web log free
December 16, 2025
kumar

kumar

எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி மீதான சட்ட நடவடிக்கைகள் முடியும் வரை அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று அரசு ஆதரவு குழுக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

லஞ்ச ஒழிப்பு ஆணையத்தின் விசாரணை முடியும் வரை, குமார ஜெயக்கொடி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வது நல்லது என்று பலர் சமூக ஊடகங்களில் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

2015 ஆம் ஆண்டு உரக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றியபோது நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக வந்த ஊழல் புகார்களைத் தொடர்ந்து, லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி மீது வழக்குத் தொடர முடிவு செய்துள்ளதாக சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து இந்தக் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்ட பின்னர் அரசியலமைப்புத் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள சட்டச் சிக்கல்கள் தீர்க்கப்பட்ட பின்னர், அடுத்த ஆண்டு முதல் 6 மாதங்களுக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

கிளிநொச்சி பகுதியில் நேற்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் பிமல் ரத்நாயக்க இவ்வாறு தெரிவித்தார்.

“நாங்கள் 2025 இல் தேர்தலை நடத்தினோம். 2024 நவம்பரிலும் தேர்தலையும் நடத்தினோம். அடுத்த ஆண்டு முதல் 6 மாதங்களில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவோம் என்று நம்புகிறோம். சட்டத் தடைகள் உள்ளன.

அவற்றை அகற்ற முயற்சிக்கிறோம். அரசியலமைப்பைக் கொண்டுவருவது குறித்து எங்களிடம் கொள்கை முடிவு உள்ளது. அரசியலமைப்பைக் கொண்டுவருவது ஒரு விரிவான செயல்முறை. அதற்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதே எங்கள் இலக்கு. மாகாண சபைத் தேர்தலை நடத்திய பிறகு அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் குறித்த விரிவான அரசியல் திட்டத்தைத் தொடங்குவோம்” என்றார்.

 

 

 

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவை எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிரிபத்கொட பகுதியில் போலி பத்திரத்தைப் பயன்படுத்தி அரசாங்க நிலத்தை விற்பனை செய்த வழக்கில் அவரை கைது செய்ய நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் தலைமறைவாகியிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர மே 07ஆம் திகதி நீதிமன்றத்தில் சரணடைந்தமை குறிப்பிடத்தக்கது.

தற்போதைய ஜனாதிபதியும் அரசாங்கமும் எதிர்க்கட்சியில் இருந்தபோது எதிர்த்த அனைத்தையும் இப்போது செய்து வருவதைக் கண்டு தான் மிகவும் மகிழ்ச்சியடைவதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே கூறுகிறார்.

“நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். செய்ய வேண்டியது நடந்து கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சியில் இருந்தபோது எதிர்த்த அனைத்தும் இப்போது சரியானவை என்பதை இந்த அரசாங்கம் உணர்ந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

சூதாட்ட விடுதிகள் இப்போது திறக்கப்படுவது சரி என்று நினைப்பதால் அல்ல. அவர்கள் கஞ்சா ஏற்றுமதியை சட்டப்பூர்வமாக்குகிறார்கள். கொழும்பை தூங்காத நகரமாக மாற்றுவது பற்றி மட்டுமே நான் பேசினேன். நான் மரைன் டிரைவ் பற்றி பேசினேன். இந்த இடங்கள் 24 மணி நேரமும் திறந்திருக்க வேண்டும். அவற்றை மூட முடியாது, சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க முடியாது.”

ஹிரு தொலைக்காட்சியில் இணைந்து டயானா கமகே இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.

அரசாங்கத்தையும் பாதுகாப்புப் படையினரையும் குறிவைத்து மேற்கொள்ளப்படும் திரிபுவாதங்கள் மற்றும் பொய்ப் பிரச்சாரங்களால் ஏமாற வேண்டாம் என்று அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ வடக்கு மற்றும் கிழக்கு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
 
முல்லைத்தீவு சிவநகரில் உள்ள 12வது சிங்க படைப்பிரிவின் முகாமுக்குள் அத்துமீறி நுழைய முயன்ற ஒருவர் உயிரிழந்த சம்பவத்தை முன்னிறுத்தி நாளை (18) ஹர்த்தால் இடம்பெறவுள்ளது.
 
இந்த விவகாரம் குறித்து மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ,
 
"இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே மூன்று இராணுவ சிப்பாய்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தின் உண்மைகளை திரிபுபடுத்தி, தவறான தகவல்களைப் பரப்புவதன் மூலம் வடக்கு மற்றும் கிழக்கு மக்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்த சில அரசியல் குழுக்கள் முயற்சிப்பதாகத் தெரிகிறது. எனவே, நாட்டு மக்கள் உண்மைகளைப் புரிந்துகொண்டு அமைதியாக நடந்து கொள்ள வேண்டும்." என்றார்.

