web log free
November 02, 2025

பங்களாதேஸ் அணி அதிரடி அறிவிப்பு

பங்களாதேஸ் கிரிக்கெட்டினை முன்னேற்றுவது தொடர்பான தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை  சர்வதேச போட்டிகளை புறக்கணிப்பது என பங்களாதேஸ் அணி வீரர்கள் தீர்மானித்துள்ளனர்.

பங்களாதேஸ் அணி வீரர்களின் இந்த கோரிக்கை காரணமாக இந்தியாவிற்கான அடுத்த மாத சுற்றுப்பயணம் கேள்விக்குறியாகியுள்ளது. 

பங்காளதேஸ் அணியின் சிரேஸ்ட வீரர்கள்  மாநாட்டில் இதனை அறிவித்துள்ளார்.

அனைத்து முதல்தர மற்றும் தேசிய போட்டிகளை புறக்கணிக்க தீர்மானித்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளார்.

சர்வதேச போட்டிகளிற்கான தேசிய அணியின் பயிற்சிகளும் கைவிடப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். 

கடந்த சில வாரங்களிற்கு முன்னர் நாங்கள் சமர்ப்பித்த 11அம்சக்கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டவுடன் வழமையான நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd