web log free
May 20, 2024
kumar

kumar

அடுத்த தேர்தலுக்கு முன், புதிய கூட்டணி மற்றும் ஏனைய கட்சிகளுடன் வரவிருக்கும் பரந்த கூட்டணியின் பணிகள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, ஜூலை மாத நடு வாரத்திற்குள் பணிகளை முடிக்க நேற்று கூடிய கூட்டணியின் நிர்வாகிகள் குழு முடிவு செய்தது.

இந்த கூட்டணியில் சேர்வது குறித்து ஏற்கனவே 15 எஸ்ஜேபி உறுப்பினர்கள் ஆலோசித்துள்ளதாகவும் கட்சியின் மூத்த செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

எதிர்வரும் 8ஆம் திகதி ஹம்பாந்தோட்டையில் நடைபெறவுள்ள புதிய கூட்டணியின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ள ஏறக்குறைய 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளதாக பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

"ஊபா" சட்டத்தின் கீழ் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீட்டித்துள்ளது மத்திய அரசு.

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் தாயக நிலப்பரப்பு. தமிழர் தாயக நிலப்பரப்பை ஒருங்கிணைத்து 'தமிழீழ' தனி நாட்டை இலங்கையில் உருவாக்க ஆயுதப் போராட்டம் நடத்திய அமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம்.

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் தாயக நிலப்பரப்பு. தமிழர் தாயக நிலப்பரப்பை ஒருங்கிணைத்து 'தமிழீழ' தனி நாட்டை இலங்கையில் உருவாக்க ஆயுதப் போராட்டம் நடத்திய அமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம்.

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் தாயக நிலப்பரப்பு. தமிழர் தாயக நிலப்பரப்பை ஒருங்கிணைத்து 'தமிழீழ' தனி நாட்டை இலங்கையில் உருவாக்க ஆயுதப் போராட்டம் நடத்திய அமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு 1980களில் இந்திய அரசு ஆதரவளித்தது. அதே நேரத்தில் 1987-ம் ஆண்டு இந்தியா- இலங்கை இடையேயான தமிழர் அரசியல் பிரச்சனை தொடர்பான ஒப்பந்தம் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தியது. இதனால் இலங்கையில் அமைதிப் பணிக்கு சென்ற இந்திய ராணுவத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே யுத்தம் வெடித்தது.

இதனைத் தொடர்ந்து 1991-ம் ஆண்டு தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். ராஜீவ் காந்தி படுகொலைக்கு காரணம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் என்பது குற்றச்சாட்டு. மேலும் இந்தியாவில் உள்ள தமிழ்நாடு மாநிலத்தையும் இலங்கையில் உள்ள தமிழர் தாயக நிலப்பரப்பான தமிழீழம் என்ற பகுதியையும் இணைத்து தமிழர்களுக்கான தனிநாடு ' அகன்ற தனித் தமிழ்நாடு" உருவாக்க விடுதலைப் புலிகள் சதி செய்தனர்; இதற்கான ஆயுத குழுக்களை உருவாக்கினர் என்பதும் மத்திய அரசின் குற்றச்சாட்டு. இதனால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் 1991-ம் ஆண்டு முதல் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நீட்டிக்கப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை ஆணையம் விசாரணை ஒன்றை நடத்தி விடுதலைப் புலிகள் மீதான தடையை நீட்டித்தும் வருகிறது. 2009-ம் ஆண்டு இலங்கை இறுதி யுத்தத்தின் போது விடுதலைப் புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டது. ஆனாலும் இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது.

இதனடிப்படையில் கடந்த 2019-ம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை நீட்டிக்கப்பட்டது. அப்போது மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், சட்டத்திற்கு எதிரான நடவடிக்கைகளை தடுக்கும் சட்டம் 1967 (1967-ன் 37) பிரிவு-3-ன் கீழ், (1) மற்றும் (3) துணைப்பிரிவுகளின் அடிப்படையில் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் (எல்.டி.டி.ஈ) இயக்கத்தின் மீதான தடையை மத்திய அரசு மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீடித்துள்ளது.

அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவின் இறையாண்மைக்கு தீங்கு விளைவிக்கும் வகையில், வன்முறை சார்ந்த நடவடிக்கைகளில் எல்.டி.டி.ஈ தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும், இந்திய குடிமக்களுக்கு பெரும் தீங்கு விளைவிக்கும் வகையில் தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான நிலையை கடைபிடிப்பதாகவுதற்போது மேலும் 5 ஆண்டுகளுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை இன்று முதல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மத்திய அரசின் அறிக்கையில், வெளிநாடுகளில் வாழும் விடுதலைப் புலிகள் இயக்க ஆதரவாளர்கள் இந்தியாவுக்கு எதிராக தொடர் பிரசாரம் செய்வதாகவும் மத்திய அரசு- இந்திய அரசியல் சாசனத்துக்கு எதிரான வெறுப்புணர்வை அதிகரிக்க செய்வதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.ம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பாராளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலுக்கு செல்ல பொஹொட்டுவ எம்.பி.க்கள் குழுவொன்று தயாராகி வருவதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என பதுளை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசாங்க உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

இது குறித்து சமூக வலைதளங்கள் மூலம் தேவையற்ற பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

போலியான செய்திகளால் பொஹொட்டுவ கட்சி உறுப்பினர்கள் கலக்கமடைந்துள்ளதாகவும், பாராளுமன்றத்தை கலைக்க ஜனாதிபதி செயற்படமாட்டார் என்பதில் உறுதியாக உள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.

