Homeஉள்நாட்டு செய்திவாகனங்களின் விலை ரூ.50 இலட்சம் வரை அதிகரிக்கும் அபாயம்

வாகனங்களின் விலை ரூ.50 இலட்சம் வரை அதிகரிக்கும் அபாயம்

spot_img

– வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் எச்சரிக்கை

அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள சுங்க மேலதிகக் கட்டணத்தை (Customs Surcharge) எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதி வரை நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால், எதிர்காலத்தில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலைகள் ரூ.50 இலட்சம் வரை அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் இந்த மேலதிகக் கட்டணம் நீடிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் நேரடி தாக்கம் மே 15ஆம் திகதிக்குப் பின்னர் கடன் கடிதங்கள் (LC) திறக்கப்பட்ட வாகனங்களுக்கு ஏற்படும் எனவும் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே தெரிவித்துள்ளார்.

தற்போது விற்பனை நிலையங்களில் உள்ள பெரும்பாலான வாகனங்களுக்கு மே 15ஆம் திகதிக்கு முன்னரே கடன் கடிதங்கள் திறக்கப்பட்டுள்ளதால், தற்போதைய விலையில் வாகனங்களை கொள்வனவு செய்வதற்கு இது சிறந்த சந்தர்ப்பம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் எதிர்பார்க்கப்படும் விலை அதிகரிப்புகள்:

•Wagon R – சுமார் ரூ.5 இலட்சம்
•Toyota Raize – சுமார் ரூ.10 இலட்சம்
•Vezel – ரூ.15–20 இலட்சம்
•Prado – சுமார் ரூ.30 இலட்சம்
•Land Cruiser – சுமார் ரூ.50 இலட்சம்
•Double Cab – ரூ.20–25 இலட்சம்

அடிக்கடி இவ்வாறு சுங்க மேலதிகக் கட்டணங்களில் மாற்றங்களை மேற்கொள்வது வாகன சந்தையை நிலையற்றதாக மாற்றும் என பிரசாத் மானகே தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பை பாதுகாக்க விரும்பினால், சுங்க வரிக் கொள்கையில் மாற்றங்களை மேற்கொள்வது அல்லது கடன் கடிதங்களை கட்டுப்படுத்துவது போன்ற மாற்று வழிமுறைகளை பயன்படுத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

Latest articles

கடும் வெப்பம்: குழந்தைகளின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் வேண்டும்

தற்போது நிலவும் கடுமையான வெப்பமான காலநிலை மற்றும் பாடசாலை விடுமுறை காலத்தை கருத்திற்கொண்டு, குழந்தைகளின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு...

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது நியாயமானது – சுகாதார பிரதி அமைச்சர்

இலங்கையர்களின் சராசரி ஆயுட்காலம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ள நிலையில், நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது விஞ்ஞானபூர்வமானதும் தர்க்கரீதியானதுமான நடவடிக்கை...

கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மற்றும் இரும்புக்கு 50% வரி

கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து மோட்டார் வாகனங்கள், லொறிகள், வாகன உதிரிப் பாகங்கள் மற்றும் இரும்பு ஆகியவற்றுக்கு...

‘பஸ் லலித்’ இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்

துபாயில் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான லலித் கன்னங்கர எனப்படும் ‘பஸ் லலித்’...

More like this

கடும் வெப்பம்: குழந்தைகளின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் வேண்டும்

தற்போது நிலவும் கடுமையான வெப்பமான காலநிலை மற்றும் பாடசாலை விடுமுறை காலத்தை கருத்திற்கொண்டு, குழந்தைகளின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு...

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது நியாயமானது – சுகாதார பிரதி அமைச்சர்

இலங்கையர்களின் சராசரி ஆயுட்காலம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ள நிலையில், நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது விஞ்ஞானபூர்வமானதும் தர்க்கரீதியானதுமான நடவடிக்கை...

‘பஸ் லலித்’ இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்

துபாயில் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான லலித் கன்னங்கர எனப்படும் ‘பஸ் லலித்’...