற்போக்கு கூட்டணியாக செயற்பட்டதன் காரணமாகவே இந்த வெற்றியை எங்களால் பெற்றுக் கொள்ள முடிந்தது.எனவே இது ஒரு கூட்டு பொறுப்பாக செயற்பட்டதன் காரணமாகவே சாத்தியமானது.வெறுமனே நானோ அல்லது வேறு யாருமோ நினைத்திருந்தால் இதனை சாதித்திருக்க முடியாது.இதனை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

இன்று (07.02.2022) நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் நான் இது தொடர்பாக உரையாற்றிய பொழுது மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி திசாநாயக்க அதனை ஏற்றுக் கொண்டதுடன் அதனை நடைமுறைபடுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

நாங்கள் இந்த விடயம் தொடர்பாக எல்லா இடங்களிலும் குரல் கொடுத்து வருகின்றோம். மலையகத்தில் கையெழுத்து திரட்டி சாதித்த விடயம் எதுவும் இல்லை.எனவே இதனை பாராளுமன்றத்திலும் மாவட்ட அபிவிருத்தி குழுவிலும் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் குரல் கொடுப்பதன் மூலமே சாதிக்க முடியும்.

ஏதிர்வருகின்ற பாராளுமன்றத்திலும் இதற்காக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் உட்பட அனைவரும் அலுத்தம் கொடுப்போம்.பிரதேச செயலகங்கள் அதிகரிப்பதன் மூலமாக எங்களுடைய அபிவிருத்தி அதிகரிக்கும் கிராம சேவகர் பிரிவு அதிகரிக்கப்பட்டால் எங்களுக்கான நிதி அதிகரிக்கும் இப்படி பல நன்மைகளை எங்களுடைய மக்கள் பெற்றுக் கொள்ள முடியும்.ஆனால் இந்த அரசாங்கம் எங்களுடைய அபிவிருத்தியிலும் முன்னேற்றத்திலும் அக்கறையுடன் செயற்படவில்லை என்பதையே இது எடுத்துக் காட்டுகின்றது.

மேலும் அரசாங்கத்தில் இருக்கின்ற மலையக பிரதிநிதிகளும் இது தொடர்பாக அலுத்தம் கொடுக்க வேண்டும்.அதனை விடுத்து உப பிரதேச செயலகங்களை திறந்து வைப்பதை நிறுத்திவிட்டு வர்த்தமாணியில் குறிப்பிட்டுள்ளது போல பிரதேச செயலகங்களை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காhலி மாவட்டத்தில் 1063334 பேர் இருக்கின்றார்கள் அங்கே 22 செயலக பிரிவு இருக்கின்றது.வெலிவிடிய பிரதேச செயலக பிரிவில் மக்கள் தொகை 29347 கோணபீனுவல பிரதேச செயலகத்தில் மக்கள் தொகை 21755 ஆனால் நுவரெலியா மாவட்டத்தில் 768000 அதிகமான மக்கள் தொகையை கொண்டிருந்தாலும் எங்களுக்கு இருப்பதோ 5 மாத்திரமே.

அதிலும் நுவரெலியா பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மக்கள் தொகை 220000 அதிகமானது எனவே இது எங்களுடைய மாவட்டத்திற்கு இழைக்கப்படுகின்ற அநீதியாகும்.இதற்காக மாவட்டத்தின் அனைவரும் அதாவது சிறுபான்மை மக்கள் பெரும்பான்மை மக்கள் அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும்.இது வெறுமனே சிறுபான்மை தமிழர்களின் பிரச்சினையாக பார்க்காமல் பொதுவான ஒரு விடயமாக கருதி அரசாங்கம் செயற்பட வேண்டும்.எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த புனித உலகில் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு நபரிடமும் உங்கள் காதலை வெளிப்படுத்துங்கள். இந்த பிரபஞ்சத்தில் காதலை ஒரு முறையாவது அனுபவிக்காத உயிரினமே இருக்காது.
உலகத்தில் இருக்கும் ஒட்டுமொத்த காதலர்களும் காத்திருக்கும் ஒரு நாள் இந்த காதலர் தினம். காதலர் தினம் பிப்ரவரி 14-ஆம் தேதி மட்டும் அவர்களுக்கு கொண்டாட்டம் இல்லை அதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே ஆரம்பித்துவிடுகிறது.

