22வது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக சட்டத்தரணிகள் சங்கத்துக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடல் குறித்து சமூக ஊடகத்தில் பதிவிட்டதன் காரணமாக, தனக்கு ஆபாசமான வார்த்தைகளால் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருவதாக இங்கிலாந்தில் வசிக்கும் முன்னாள் ஊடகவியலாளர் குல குருசூரிய தெரிவித்துள்ளார்.
தனது சமூக ஊடகக் கணக்கின் ஊடாக விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர், தான் வெளியிட்ட கருத்துகளுக்கு எதிராக மிகவும் கீழ்த்தரமான முறையில் ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்தி சிலர் தன்னை திட்டி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு செயற்படும் நபர்களுக்கு, அதே மொழியிலேயே பதிலளிக்க தானும் தயங்கப் போவதில்லை என அவர் வலியுறுத்தியுள்ளார்.
22வது அரசியலமைப்புத் திருத்தம் கொண்டுவரப்பட்ட காலத்திலிருந்தே, அதற்கு தனது கடுமையான எதிர்ப்பை குல குருசூரிய தொடர்ந்து வெளிப்படுத்தி வந்துள்ளார்.




