web log free
March 03, 2026

இலங்கை, பாகிஸ்தான் போட்டியின் நாணயசுழற்சி ஒத்திவைப்பு

மீண்டும் மழை பெய்து வருவதால் போட்டியின் நாணயசுழற்சியை ஒத்திவைக்க நடுவர்கள் தீர்மானித்துள்ளனர்.

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறவுள்ள இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியின் நாணய சுழற்சியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தை சுற்றி மழையுடன் கூடிய காலநிலை காரணமாக நாணய சுழற்சியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்த போட்டி இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

எவ்வாறாயினும், இதுவரை மைதானம் முழுமையாக மூடப்பட்டுள்ளதாக மைதானத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd