Homeஉள்நாட்டு செய்திஇலங்கையில் மீண்டும் எரிபொருள் விலை உயரும் அச்சம்!

இலங்கையில் மீண்டும் எரிபொருள் விலை உயரும் அச்சம்!

spot_img

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றம் காரணமாக, நாட்டில் மீண்டும் எரிபொருள் விலை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.

சர்வதேச ஊடகங்களின் தகவலின்படி, அமெரிக்கா–ஈரான் மோதலைத் தொடர்ந்து ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகத்தில் சிக்கல் ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது.

இந்த நிலைமையால், அண்மையில் இலங்கையில் அறிவிக்கப்பட்ட எரிபொருள் விலைக் குறைப்பு நீண்ட காலம் நீடிக்குமா என்பது குறித்து சந்தேகம் எழுந்துள்ளது.

கடந்த ஜூன் 29ஆம் திகதி நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த விலைத் திருத்தத்தின் கீழ், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) 92 ஒக்டேன் பெட்ரோலின் விலையை லிட்டருக்கு ரூ.20 குறைத்து ரூ.414 ஆகவும், ஆட்டோ டீசலின் விலையை லிட்டருக்கு ரூ.25 குறைத்து ரூ.382 ஆகவும் நிர்ணயித்தது.

எனினும், தற்போதைய சர்வதேச சூழ்நிலை காரணமாக கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படுமானால், எதிர்காலத்தில் இலங்கையிலும் எரிபொருள் விலை மீண்டும் உயரக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இதனிடையே, வருடாந்திர பேருந்து கட்டண திருத்தத்தின் அடிப்படையில் புதிய பேருந்து கட்டணங்கள் கடந்த 6ஆம் திகதி முதல் அமலுக்கு வந்துள்ளன.

spot_img

Latest articles

நேபாளத்தில் பதறவைக்கும் களம்! உயிரிழப்பு 160 ஆக உயர்வு

படத்தில் நீங்கள் பார்க்கும் அழகான பக்லிங் (Bhakling) கிராமம், திபெத் எல்லைக்கு அருகே நேபாளத்தின் 'ரசுவா' (Rasuwa) மாவட்டத்தில்...

இலங்கையின் பொருளாதாரம் குறித்து மத்திய வங்கி ஆளுநர் மகிழ்ச்சி செய்தி

கடுமையான பொருளாதார மற்றும் கொடுப்பனவு சமநிலை நெருக்கடியைத் தொடர்ந்து, இலங்கைப் பொருளாதாரம் தற்போது மீட்சியடைந்து வருவதுடன், நெருக்கடிக்கு முன்னர்...

ஜனாதிபதி அநுர ஒரு உன்னத, புத்திசாலித்தன தலைவர்

– பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தற்போதைய ஜனாதிபதி அநுர திசாநாயக்க அவர்கள் உன்னதமான புத்திசாலித்தனமான தலைவர் என...

நீண்ட வார இறுதியில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தைத் தவிர்ந்த ஏனைய எரிபொருள் விநியோக நிறுவனங்கள் கடன் அடிப்படையில் எரிபொருளை வழங்க மறுத்து வருவதால்,...

More like this

இலங்கையின் பொருளாதாரம் குறித்து மத்திய வங்கி ஆளுநர் மகிழ்ச்சி செய்தி

கடுமையான பொருளாதார மற்றும் கொடுப்பனவு சமநிலை நெருக்கடியைத் தொடர்ந்து, இலங்கைப் பொருளாதாரம் தற்போது மீட்சியடைந்து வருவதுடன், நெருக்கடிக்கு முன்னர்...

ஜனாதிபதி அநுர ஒரு உன்னத, புத்திசாலித்தன தலைவர்

– பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தற்போதைய ஜனாதிபதி அநுர திசாநாயக்க அவர்கள் உன்னதமான புத்திசாலித்தனமான தலைவர் என...

நீண்ட வார இறுதியில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தைத் தவிர்ந்த ஏனைய எரிபொருள் விநியோக நிறுவனங்கள் கடன் அடிப்படையில் எரிபொருளை வழங்க மறுத்து வருவதால்,...