கிழக்கு மாகாணம் மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை, மொனராகலை மாவட்டங்களுக்கு அதிக வெப்பமான காலநிலை தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பை இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளிலும், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் பகல் நேரங்களில் வெப்பக் குறியீடு அதாவது மனித உடல் உணரும் வெப்பநிலை, அவதானம் செலுத்த வேண்டிய அளவுக்கு அதிகரிக்கக்கூடும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




