Homeவிளையாட்டு செய்திவெண்கலப் பதக்கத்தை வென்றது இங்கிலாந்து அணி

வெண்கலப் பதக்கத்தை வென்றது இங்கிலாந்து அணி

spot_img

விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாத 2026 உலகக் கிண்ண கால்பந்து தொடரின் மூன்றாவது இடத்திற்கான ஆட்டத்தில், பிரான்ஸ் அணியை 6-4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இங்கிலாந்து அணி வெண்கலப் பதக்கத்தை தட்டிச் சென்றது. 

இங்கிலாந்து அணியின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்கு புகாயோ சாகா அடித்த ​ஹெட்ரிக் கோல்கள் முக்கிய காரணமாக அமைந்தது.

மியாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், ஆட்டம் தொடங்கிய 3-வது நிமிடத்திலேயே இங்கிலாந்தின் டெக்லான் ரைஸ் முதல் கோலை அடித்து கணக்கைத் தொடங்கினார். 

தொடர்ந்து அதிரடி காட்டிய இங்கிலாந்து அணிக்கு 18-வது நிமிடத்தில் எஸ்ரி கோன்சாவும், 37 மற்றும் 45+1 நிமிடங்களில் புகாயோ சாகாவும் அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தினர். 

இதனால் முதல் பாதியில் இங்கிலாந்து அணி வலுவான முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியில் பிரான்ஸ் அணி ஆக்ரோஷமாக பதிலடி கொடுக்கத் தொடங்கியது. பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர் கிலியன் எம்பாப்பே 48 மற்றும் 66 ஆகிய நிமிடங்களில் இரண்டு கோல்களையும், 54-வது நிமிடத்தில் பிராட்லி பார்கோலாவும் கோல் அடித்து இங்கிலாந்துக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர்.

இருப்பினும், ஆட்டத்தின் 87-வது நிமிடத்தில் இங்கிலாந்துக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திய புகாயோ சாகா, தனது 3-வது கோலை பதிவு செய்து ஹெட்ரிக் சாதனையுடன் இங்கிலாந்தின் வெற்றியை உறுதி செய்தார். 

ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் (90+6′) பிரான்ஸின் உஸ்மானே டெம்பேலே ஒரு கோல் அடித்த போதிலும், அடுத்த இரண்டு நிமிடங்களில் (90+8′) இங்கிலாந்தின் ஜூட் பெலிங்ஹாம் ஒரு கோல் அடித்து ஆட்டத்தை 6-4 என்ற கணக்கில் முடித்து வைத்தார்.

1966-ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்றதற்குப் பிறகு, உலகக் கிண்ண தொடர் ஒன்றில் இங்கிலாந்து அணி பெறும் மிகச்சிறந்த தரவரிசை (3-வது இடம்) இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

spot_img

Latest articles

‘பஸ் லலித்’ இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்

துபாயில் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான லலித் கன்னங்கர எனப்படும் ‘பஸ் லலித்’...

இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை விஜயம்

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்திய பாதுகாப்பு அமைச்சின் தகவல்களை மேற்கோள்காட்டி இந்திய ஊடகங்கள்...

நீதித்துறையுடன் விளையாடக்கூடாது – சாலிய பீரிஸ் எச்சரிக்கை

தற்போதைய அரசாங்கத்திற்கு ஒருநாள் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக இவ்வளவு கடுமையான எதிர்ப்பு ஏன் எழுந்துள்ளது என்பது புரியும்...

நீதியமைச்சரின் கருத்து நீதித்துறையின் சுயாதீனம் குறித்து பாரிய கேள்விகளை எழுப்புகிறது

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக நீதியமைச்சர் ஹர்ஷண நாணாயக்கார வெளியிட்டுள்ள கருத்து, நாட்டின் நீதித்துறை அமைப்பின் சுயாதீனம் தொடர்பில்...

More like this

தங்கம் வென்ற தரங்க! ஜனாதிபதி வாழ்த்து!

2026 ​பொதுநலவாய விளையாட்டுப் போட்டியின் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பிரிவில் இலங்கையின் 23 வயதான ருமேஷ் தரங்க பத்திரகே...

பாகிஸ்தான் மகளிர் அணியை வீழ்த்தி இலங்கை மகளிர் அணி வெற்றி

பாகிஸ்தானுக்கு எதிராக ஹம்பாந்தோட்டையில் 25ம் திகதி நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில், விஷ்மி குணரத்ன மற்றும் ஹர்ஷிதா...

சேம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது ஸ்பெயின்!

23-வது பிஃபா உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டியில் ஆர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஸ்பெயின்,...