web log free
March 28, 2024

பெண்களின் மன அழுத்தம் குறைய இதோ சிறந்த வழி!

குடும்பம் என்பது கணவன் மனைவி குழந்தைகள் இவர்கள் அனைவரையும் சேர்த்துதான் சொல்லப்படுகிறது. இதில் கணவன் இல்லாத ஒரு குடும்பத்தை கூட பெண் தனியாக நின்று சமாளித்து, அவர்களை வளர்த்து நல்ல நிலைமைக்கு கொண்டு வந்து விடுவார். ஆனால் ஒரு பெண் இல்லாமல் ஆண் மட்டும் குடும்பம் நடத்துவதது மிகவும் சிரமமாகும்.

ஆண்களால் பெண்களின் அளவிற்கு குடும்பத்தையும், குழந்தையையும் பராமரிக்க முடிவதில்லை. எனவே ஒரு வீட்டின் முக்கிய தூணாக கருதப்படுபவர் பெண் என்பவள். எனவே இந்தப் பெண்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருந்தால் மட்டுமே அந்த குடும்பமும், குடும்பத்தில் உள்ளவர்களும் மகிழ்ச்சியாக இருக்க முடியும். ஆனால் பெண்கள் சிறு விஷயங்களுக்கு கூட எளிதில் கபம் கொள்ள ஆரம்பித்து விடுவார்கள்.

இவர்கள் மனமுடைந்து மனநிம்மதி இல்லாமல் இருந்தால் அந்த குடும்பத்தில் உள்ள மகிழ்ச்சி அனைத்துமே குறைந்து விடும். எனவே பெண்களின் மன அழுத்தம் குறைய இந்த எளிமையான பரிகாரத்தை மட்டும் செய்து பாருங்கள். உடனே பலன் கிடைக்கும். பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது பல பெரியவர்கள் சொல்லும் ஒரு வார்த்தை என்னவென்றால் நீ மகிழ்ச்சியாக இருந்தால் மட்டுமே உன் வயிற்றில் இருக்கும் குழந்தையையும் மகிழ்ச்சியாக இருக்கும். அது போல நீ அழுது கொண்டும், கவலைப் பட்டுக் கொண்டும் இருந்தால் உனது குழந்தையும் அவ்வாறுதான் கஷ்டப்படும் என்று கூறுவார்கள். -
இதுபோலத்தான் ஒரு குடும்பத்தில் மகிழ்ச்சியும் துன்பமும் ஒரு பெண் எப்படி இருக்கிறாள் என்பதைப் பொருத்து அமைகிறது. எனவே வீட்டில் உள்ள பெண்கள் எப்போதும் சிரித்த முகத்துடன், சந்தோஷமாக இருந்தால் மட்டுமே ஐஸ்வர்யமும், அதிர்ஷ்டமும் நமது வீடு தேடி வரும். மகாலட்சுமியும் வீட்டிற்குள் நிரந்தரமாக வாசம் செய்ய அந்த வீட்டின் பெண்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். பெண்கள் சிறு குழப்பம் என்று அழை மனக் கவலைக்கு ஆளாகிவிடுவார்கள்.

அவர்கள் வேறு எந்த விஷயத்தின் மீது கவனம் செலுத்த மாட்டார்கள். எப்பொழுதும் சோகமாகவும் குழப்பமாகவே இருப்பார்கள். - Advertisement - இதுபோன்ற நேரத்தில் அவர்களை மன குழப்பத்தை தீர்த்து, உடனடியாக அதற்கு பதில் அளிக்காவிட்டால் வீட்டில் பல பிரச்சனைகள் உண்டாகும். எப்பொழுதும் கோபமாகவே இருப்பார்கள். எதிலும் கவனம் செலுத்த மாட்டார்கள்.

எனவே இதுபோன்ற நேரங்களில் வீட்டில் இருக்கும் எதிர்மறை எண்ணங்களையும், அதிர்வலைகளையும் அகற்றுவதற்கு இந்த சாம்பிராணி தூபத்தை போட வேண்டும். அதற்கு வெள்ளைப் பூண்டின் தோலை ஒரு கைப்பிடி எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு சின்ன வெங்காயத்தில் இரட்டையாக இருக்கும் வெங்காயத்தின் தோலை சிறிதளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் இவற்றுடன் 4 அல்லது 5 கிராம்பு எடுக்க வேண்டும். பிறகு சிறிதளவு சாம்பிராணியுடன் இவை அனைத்தையும் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின்னர் நெருப்பை உண்டாக்கி, அதில் இந்த அனைத்து பொருட்களையும் சேர்த்து, தூவிவிட்டு, புகை போட்டு அதனை சிறிது நேரம் நுகர்ந்து கொண்டால் போதும். பெண்களின் மன அழுத்தம் முழுவதுமாக மறைந்து மனநிம்மதி உண்டாகும்.