Homeஉள்நாட்டு செய்திமாகாண சபை தேர்தல்குறித்து நிலந்தி கொட்டச்சி கருத்து

மாகாண சபை தேர்தல்குறித்து நிலந்தி கொட்டச்சி கருத்து

spot_img

தேசிய மக்கள் சக்தியின் (NPP) அமைப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் நோக்கில் களுத்துறை மாவட்டம் முழுவதும் முன்னெடுக்கப்படும் விசேட பிரசார வேலைத்திட்டம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டச்சி கருத்து தெரிவித்தார்.

72 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கும் வகையில், பெண்கள் சபைகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் இணைத்துக்கொண்டு இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

எதிர்வரும் 5ஆம் திகதி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் களுத்துறை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள இந்தப் பிரசார நடவடிக்கை தொடர்பிலும் அவர் விளக்கமளித்தார்.

தற்போதைய அரசியல் நிலைமை குறித்து கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், தற்போது உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அல்லது மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான எந்தவொரு தயார்படுத்தலும் இல்லை எனக் குறிப்பிட்டார்.

அவ்வாறான நிலையில், தேசிய மக்கள் சக்தி ஏன் இவ்வாறான பிரசார வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கிறது என்பது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:

“தற்போதைய அரசியலில் எதிர்க்கட்சி மிகவும் பலவீனமான நிலையில் இருப்பதை நாம் காண்கிறோம். சஜித் பிரேமதாச, நாமல் ராஜபக்ஷ மற்றும் திலித் ஜயவீர போன்றவர்கள் புதிதாக அரசியல் கட்சிகளை உருவாக்கியிருந்தாலும், அது பலமான எதிர்க்கட்சி அல்ல. மாறாக, சிறிய கட்சிகளின் கூட்டணியாகவே உள்ளது.”

தேசிய மக்கள் சக்தியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டமொன்றில் உரையாற்றியபோதே நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டச்சி இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

spot_img

Latest articles

ஜனாதிபதி செயலாளருக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டு – வெளிப்படை விசாரணை வேண்டும்

ஜனாதிபதி செயலாளருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து வெளிப்படையான விசாரணைகளை நடத்தி அரசாங்கம் தனது ஊழல் எதிர்ப்பு...

எல்-நினோ காலநிலை மாற்றத்தால் இலங்கையைச் சூழவுள்ள கடலில் மீன்களின் இடம்பெயர்வு மாறியிருக்கலாம்

உலகளாவிய எல்-நினோ காலநிலை மாற்றத்துடன், இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்பில் மீன்கள் அதிகமாகக் காணப்படும் பகுதிகளின் வரைபடமும், மீன்கள் இடம்பெயரும்...

இந்த ஆண்டின் முதல் பாதியில் எரிபொருள் இறக்குமதிச் செலவு கணிசமாக அதிகரிப்பு

இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் எரிபொருள் இறக்குமதிக்கான செலவு, கடந்த 2025ஆம் ஆண்டின் அதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில்...

பல்கலை மாணவர்களில் கணிசமானோர் போதைப்பொருளுக்கு அடிமை!

பல்கலைக்கழக மாணவர்களில் கணிசமானோர் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாக பேராசிரியர் அமில இசுரு தெரிவித்துள்ளார். பல்கலைக்கழகப் பாடநெறிகளை இடைநடுவில் கைவிடும் ஆண் மாணவர்களில்...

More like this

ஜனாதிபதி செயலாளருக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டு – வெளிப்படை விசாரணை வேண்டும்

ஜனாதிபதி செயலாளருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து வெளிப்படையான விசாரணைகளை நடத்தி அரசாங்கம் தனது ஊழல் எதிர்ப்பு...

எல்-நினோ காலநிலை மாற்றத்தால் இலங்கையைச் சூழவுள்ள கடலில் மீன்களின் இடம்பெயர்வு மாறியிருக்கலாம்

உலகளாவிய எல்-நினோ காலநிலை மாற்றத்துடன், இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்பில் மீன்கள் அதிகமாகக் காணப்படும் பகுதிகளின் வரைபடமும், மீன்கள் இடம்பெயரும்...

இந்த ஆண்டின் முதல் பாதியில் எரிபொருள் இறக்குமதிச் செலவு கணிசமாக அதிகரிப்பு

இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் எரிபொருள் இறக்குமதிக்கான செலவு, கடந்த 2025ஆம் ஆண்டின் அதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில்...