ஹர்த்தால் நாளை காலையில் மாத்திரம்! - தமிழரசுக் கட்சி அறிவிப்பு

வடக்கு, கிழக்கில் அளவுக்கு அதிகமான இராணுவப் பிரசன்னம் மற்றும் இராணுவ அடக்குமுறைகளுக்கு எதிராக நாளை ஹர்த்தால் திட்டமிட்டபடி முன்னெடுக்கப்படும் எனவும், அது பலரின் நன்மை கருதி காலையில் மாத்திரம் நடைபெறும் எனவும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

"அரசாங்கப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இராணுவப் பேச்சாளரும் பொலிஸ் பேச்சாளரும் இருந்தனர். நாளை வடக்கு, கிழக்கில் நாம் நடத்தும் ஹர்த்தால் தொடர்பிலேயே இந்த ஊடக சந்திப்பு நடைபெற்றது.

அதில் அவர்கள் விசேடமாகக் கூறிய விடயங்களுக்கு நாம் பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளோம். அதில் அமைச்சர் கூறுகின்றார், "இது தமிழர்களுக்கு எதிரான விடயம் அல்ல. இப்படியான சம்பவம் எந்தப் பகுதியில் இடம்பெற்றாலும் நடவடிக்கை எடுக்கின்றோம். அதற்கு ஹர்த்தால் செய்ய வேண்டிய அவசியம் இல்லை" - எனச் சொல்கின்றார்.

ஆனால் வடக்கு, கிழக்கைப் போன்று நாட்டின் எப் பகுதியிலும் மக்கள் மத்தியில் இராணுவப் பிரசன்னம் கிடையாது. நாங்கள் இந்தக் ஹர்த்தால் மூலம் வெளிக்கொணர இருக்கும் முக்கிய விடயம் என்னவெனில் சாதாரண மக்களுடைய வாழ்க்கையில் இடையூறு செய்யும் விதமாகவே இந்த இராணுவ மயமாக்கல் இடம்பெறுகின்றது என்பதனை நாம் தொடர்ச்சியாகக் கடந்த 16 வருடங்கள் சொல்லி வருகின்றோம்.

அனுமதியின்றி சிலர் இராணுவ முகாமுக்குள் நுழைந்தார்கள் என்று அவர்கள் கூறுகின்றனர். அவர்களை விரட்டியடிக்க நடவடிக்கை எடுத்தபோது ஒருவர் நீரில் மூழ்கி இறந்து விட்டார் என்றும், மரண விசாரணை முடியவில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர். நீதிமன்ற நடவடிக்கை இருக்கும்போது நீரில் மூழ்கி மரணம் எனக் கூற முடியாது.

இதேதேரம் பொலிஸ் பேச்சாளரின் தகவலின்படியே ஒரு இராணுவ வீரர் இந்த ஐந்து பேரையும் தாக்கிக் காயப்படுத்தினார் என்ற காரணத்துக்காகக் கைது செய்யப்பட்டதாகவும் கூறுகின்றார். உயிரிழந்த இளைஞர் தாக்கி மரணமடைந்தாரா, தாக்கியதால் குளத்தில் பாய்ந்தாரா போன்ற விடயங்கள் எல்லாம் வெளிவர வேண்டும். இதேநேரம் ஏனைய இரு இராணுவத்தினரும் மேற்படி ஐவரையும் அழைத்து வந்தவர்கள் என்ற ரீதியில் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்று பொலிஸ் பேச்சாளர் சொல்கின்றார்.

அப்படியானால் இராணுவ வீர்ர்களே அவர்களை உள்ளே அழைத்து வந்திருந்தால் இது எப்படி அனுமதியற்ற நுழைவு எனச் சொல்ல முடியும் என ஊடகவியலாளர்களும் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு உரிய பதில் கொடுக்கப்படவில்லை.

அமைச்சர் நாம் வேறுபாடு காட்டுவதில்லை என்கின்றார். ஆனால், நான் மீண்டும் கூறுகின்றேன். இது வடக்கு, கிழக்கில் மட்டும் காணும் விடயம். இதேநேரம் அமைச்சர் இன்னும் ஒன்றைக் கூறுகின்றார் அவர்கள் சேர்ந்து வாழப் பழகிவிட்டனர், அவர்களிடத்தில் நல்ல உறவு உள்ளது என்கின்றார். இது இராணுவமயமாக்கலின் சிறிய உதாரணம். இராணுவம் வாழும் சூழலை இராணுவத்தை அண்டி வாழும் சூழலை ஏற்படுத்துகின்றனர் என்பதனைச் சுட்டிக்காட்டி எதிர்ப்பை வெளிப்படுத்தவே இந்தக் ஹர்த்தால் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.

