Homeவணிக செய்திஉலக சந்தை நிலவரப்படி இலங்கையில் எரிபொருள் விலை மாற்றம்

உலக சந்தை நிலவரப்படி இலங்கையில் எரிபொருள் விலை மாற்றம்

spot_img

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் சூழ்நிலையால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.

இதன் காரணமாக, இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைப்பதற்காக, உலக சந்தை விலைகளுக்கு ஏற்ப நாட்டின் எரிபொருள் விலைகளையும் திருத்த வேண்டும் என்று பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தற்போதைய உலக சந்தை நிலவரப்படி, பிரென்ட் (Brent) கச்சா எண்ணெயின் ஒரு பீப்பாய் விலை 85 அமெரிக்க டொலராகவும், WTI கச்சா எண்ணெயின் ஒரு பீப்பாய் விலை 80 அமெரிக்க டொலராகவும் பதிவாகியுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ, மத்திய கிழக்கு நெருக்கடியால் இதற்கு முன்னரும் இலங்கை பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

அதே நிலைமை மீண்டும் உருவாகும் அபாயம் இருப்பதால், அது மக்கள் விரும்பாத தீர்மானமாக இருந்தாலும், உலக சந்தை விலைகளுக்கு ஏற்ப உள்நாட்டு எரிபொருள் விலைகளைச் சீரமைப்பதே பொருத்தமான நடவடிக்கையாகும் என அவர் வலியுறுத்தினார்.

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது, எதிர்காலத்தில் இலங்கையின் பொருளாதார நிலைத்தன்மைக்கு மேலும் சவாலாக அமையக்கூடும் என்றும் பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

spot_img

Latest articles

‘பஸ் லலித்’ இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்

துபாயில் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான லலித் கன்னங்கர எனப்படும் ‘பஸ் லலித்’...

இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை விஜயம்

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்திய பாதுகாப்பு அமைச்சின் தகவல்களை மேற்கோள்காட்டி இந்திய ஊடகங்கள்...

நீதித்துறையுடன் விளையாடக்கூடாது – சாலிய பீரிஸ் எச்சரிக்கை

தற்போதைய அரசாங்கத்திற்கு ஒருநாள் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக இவ்வளவு கடுமையான எதிர்ப்பு ஏன் எழுந்துள்ளது என்பது புரியும்...

நீதியமைச்சரின் கருத்து நீதித்துறையின் சுயாதீனம் குறித்து பாரிய கேள்விகளை எழுப்புகிறது

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக நீதியமைச்சர் ஹர்ஷண நாணாயக்கார வெளியிட்டுள்ள கருத்து, நாட்டின் நீதித்துறை அமைப்பின் சுயாதீனம் தொடர்பில்...

More like this

வியட்நாம் ஏர்லைன்ஸ் கொழும்பு – ஹோ சி மின் நகருக்கு நேரடி விமான சேவையை ஆரம்பிக்கிறது

வியட்நாம் ஏர்லைன்ஸ் எதிர்வரும் 16ஆம் திகதி இரவு முதல், ஹோ சி மின் நகருக்கும் கொழும்புக்கும் இடையில் புதிய...

ஸ்கோலியோசிஸ் அறுவைச் சிகிச்சை முன்னேற்றங்கள் மற்றும் இலங்கை நோயாளிகளுக்கான உதவி 

ஊடக அறிக்கை  கொழும்பு – இந்தியாவின் Baby Memorial Hospital (BMH) மருத்துவர்கள், நேரடி நரம்பு கண்காணிப்பு, அறுவைச் சிகிச்சை வழிகாட்டி...

ஏசியன் பெயிண்ட்ஸ் கோஸ்வேயின் ‘Royale INFINITY’இலங்கைச் சந்தையில் அறிமுகம்

-ஆடம்பர உட்சுவர் வர்ணப் பூச்சுகளுக்கு புதிய பரிமாணம் வழங்கும் ஏசியன் பெயிண்ட்ஸ் கோஸ்வேயின் 'Royale INFINITY' இலங்கைச் சந்தையில் அறிமுகம் இலங்கையின் முன்னணி...