web log free
May 20, 2024
kumar

kumar

பல கொலைச் சம்பவங்களில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவரான "மன்னா ரமேஷ்" என்றழைக்கப்படும் அதிகாரம் முத்யன்சேலாகே ரமேஷ் பிரஜானக இன்று (07) அதிகாலை துபாயில் இருந்து குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் விசேட அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

32 வயதான மன்னா ரமேஷ் அவிசாவளையை வசிப்பிடமாகக் கொண்டவர்.

சில மாதங்களுக்கு முன்பு துபாயில் பாதுகாப்பு அதிகாரிகள் குழுவால் கைது செய்யப்பட்டார்.

மன்னா ரமேஷ் இன்று (07) அதிகாலை 04.43 மணியளவில் டுபாயில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-226 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மேலதிகமாக பொலிஸ் விஷேட அதிரடிப்படையின் அதிகளவான அதிகாரிகள் அவருக்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட மன்னா ரமேஷ், விமான நிலைய குற்றப் புலனாய்வு திணைக்களப் பிரிவுக்கு அழைக்கப்பட்டு, சுமார் 04 மணித்தியாலங்கள் வாக்குமூலத்தைப் பதிவு செய்த பின்னர், மிரிஹான, கொழும்பு தென்மேற்கு மாகாண குற்றப் புலனாய்வுத் திணைக்களத் தலைமையகத்திற்கு காலை 08.40 மணியளவில் கடுமையான நிபந்தனைகளுடன் அழைத்துச் செல்லப்பட்டார். 

எதிர்வரும் அரசியல் விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்து அமைப்பாளர்களும் இன்று கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

அக்கட்சியின் ஸ்தாபகரான முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ இது தொடர்பான அழைப்பை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி இன்று காலை 10.45 மணியளவில் நெலும் மாவத்தையில் உள்ள கட்சியின் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர். 

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கும் இடையில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்படவுள்ளது.

மஹரகமவில் உள்ள வடிகால் ஒன்றில் கடவுச்சீட்டுகள் அடங்கிய பை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விசாரணையின் போது, அந்த பையில் மஹரகமவில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் இருந்து பெறப்பட்ட 180 வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் இருப்பது தெரியவந்துள்ளது.

குறித்த நபர் சுமார் 26 கோடி ரூபாவை மோசடி செய்துவிட்டு தலைமறைவாகியுள்ளார்.

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்திலும் அதிகபட்ச வெப்பநிலை மே இரண்டாவது வாரம் வரை 36 முதல் 37 பாகை செல்சியஸ் வரை இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்தின் சில இடங்களிலும் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்துக்கு உயர்வடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அத்துடன் மேல், சபரகமுவ மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களிலும் வெப்பநிலையானது அதிகரிக்கக்கூடும் எனவும்

வெளிநாட்டினருக்கு அறவிடப்படும் வீசா கட்டண அதிகரிப்பினால் ஏற்பட்டுள்ள பாதகங்கள் குறித்து தாம் அண்மையில் பாராளுமன்றத்தில் தெரிவித்ததாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அரசியல் ஆதாயத்திற்காக பக்கம் மாறிய ஒரு குழு தனது பிரேரணையை விமர்சித்ததாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

அப்போது தான் கூறியதை செவிமடுத்திருந்தால் அண்மையில் விமான நிலையத்தில் இடம்பெற்ற சம்பவத்தை தவிர்த்திருக்கலாம் என சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

தொம்பே தங்காலை தர்மராஜ வித்தியாலயத்திற்கு சக்வல வகுப்பறையை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

தமிழக தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமானை மரியாதை நிமித்தமாக கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார்.

இச்சந்திப்பின் போது, இலங்கையில் பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டிருந்த தருணத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசில் நிதி அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில், இலங்கை மக்களுக்கு தமிழக அரசு வழங்கிய உதவிகளுக்கும் ஒத்துழைப்புகளையும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் நினைவு கூர்ந்தார். 

அத்துடன், தமிழகத்துக்கும் இலங்கைக்கும் இடையிலான தொடர்புகளை வலுவாக பேணவும் இருவரும் கலந்துரையாடினர்.

கஞ்சாவை சட்டப்பூர்வமாக்குவதற்கு முன்னுரிமை வழங்குமாறு கோரிக்கை விடுப்பதாக ஜனசேத பெரமுனவின் தலைவர் பத்தரமுல்லை செளரதன தேரர் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் அரசாங்கத்திடம் முறையான கோரிக்கையை முன்வைக்க நம்புகின்றேன் என்றார்.

கஞ்சா சோதனைகள் தேவையற்றது என்று கூறிய அவர், இலங்கையில் மதுபானங்கள் இல்லாத காலகட்டத்தில் சாமானியர்கள் கூட கஞ்சாவை பயன்படுத்தியதாக கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், கஞ்சா பயன்பாடு சிறப்பான உத்வேகத்தையும் வலிமையையும் தருவதுடன் இனத்தின் வளர்ச்சியும் ஏற்படுகிறது என்றார். 

