பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் வணக்கத்திற்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரர் தற்போது காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2019ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய ஜனாதிபதி மன்னிப்பை உயர் நீதிமன்றம் இரத்து செய்ததைத் தொடர்ந்து, ஞானசார தேரர் இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆறு வருட சிறைத்தண்டனையில் எஞ்சியுள்ள காலத்தை அனுபவிப்பதற்காக அவரை மீண்டும் சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு, சிறைச்சாலை அதிகாரிகள் ராஜகிரிய–நாவல பகுதியில் உள்ள அவர் தங்கியிருந்த விகாரைக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், தற்போது ஞானசார தேரர் தங்கியிருக்கும் இடம் குறித்து தங்களுக்கு தெரியாது என அங்கு தங்கியுள்ள ஏனைய தேரர்கள் சிறைச்சாலை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.