கொரோனா தொற்று காரணமாக 2023 ஆம் ஆண்டளவில் இணையத்தைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாட்டின் சனத்தொகையில் 66% ஆக அதிகரித்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளியியல் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.

பல நாடுகள் இது குறித்து முறையான ஆய்வு நடத்தி, இணையத்திற்கு அடிமையாகும் குழந்தைகளை காப்பாற்ற பல்வேறு வழிமுறைகளை கையாண்டு வருவதாக கூறியுள்ளனர்.

ஆனால் இலங்கை இதுவரையில் அவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளார். 

இலங்கையின் சனத்தொகையுடன் ஒப்பிடுகையில் தொலைபேசி இணைப்புகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபே ஜன பல கட்சியின் தலைவர் சமன் பிரசன்ன பெரேரா உட்பட ஐந்து பேரை சுட்டுக் கொன்ற சம்பவத்தில் தொடர்புடையவர் என நம்பப்படும் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களில் ஒருவராக கருதப்படும் டபுள் கேப் சூட்டி என அழைக்கப்படும் நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் இந்தியாவிற்கு தப்பிச் சென்ற போது கைது செய்யப்பட்டுள்ளார். 

இந்தியாவில் கைது செய்யப்பட்ட மூவரும் கொஸ்கொட சுஜீயின் சீடர்கள் என்றும், அவர் டுபாயில் இருந்து ஐந்து பேரின் கொலைக்கு வழிவகுத்தவர் என்றும் இந்திய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

டபுள் கேப் சூட்டி கொஸ்கொட சுஜியின் துப்பாக்கி சுடும் வீரர் என்றும் கூறப்படுகிறது.

இந்த மூவரின் புகைப்படங்களுடன் இந்திய நாளிதழ் ஒன்றில் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்று (13) கொழும்பு தாமரை கோபுரத்தில் இருந்து குதித்த வெளிநாட்டு பிரஜை காயமடைந்து தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாமரைக் கோபுரத்தில் இருந்து குதித்த குறித்த வெளிநாட்டு பிரஜையின் பராசூட் திறக்காததால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

நாட்டின் சில பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக ஐந்து மாவட்டங்களில் உள்ள 13 பிராந்திய செயலக பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பதுளை மாவட்டத்தில் ஹல்துமுல்ல மற்றும் ஹப்புத்தளை, கண்டி மாவட்டத்தில் யட்டிநுவர மற்றும் உடுநுவர, மாவனெல்ல, தெஹியோவிட்ட, கலிகமுவ, வரகாபொல மற்றும் கேகாலை மாவட்டத்தில் கேகாலை, குருநாகல் மாவட்டத்தில் மாவத்தகம, இரத்தினபுரி, இம்புல்பே, இரத்தினபுரி மற்றும் பலாங்கொடை ஆகிய பிரதேசங்களுக்கு முதல் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வழங்கப்பட்டுள்ளது.

இன்று (13) பிற்பகல் 3.00 மணி வரை அமுலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

15 வயதுடைய பாடசாலை மாணவியை வெறிச்சோடிய பகுதிக்கு அழைத்துச் சென்று காரில் பாலியல் வன்கொடுமை செய்த 32 வயதுடைய பாடசாலை மாணவர் பேருந்தின் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக குளியாப்பிட்டிய  பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சாரதி குளியாபிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும், அவர் மாணவர் பேருந்தின் உரிமையாளர் எனவும் அப்பகுதியின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர்  தெரிவித்தார்.

அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இம்மாணவி பாடசாலைக்கு பேருந்தில் வழமையாகச் செல்வதாகவும் சந்தேகத்தின் பேரில் கைதான டசாரதி இச்சிறு மாணவியை ஏமாற்றி அவளுடன் காதல் உறவைப் பேணி வந்ததாகவும் பொலிஸ் வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது.

அரசுக்கு சொந்தமான சில சொத்துக்கள் மற்றும் வர்த்தகங்களை விற்பனை செய்வதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளால், தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்ச அறிக்கையொன்றில் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையானது நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களின் செலவீனங்களைக் குறைத்தல் மற்றும் அது தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் விதித்துள்ள நிபந்தனைகளை பூர்த்தி செய்வதன் அடிப்படையில் அமைந்துள்ளது எனவும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் எஞ்சிய காலப்பகுதியில் நாட்டை ஆளுவதற்காக ஏற்படுத்தப்பட்ட இடைக்கால ஏற்பாடாகும் என மஹிந்த ராஜபக்ஷ நினைவுறுத்தியுள்ளார்.

இவ்வாறான நிலையில் அரச சொத்துக்களை அவசர அவசரமாக விற்பதன் மூலம் நாட்டுக்கு உற்பத்தி பலன் கிடைக்காது என்பதை தனியார்மயத்திற்கு ஆதரவான தரப்பினரும் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதிக வெப்பம் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நாட்டின் சராசரி வெப்பநிலை 27 முதல் 29 செல்சியஸ் பாகையாக காணப்படுகின்ற போதிலும் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடந்த சில நாட்களாக 39 பாகை செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

08 வருடங்களின் பின்னர் நாட்டில் பதிவான அதிகூடிய வெப்பநிலை இதுவாகும் என பேராதனைப் பல்கலைக்கழக புவியியல் துறைத் தலைவர் திலக் விஜயதுங்க பண்டார கூறுகிறார். 

Page 2 of 432