யோஷித ராஜபக்ஸ மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட ஆகியோருக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் முக்கிய சட்ட நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
இன்று (20) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இருவருக்கும் எதிராக 08 குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2006–2007 காலப்பகுதியில் யோஷித ராஜபக்ஸவுக்கு பிரித்தானிய Royal Navy Young Officers Course-ல் பங்கேற்க முறைகேடாக வாய்ப்பு வழங்கியதாக கரன்னாகொட மீதும், அதன் மூலம் முறையற்ற நன்மையைப் பெற்றதாக யோஷித மீதும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு தாக்கல் செய்த இந்த வழக்கில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின்னர் இருவரையும் பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.




