கொழும்பில் உள்ள அரசாங்கத்துக்குச் சொந்தமான ஏழு பங்களாக்களை பொருளாதார ரீதியாகப் பயன்படுத்துவதற்காக முதலீட்டாளர்களுக்கு குத்தகைக்கு வழங்க நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு திட்டமிட்டுள்ளது.
அரசாங்க வருமானத்தை அதிகரிப்பதுடன், புதிய வர்த்தக வாய்ப்புகள் மற்றும் சுற்றுலா ஈர்ப்புகளை உருவாக்கும் நோக்கில், கொழும்பு 05 பகுதியில் அமைந்துள்ள அரசாங்கத்துக்குச் சொந்தமான ஏழு பங்களாக்களை பொருளாதார ரீதியாகப் பயன்படுத்துவதற்கான முதலீட்டாளர்களின் முன்மொழிவுகளை கோர அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, கொழும்பு 05, ஸ்டான்மோர் கிரசென்ட்டில் அமைந்துள்ள B13, B14 மற்றும் B20 இலக்கங்களைக் கொண்ட பங்களா வீடுகளும், மலலசேகர மாவத்தையில் அமைந்துள்ள C61 மற்றும் C62 இலக்கங்களைக் கொண்ட பங்களா வீடுகளும், ஸ்கெல்டன் வீதியில் அமைந்துள்ள E01 மற்றும் E02 இலக்கங்களைக் கொண்ட பங்களா வீடுகளும் முதலீட்டு நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட உள்ளன.




