Homeஉள்நாட்டு செய்திEPF சட்டத்தைத் திருத்த அமைச்சரவை ஒப்புதல்

EPF சட்டத்தைத் திருத்த அமைச்சரவை ஒப்புதல்

spot_img

ஓய்வூதியத்திற்கு தகுதி இல்லாத தனியார் மற்றும் அரைஅரசுத் துறைகளில் பணியாற்றும் ஊழியர்களின் சமூகப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட 1958ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க ஊழியர் சேமலாப நிதி (EPF) சட்டத்தை திருத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தற்போது, இச்சட்டத்திற்கான பொது நிர்வாக நடவடிக்கைகள் தொழிலாளர் ஆணையாளர் நாயகத்தின் கீழ் முன்னெடுக்கப்படுகின்றன. அதேவேளை, இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை, ஊழியர் சேமலாப நிதியின் அறங்காவலராக செயல்பட்டு வருகிறது.

இதுவரை சட்டத்தின் சில பிரிவுகள் காலத்திற்கேற்ப திருத்தப்பட்டிருந்தாலும், தற்போதைய சமூக, பொருளாதார மற்றும் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப உறுப்பினர்கள் எதிர்நோக்கும் சிக்கல்களை குறைத்து, மேலும் தரமானதும் திறமையானதுமான சேவையை வழங்கும் வகையில் சட்டத்தை மேலும் திருத்த வேண்டிய அவசியம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதற்கமைய, இலங்கை மத்திய வங்கி முன்வைத்த பரிந்துரைகளையும் கருத்தில் கொண்டு, தொழிலாளர் திணைக்களம் ஆரம்ப சட்ட வரைவை தயாரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த ஆரம்ப வரைவை அடிப்படையாகக் கொண்டு, ஊழியர் சேமலாப நிதி (EPF) சட்டத்தைத் திருத்தும் சட்டமூலத்தை தயாரிக்க சட்ட வரைவு தயாரிப்பாளருக்கு ஆலோசனை வழங்குவதற்காக தொழிலாளர் அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

spot_img

Latest articles

கெஹெலிய மீண்டும் கைது

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்க வந்திருந்த நிலையில், அங்கு...

கண்டியில் இன்று முதல் 11 நாட்களுக்கு மதுபானசாலை மூடல்

கண்டி எசல பெரஹெரா வீதி உலா இன்று (18) ஆரம்பமாகும் நிலையில், இன்று முதல் தொடர்ந்து 11 நாட்களுக்கு...

ஒவ்வொரு குடிமகனுக்கும் வாகனம்!

ஒவ்வொரு குடிமகனும் வாகனத்தைப் பயன்படுத்தக்கூடிய சூழலை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கில்...

சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி ஆட்சிக் காலத்தை நீடிக்க அரசு திட்டம்

2027ஆம் ஆண்டு – பாட்டலி சம்பிக்க ரணவக்க தற்போதைய அரசாங்கம் 2027ஆம் ஆண்டு சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்தி, ஜனாதிபதியின்...

More like this

கெஹெலிய மீண்டும் கைது

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்க வந்திருந்த நிலையில், அங்கு...

கண்டியில் இன்று முதல் 11 நாட்களுக்கு மதுபானசாலை மூடல்

கண்டி எசல பெரஹெரா வீதி உலா இன்று (18) ஆரம்பமாகும் நிலையில், இன்று முதல் தொடர்ந்து 11 நாட்களுக்கு...

ஒவ்வொரு குடிமகனுக்கும் வாகனம்!

ஒவ்வொரு குடிமகனும் வாகனத்தைப் பயன்படுத்தக்கூடிய சூழலை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கில்...