எவருக்கும் தடங்கல் ஏற்படுத்தவோ, அவர்களைச் சிரமப்படுத்தவோ இந்தக் ஹர்த்தாலைச் செய்யவில்லை. இது தொடர்பான அரச ஊடக சந்திப்பில் இராணுவப் பேச்சாளர் ஒன்றையும், பொலிஸ் பேச்சாளர் ஒன்றையும் கூறுகின்றனர். அமைச்சர் வேறு ஒன்றைக் கூறுகின்றார் இதை வெளிப்படுத்தியே ஹர்த்தால் இடம்பெறுகின்றது என்பதனை வடக்கு, கிழக்கு மக்களுக்கும் விசேடமாக வர்த்தக உரிமையாளர்களுக்கும் எடுத்துச் சொல்ல விரும்புகின்றோம்.

இதேநேரம் பலரின் கோரிக்கையின் பெயரில் ஹர்த்தாலை முழுமையாகப் பேணும் அதேநேரம், இதைப் பலரின் நன்மை கருதி காலையுடன் மட்டும் முடித்துகொள்ளலாம். ஏனெனில் யாழ்ப்பாணத்தில் நல்லூர் கந்தன் ஆலய உற்சவம் மாலையில் இடம்பெறுவதும் கருத்தில்கொள்ளப்பட்டு இந்த முடிவு எட்டப்படுகின்றது." - என்றார்.

ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எந்தவொரு பிரதிநிதியோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினரோ தொலைக்காட்சி, வானொலி அல்லது சமூக ஊடகங்களில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றால், அவர்கள் பொது செயலாளர் தலதா அதுகோரலவின் ஒப்புதலுடன் பங்கேற்க வேண்டும் என்று அவர் ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளார்.

அதற்கு வெளியே யாராவது ஈடுபட்டிருந்தால், ஐக்கிய தேசியக் கட்சி இந்த விஷயத்தில் பொறுப்பேற்காது என்று அவர் மேலும் வலியுறுத்துகிறார்.

இலங்கையின் முதற்தர தன்னியக்க நிறப்பூச்சு கம்பெனியான,ஏசியன் பெயிண்ட்ஸ் கோஷ்வேயானது, மோட்டார் பந்தய நாட்காட்டியினை ஒகஸ்ட் மாதம் முதல் நவம்பர்  மாதம் வரையினில் பற்றி எரிய வைக்கும் நான்கு தேசிய பந்தய நிகழ்வுத் தொடரான - ஏசியன் பெயிண்ட்ஸ் கோஷ்வே SLADAரேசிங் செம்பியன்ஷிப் இற்கான பிரதம அனுசரணையாளர் எனும் தன்னுடைய வகிபாகத்தினை பெருமையுடன் அறிவிக்கின்றது.

தேசிய நெருக்கடிகள், பெருந்தொற்று மற்றும் பொருளாதார சவால்கள் என்பவற்றினால் ஏற்பட்ட பல வருட இடையூறுகளிற்குப் பின்னர், இவ்வருடத்தின் செம்பியன்ஷிப் போட்டியானது விளையாட்டிற்கான முக்கிய புத்துயிர்ப்பாக அமையவுள்ளது. இலங்கை மோட்டார்பந்தய சாரதிகள் சங்கத்தினால் (SLADA) இலங்கை இராணுவம் மற்றும் இலங்கை விமானப் படையுடன் இணைந்து ஒழுங்கமைக்கப்பட்டுள்ள இத்;தொடரானது கிராவல் மற்றும் டார்மெக் ஓடுபாதைகளில் தேசத்தின் தலைசிறந்த சாரதிகள் போட்டியிடுவதனை காணவுள்ளது.

