Homeஉள்நாட்டு செய்திதங்கம் வென்ற தரங்க! ஜனாதிபதி வாழ்த்து!

தங்கம் வென்ற தரங்க! ஜனாதிபதி வாழ்த்து!

spot_img

2026 ​பொதுநலவாய விளையாட்டுப் போட்டியின் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பிரிவில் இலங்கையின் 23 வயதான ருமேஷ் தரங்க பத்திரகே தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 

இலங்கை நேரப்படி இன்று (01) காலை இப்போட்டி நிறைவடைந்தது. 

கிளாஸ்கோவில் உள்ள ஸ்காட்ஸ்டவுன் விளையாட்டரங்கில் நடைபெற்ற இப்போட்டியில், ருமேஷ் தனது இரண்டாவது முயற்சியில் 89.75 மீற்றர் தூரம் ஈட்டி எறிந்து இந்தச் சிறப்பான வெற்றியைப் பெற்றுக்கொண்டார். 

இது பொதுநலவாய விளையாட்டுத் தொடரில் இலங்கை வெல்லும் 6ஆவது தங்கப் பதக்கமாகும். 

2006ஆம் ஆண்டு பளுதூக்கும் வீரர் சிந்தன விதானகே தங்கப் பதக்கம் வென்றதற்குப் பிறகு, 20 ஆண்டுகள் கழித்து இலங்கை வெல்லும் முதலாவது தங்கப் பதக்கமும் இதுவாகும்.

2026 ​பொதுநலவாய விளையாட்டுப் போட்டியின் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றுள்ள ருமேஷ் தரங்க பத்திரகேவிற்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வாழ்த்து தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதி தமது உத்தியோகபூர்வ சமூகவலைத்தளத்தில் இந்த வாழ்த்துச் செய்தியை வௌியிட்டுள்ளார். 

அதில், பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் நீங்கள் வென்ற தங்கப் பதக்கம் நாடு காணும் பொன்னான கனவை நனவாக்கிய பெருமிதம்! ருமேஷ் தரங்க உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! என ஜனாதிபதி பதிவிட்டுள்ளார்.

spot_img

Latest articles

இரத்மலானை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

இரத்மலானை கந்தவல வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் உயிரிழந்துள்ளார். முச்சக்கரவண்டி ஒன்றில் பயணித்தவரை இலக்கு வைத்து மோட்டார் சைக்கிளில்...

மஹர சிறைச்சாலையில் பதற்றம்!

மஹர சிறைச்சாலையில் இன்று (ஆகஸ்ட் 1) கைதிகளுக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட முறுகல் காரணமாக பதற்றநிலை ஏற்பட்டது. இந்தச்...

நீர்கொழும்பு கடலில் படகு விபத்து: ஒருவர் பலி, பலர் மாயம்

– மீனவர்களை மீட்க முப்படை கூட்டு நடவடிக்கை நீர்கொழும்புக்கு அருகிலுள்ள கடற்பகுதியில் பல மீன்பிடிப் படகுகள் விபத்துக்குள்ளானதை அடுத்து, அதில்...

கொழும்பு கடலில் விழுந்த 17 கொள்கலன்கள்

கொழும்பு துறைமுகத்திற்கு மேற்கே 17 நௌட்டிக்கல் மைல் தொலைவில் பயணித்த வணிகக் கப்பலிலிருந்து 17 காலியான சரக்குக் கொள்கலன்கள்...

More like this

இரத்மலானை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

இரத்மலானை கந்தவல வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் உயிரிழந்துள்ளார். முச்சக்கரவண்டி ஒன்றில் பயணித்தவரை இலக்கு வைத்து மோட்டார் சைக்கிளில்...

மஹர சிறைச்சாலையில் பதற்றம்!

மஹர சிறைச்சாலையில் இன்று (ஆகஸ்ட் 1) கைதிகளுக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட முறுகல் காரணமாக பதற்றநிலை ஏற்பட்டது. இந்தச்...

நீர்கொழும்பு கடலில் படகு விபத்து: ஒருவர் பலி, பலர் மாயம்

– மீனவர்களை மீட்க முப்படை கூட்டு நடவடிக்கை நீர்கொழும்புக்கு அருகிலுள்ள கடற்பகுதியில் பல மீன்பிடிப் படகுகள் விபத்துக்குள்ளானதை அடுத்து, அதில்...