பிப்ரவரி 7 - ரோஜாக்கள் தினம் : Rose Day
அழகாகப் பூத்திருக்கம் ரோஜாப் பூக்களை விட உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் வேறு பரிசுப் பொருள் இருக்கவே முடியாது என்கிறார்கள் காதலில் திளைத்தவர்கள். எனவே, காதலர் தினத்தை பிரம்மாண்டமாகக் கொண்டாட நினைக்கும் காதலர்கள், பிப்ரவரி 7ம் தேதி தனது இணையருக்கு இந்த நாளில் ரோஜா மலரைப் பரிசளிக்கிறார்கள்.

பிப்ரவரி 8 - காதலைச் சொல்லும் தினம் : Propose Day
காதலைச் சொன்னவர்களும் சரி, சொல்லாதவர்களும் சரி இன்று உங்கள் இணையரிடம் நீங்கள் கொண்ட காதலை மிக அழகாக வெளிப்படுத்தலாம்.

பிப்ரவரி 9 - சாக்லேட் தினம்: Choclate day
உங்கள் உறவில் ஒரு இனிமையை ஏற்படுத்தும் வகையில், இணையருக்கு சாக்லேட்டை பரிசளிக்கும் தினம் இது. இப்போதுதான் இதய வடிவில் சாக்லேட் பாக்ஸ் முதல் இதய வடிவ சாக்லேட்டுகளும் விற்பனைக்கு வருகின்றனவே.

பிப்ரவரி 10 - டெட்டி டே :teddy Day

பெண்களுக்குப் பிடித்த பொம்மையாக கரடி பொம்மைகள் (டெட்டி பியர்) விளங்குகின்றன. அவற்றை பரிசளித்து மகிழலாம்.

பிப்ரவரி  11 - Promise Day வாக்குறுதி தினம் : இருவரும் காதலில் இணைந்து இணை பிரியாமல் வாழ்வோம் என்று வாக்குறுதி அளிக்கும் தினமாக இது அமைந்துள்ளது.

பிப்ரவரி 12 - முத்த தினம் : kiss Day
காதலின் அழகிய உணர்வை மிக மென்மையாக வெளிப்படுத்தும் வகையில் இந்த தினத்தை காதலர்கள் முத்தமிட்டு வெளிப்படுத்துகிறார்கள்.


பிப்ரவரி 13 - அணைத்தல் தினம் : Hug Day
தங்களுக்குள் இருக்கும் எந்த வலியையும் எந்தக் கவலையையும் மறக்கச் செய்யும் ஆற்றல் அணைத்தலுக்கு உள்ளது. அதைத்தானே வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் கமலும் கட்டிப்பிடி வைத்தியம் என்று சொல்லியிருக்கிறார். அதைக் கொண்டாடும் தினம் தான் இது.

பிப்ரவரி 14 - காதலர் தினம் : Valantiens Day
இன்றைய தினம் எல்லாவற்றுக்கும் மேலான காதலர் தினம். இதைத்தான் இன்று உலகமே மிக உற்சாகமாகக் கொண்டாடி வருகிறது. காதலிப்பவர்கள் மட்டுமல்ல, தம்பதியரும் கூட தற்போது காதலர் தினத்தை மிக மகிழ்ச்சியாகக் கொண்டாடி வருகிறார்கள்

 

உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரிப்பு காரணமாக எரிபொருள் விற்பனையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு பாரிய நட்டம் ஏற்படுவதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கடந்த மாத கச்சா எண்ணெய் விலையுடன் ஒப்பிடும் போது ஒரு லீற்றர் டீசல் 35 ரூபாவிற்கும் ஒரு லீற்றர் பெற்றோல் 07 ரூபாவிற்கும் நஷ்டம் அடைவதாக அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், எரிபொருள் விலையை அதிகரிப்பது தொடர்பில் கூட்டுத்தாபனம் இன்னும் முடிவு செய்யவில்லை எனவும், இதனை முடிந்தவரை தாங்கிக் கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd