Homeஉள்நாட்டு செய்தி75 ஆண்டுகளுக்குப் பின்னர் ஏற்படக்கூடிய மிக வலுவான எல் நினோ

75 ஆண்டுகளுக்குப் பின்னர் ஏற்படக்கூடிய மிக வலுவான எல் நினோ

spot_img

– இலங்கைக்கு எச்சரிக்கை

75 ஆண்டுகளுக்குப் பின்னர் ஏற்படக்கூடிய மிக வலுவான எல் நினோ நிலைமையை இந்த முறை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு இறுதிக்குள் எல் நினோ நிலைமை மிகவும் வலுவான நிலையை அடைவதற்கான சாத்தியம் 90 சதவீதமாக அதிகரித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உலகளாவிய வானிலை முன்னறிவிப்புகளின்படி, தற்போதைய எல் நினோ நிலைமை படிப்படியாக வலுவடைந்து வருவதாகவும், அது இந்த ஆண்டு இறுதி வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்னகே தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இந்த எல் நினோ நிலைமை படிப்படியாக வலுவடைந்து வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் மிகவும் வலுவான எல் நினோ நிலைமை ஏற்படுவதற்கான சாத்தியம் 90 சதவீதத்துக்கும் அதிகமாக இருப்பதாக உலகளாவிய முன்னறிவிப்புகள் தெரிவிக்கின்றன.

1950ஆம் ஆண்டு முதல் கடந்த 75 ஆண்டுகளில் ஏற்பட்ட எல் நினோ நிகழ்வுகளுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு ஏற்படவுள்ள எல் நினோ நிலைமை அவற்றை விட மிகவும் வலுவானதாக இருக்கும் சாத்தியம் தற்போது சுமார் 70 சதவீதமாக முன்னறிவிக்கப்பட்டுள்ளது.”

என அவர் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

Latest articles

யோஷித, கரன்னாகொட இருவருக்கும் குற்றப்பத்திரிகை தாக்கல்

யோஷித ராஜபக்ஸ மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட ஆகியோருக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் முக்கிய...

வனாதே சது கைது

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான கஞ்சிபானை இம்ரான் என்பவரின் நெருங்கிய சகாவாகக் கருதப்படும் வனாதே சது என்ற அவிஷ்க...

மக்கள் வாக்கெடுப்புக்கு செல்ல அரசாங்கம் தயார்

நீதித்துறை சீர்திருத்தங்கள் தொடர்பாக தேவையேற்பட்டால் மக்கள் வாக்கெடுப்பை நடத்துவதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இந்த...

அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கும் அபாயம்

உலக நாடுகளை பாதித்துள்ள எல் நினோ காலநிலை நிலைமை மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக,...

More like this

யோஷித, கரன்னாகொட இருவருக்கும் குற்றப்பத்திரிகை தாக்கல்

யோஷித ராஜபக்ஸ மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட ஆகியோருக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் முக்கிய...

வனாதே சது கைது

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான கஞ்சிபானை இம்ரான் என்பவரின் நெருங்கிய சகாவாகக் கருதப்படும் வனாதே சது என்ற அவிஷ்க...

மக்கள் வாக்கெடுப்புக்கு செல்ல அரசாங்கம் தயார்

நீதித்துறை சீர்திருத்தங்கள் தொடர்பாக தேவையேற்பட்டால் மக்கள் வாக்கெடுப்பை நடத்துவதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இந்த...