அடுத்த வாரம் முதல் குடிநீர் கட்டணங்களில் நிலுவையில் உள்ள தொகைகளை வசூலிக்கும் சிறப்பு நடவடிக்கையை முன்னெடுக்க தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தீர்மானித்துள்ளது.
அதன்படி, 2026 ஜூலை 13 முதல் ஜூலை 19 வரை “குடிநீர் இணைப்பு துண்டிப்பு வாரம்” என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விசேட நடவடிக்கை முக்கியமாக சில பகுதிகளை மையமாகக் கொண்டு மேற்கொள்ளப்படவுள்ளது.
குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படவுள்ள பகுதிகள்:
- கொழும்பு 01 முதல் கொழும்பு 15 வரை உள்ள அனைத்து பகுதிகளும்
- மகரகம பிராந்தியம்
- கோட்டை (ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை) பிராந்தியம்
எனவே, தங்களின் குடிநீர் சேவை இடையூறு இன்றி தொடர வேண்டுமெனில், 2026 ஜூலை 13ஆம் திகதிக்கு முன் நிலுவையில் உள்ள அனைத்து கட்டணங்களையும் செலுத்தி முடிக்குமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை நுகர்வோரிடம் அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், குறிப்பிட்ட திகதிக்கு முன்பாக நிலுவைத் தொகையை செலுத்துவதன் மூலம் தேவையற்ற சிரமங்களைத் தவிர்க்க முடியும் என்றும் சபை தெரிவித்துள்ளது.