பெருந்தோட்டத் தொழிலாளர் சம்பள அதிகரிப்பு விவகாரத்தில் அரசாங்கத்தின் தீர்மானங்களை பெருந்தோட்டக் கம்பனிகள் மீறி நடக்க முடியாது என்று இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கச் செயலாளரும் பெருந்தோட்ட விவகாரங்கள் தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார். பிரச்சினையை பேசித் தீர்மானிப்பதாக கம்பனிகள் கூறுகின்ற போதிலும் அவ்வாறு அந்தக் கம்பனிகள் செயற்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.டொலர் பெறுமதி அதிகரிப்பால் பெருமளவில் இலாபமீட்டிய பெருந்தோட்ட கம்பனிகள் தங்களது ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பை வழங்காமல் இழுத்தடிப்புச் செய்வைதையிட்டு கம்பனிகள், வெட்கித் தலைகுனிய வேண்டுமென அவர் மேலும் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

பெண்கள் ஆண்களை விட நீண்ட காலம் வாழ்கிறார்கள், ஆனால் பல ஆண்டுகளாக மோசமான உடல்நலம் பாதிக்கப்படுகின்றனர் என உலகளாவிய பாலின இடைவெளியின் பகுப்பாய்வு வெளிப்படுத்தியுள்ளது.

அதற்கேற்ப, பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் அவசரமாக எடுக்கப்பட வேண்டும் என்று தொடர்புடைய நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

உலகளவில், பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையே ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன, மேலும் கடந்த மூன்று தசாப்தங்களாக சுகாதார இடைவெளிகளை மூடுவதில் மட்டுப்படுத்தப்பட்ட முன்னேற்றம் செய்யப்பட்டுள்ளதாக உலகின் 20 முன்னணி நோய்களின் தாக்கத்தை ஆராயும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

கண்டுபிடிப்புகள் லான்செட் பப்ளிக் ஹெல்த் ஜர்னலில் வெளியிடப்பட்டுள்ளன.

இதழின் படி, குறிப்பாக பெண்களைப் பாதிக்கும் தசைப் பிரச்சனைகள், மனநலப் பிரச்சனைகள், உடல்நலப் பிரச்சனைகள் மற்றும் தலைவலி போன்ற நோய்கள் மற்றும் கோளாறுகளை ஏற்படுத்தும் அபாயமற்ற நிலைகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

அதே நேரத்தில், இருதய நோய், சுவாச மற்றும் கல்லீரல் நோய், கோவிட்-19 மற்றும் சாலை விபத்துகள் போன்ற மரணத்தை ஏற்படுத்தும் நிலைமைகள் ஆண்களை விகிதாசாரமாக பாதிக்கின்றன.

பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையிலான உடல்நல வேறுபாடுகள் வயதுக்கு ஏற்ப வளர்ந்து வருகின்றன, மேலும் பெண்கள் ஆண்களை விட நீண்ட காலம் வாழ்கின்றனர், இதன் விளைவாக அவர்களின் வாழ்நாள் முழுவதும் அதிக நோய்கள் மற்றும் இயலாமை விகிதங்கள் ஏற்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் உள்ள சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவனத்தில் (IHME) ஆய்வின் மூத்த ஆசிரியரான டாக்டர் லூயிசா சோரியோ ஃப்ளோர், கடந்த 30 ஆண்டுகளில் உலகளாவிய ஆரோக்கிய முன்னேற்றம் சீரற்றதாக இருப்பதை அறிக்கை தெளிவாகக் காட்டுகிறது.

பெண்களுக்கு நீண்ட ஆயுட்காலம் உள்ளது, ஆனால் மோசமான ஆரோக்கியத்துடன் ஆண்டுகள் வாழ்கின்றன, நோய் மற்றும் இயலாமைக்கு வழிவகுக்கும் நிலைமைகளின் சுமையைக் குறைப்பதில் மட்டுப்படுத்தப்பட்ட முன்னேற்றத்துடன், உடல் மற்றும் மன செயல்பாட்டைக் கட்டுப்படுத்தும் அபாயகரமான விளைவுகளுக்கு அதிக கவனம் செலுத்த வேண்டிய அவசரத் தேவையை வலியுறுத்துகிறது.

இதேபோல், ஆண்கள் தொடர்ந்து அதிக மற்றும் வளர்ந்து வரும் நோய்களை அபாயகரமான விளைவுகளுடன் அனுபவிக்கிறார்கள் என்று தெரியவந்துள்ளது. 

கொத்து, ப்ரைட் ரைஸ் மற்றும் சோற்றுப்பொதி ஆகியவற்றின் விலைகள் 20 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன், சிற்றுண்டிகளின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த சங்கத்தின் தலைவர் ஹர்சன ருக்ஷான் தெரிவித்துள்ளார்

எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ளமையினை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், தேநீர் மற்றும் பால் தேநீர் என்பவற்றின் விலைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவில்லை எனவும் உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Page 5 of 432