செம்பியன்ஷிப் நாட்காட்டியின் அம்சங்களானவை:

16-17 ஒகஸ்ட் - ரோதர்ஹம் கட்டுகுருந்த சுற்றுப்போட்டி 1

30-31 ஒகஸ்ட் கஜபா/ SLADA சுபர்க்ரோஸ் - சாலியபுர

4-5 ஒக்டோபர் - கன்னர்/ SLADA சுபர்க்ரோஸ் - மின்னேரியா

1-2 நவம்பர் - ரோதர்ஹம் கட்டுகுருந்த சுற்றுப்போட்டி 2

இலங்கையில் பெரிதும் கொண்டாடப்படும் வெற்றியாளர்களில் ஒருவரும் ஏசியன் பெயிண்ட்ஸ் கோஷ்வேயின் தசாப்த காலத்திற்கும் மேலான வர்த்தகநாம முகவருமான, அஷான் சில்வா அவர்கள், இப்போட்டித்தொடரினை “இந்நாட்டின் மோட்;டார் பந்தயத்திற்கான புதுசக்தி” என்றும் கஜபா மற்றும் கன்னர் சுபர்க்ரோஸ் போன்ற தனித்துவமான போட்டிகளை பார்த்து வளர்ந்த போட்டியாளர்களின் கனவு நனவாகியுள்ளதுஎன்றும் கூறி, அறிமுக நிகழ்வினில் தன்னுடைய மகிழ்ச்சியினை வெளிப்படுத்தியிருந்தார்.

பிரதம அனுசரணையாளர் சார்பில் உரையாற்றுகையில்,ஏசியன் பெயிண்ட்ஸ் கோஷ்வேயின் இலங்கைக்கான தலைவர், திரு. வைத்தியலிங்கம் கிரிதரன் அவர்கள்,இந்நாட்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பந்தயப் போட்டித் தொடரை மீளக்கொணர்வதற்காக SLADA உடன் பங்காளராவதில் நாம் மகிழ்ச்சியடைகின்றோம். இலங்கையின் மோட்டார் பந்தயமானது வெறுமனே ஒரு போட்டியாக மாத்திரமின்றி, புத்தாக்கம், திறன் மற்றும் சமுதாய உணர்வினை முன்னோக்கி கொண்டுசெல்லும் ஒரு மேடையாகவும் காணப்படுகின்றது. தன்னியக்க நிறப்பூச்சுக்களின் சந்தையில் முதல்வனாக காணப்படும், நாம் விளையாட்டு மற்றும் பரந்த வாகன உற்பத்தி கைத்தொழிற்றுறை என இரண்டினையும் வலுப்படுத்தும் துவக்கங்களுக்கு ஆதரவளிப்பதனை எமது பொறுப்பாக காண்கிறோம்” எனக்கூறி உள்ளுர் மோட்டார் பந்தயத்தினை தரமுயர்த்துவதிலான வர்த்தகநாமத்தின் அர்ப்பணிப்பினை மீளவலியுறுத்தினார்.

மோட்டார் பந்தயத்திலான ஏசியன் பெயிண்ட்ஸ் கோஷ்வேயின் ஈடுபாடானது இலங்கையின் வாகன உற்பத்தி துறையினை முன்னேற்றுவதற்கான பரந்த, நீண்ட கால மூலோபாயத்தின் ஒரு பகுதியாக காணப்படுகிறது. SLADA ரேசிங் மற்றும் வளவை சுபர்க்ரோஸ் போன்ற மிகமுக்கிய நிகழ்வுகளுக்கு அனுசரணை வழங்குவதற்கும் மேலாக, இத்துறைசார் அடுத்த தலைமுறை தொழில்வல்லுநர்களை வளர்த்தெடுப்பதற்காக,தொழிற்பயிற்சி அதிகாரசபையுடனான (VTA) பங்குடைமை ஊடாக திறன்களை விருத்திசெய்வதிலும் இவ்வர்த்தகநாமம் முதலிட்டுள்ளது.

பார்வையாளர்கள், போட்டியாளர்கள் மற்றும் ஊடகங்கள் போன்றவற்றின் உற்சாகமான ஆதரவுடன், 21 டார்மெக் மற்றும் 23 கிராவல் போட்டிகளுடன் திட்டமிடப்பட்டுள்ள இப்பருவத் தொடரான, SLADA ரேசிங் 2025 ஆனது வேகம், விவேகம் மற்றும் திறன்களின் உயர்வலு கொண்டாட்டமாக காணப்படுமென்பது உறுதியாகியுள்ளது.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த (57 வயது) காலமானார்.  உடல் நலக் குறைவினால் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்று காலமானார்.

2025 ஓகஸ்ட் மாதத்திற்கான அஸ்வெசும பயனாளிகளின் உதவித்தொகைஇன்று (15) அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சு அறிவித்துள்ளது. 

மொத்தம் 1,421,745 பயனாளி குடும்பங்களின் கணக்குகளில் 11,275,973,750 ரூபாய் வரவு வைக்கப்படவுள்ளது. 

அதன்படி, பயனாளிகள் தங்களுக்குச் சேர வேண்டிய உதவித்தொகையை இன்று முதல் தங்களது அஸ்வெசும பயனாளி வங்கிக் கணக்குகளில் இருந்து பெற்றுக் கொள்ளலாம் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd