Homeஉள்நாட்டு செய்திதங்கம் வென்ற தரங்க! ஜனாதிபதி வாழ்த்து!

தங்கம் வென்ற தரங்க! ஜனாதிபதி வாழ்த்து!

spot_img

2026 ​பொதுநலவாய விளையாட்டுப் போட்டியின் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பிரிவில் இலங்கையின் 23 வயதான ருமேஷ் தரங்க பத்திரகே தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 

இலங்கை நேரப்படி இன்று (01) காலை இப்போட்டி நிறைவடைந்தது. 

கிளாஸ்கோவில் உள்ள ஸ்காட்ஸ்டவுன் விளையாட்டரங்கில் நடைபெற்ற இப்போட்டியில், ருமேஷ் தனது இரண்டாவது முயற்சியில் 89.75 மீற்றர் தூரம் ஈட்டி எறிந்து இந்தச் சிறப்பான வெற்றியைப் பெற்றுக்கொண்டார். 

இது பொதுநலவாய விளையாட்டுத் தொடரில் இலங்கை வெல்லும் 6ஆவது தங்கப் பதக்கமாகும். 

2006ஆம் ஆண்டு பளுதூக்கும் வீரர் சிந்தன விதானகே தங்கப் பதக்கம் வென்றதற்குப் பிறகு, 20 ஆண்டுகள் கழித்து இலங்கை வெல்லும் முதலாவது தங்கப் பதக்கமும் இதுவாகும்.

2026 ​பொதுநலவாய விளையாட்டுப் போட்டியின் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றுள்ள ருமேஷ் தரங்க பத்திரகேவிற்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வாழ்த்து தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதி தமது உத்தியோகபூர்வ சமூகவலைத்தளத்தில் இந்த வாழ்த்துச் செய்தியை வௌியிட்டுள்ளார். 

அதில், பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் நீங்கள் வென்ற தங்கப் பதக்கம் நாடு காணும் பொன்னான கனவை நனவாக்கிய பெருமிதம்! ருமேஷ் தரங்க உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! என ஜனாதிபதி பதிவிட்டுள்ளார்.

spot_img

Latest articles

சிங்கப்பூரில் ஷிரந்தி ராஜபக்ஷ.!

நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினால் (FCID) எதிர்வரும் 24 ஆம் திகதி விசாரணைக்காக அழைக்கப் பட்டிருந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி...

அரசியல் அதிகாரம் இல்லாத காரணத்தால் பிரதமர் ஹரிணி அமரசூரிய மௌனம்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் பிரதமர் ஹரிணி அமரசூரிய தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தாமல் இருப்பதற்கு, அவருக்கு அரசியல் அதிகாரம்...

உலக சந்தையில் எரிசக்தி விலை உயர்வு: இலங்கைக்கு பாதிப்பு ஏற்படலாம் – மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை

உலக சந்தையில் எரிசக்தி விலைகள் வேகமாக அதிகரிப்பதால், இலங்கை போன்ற எரிசக்தியை இறக்குமதி செய்யும் நாடுகளின் இறக்குமதி செலவுகள்...

மழை நீடிக்கும்

இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் உருவாகியுள்ள கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும்...

More like this

சிங்கப்பூரில் ஷிரந்தி ராஜபக்ஷ.!

நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினால் (FCID) எதிர்வரும் 24 ஆம் திகதி விசாரணைக்காக அழைக்கப் பட்டிருந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி...

அரசியல் அதிகாரம் இல்லாத காரணத்தால் பிரதமர் ஹரிணி அமரசூரிய மௌனம்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் பிரதமர் ஹரிணி அமரசூரிய தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தாமல் இருப்பதற்கு, அவருக்கு அரசியல் அதிகாரம்...

உலக சந்தையில் எரிசக்தி விலை உயர்வு: இலங்கைக்கு பாதிப்பு ஏற்படலாம் – மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை

உலக சந்தையில் எரிசக்தி விலைகள் வேகமாக அதிகரிப்பதால், இலங்கை போன்ற எரிசக்தியை இறக்குமதி செய்யும் நாடுகளின் இறக்குமதி செலவுகள்...