Homeஉள்நாட்டு செய்திஅர்ஜுன மகேந்திரனை இலங்கைக்கு அழைத்துவர இராஜதந்திர நடவடிக்கைகள்

அர்ஜுன மகேந்திரனை இலங்கைக்கு அழைத்துவர இராஜதந்திர நடவடிக்கைகள்

spot_img

முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை இலங்கைக்கு அழைத்துவருவதற்காக இராஜதந்திர ரீதியில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அர்ஜுன மகேந்திரனை எவ்வாறாயினும் இலங்கைக்கு அழைத்துவருவதற்கு, அவர் தற்போது வசிக்கும் நாடுகளின் சட்ட நடைமுறைகளுக்கு அமைவாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அனைத்து குற்றவாளிகளையும் இலங்கைக்கு அழைத்துவருவதற்கு நாங்கள் முயற்சித்து வருகிறோம். இதற்காக இராஜதந்திர ரீதியில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், நாம் கேட்டவுடன் அனைத்து நாடுகளும் குற்றவாளிகளை எம்மிடம் ஒப்படைத்துவிடும் என்று நினைக்க வேண்டாம்.

இதற்காக பாரிய இராஜதந்திர தலையீடுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அந்தந்த நாடுகளில் நடைமுறையில் உள்ள சட்ட அமைப்புகளுக்கு அமைவாக, அர்ஜுன மகேந்திரனை எப்படியாவது இலங்கைக்கு அழைத்துவந்து, அவருக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதே எமது எதிர்பார்ப்பு.”

இதற்கிடையில், முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை இலங்கைக்கு அழைத்துவருவதற்கு பல்வேறு வழிமுறைகள் உள்ளதாகவும், அதற்கமைய தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் ஆனந்த விஜேபால அண்மையில் தெரிவித்திருந்தார்.

spot_img

Latest articles

சமூக ஊடகப் பயன்பாட்டால் 60.1% பாடசாலை மாணவர்கள் கடுமையான மன அழுத்தத்தில்

தினசரி சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதன் காரணமாக இலங்கையின் பாடசாலைகளில் 10ஆம் தரம் முதல் 13ஆம் தரம் வரை கல்வி...

24 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகத் தடை

கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பல பகுதிகளில் இன்று (03) இரவு முதல் 24 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகத்...

ரணில் கூறுவது அடிப்படையற்ற பொய்

2028ஆம் ஆண்டில் வெளிநாட்டுக் கடன்களை திருப்பிச் செலுத்த முடியாமல் இலங்கை வீழ்ச்சியடையும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...

ஹம்பாந்தோட்டை மாநகர சபையின் முன்னாள் மேயர் தற்கொலை?

ஹம்பாந்தோட்டை மாநகர சபையின் முன்னாள் மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. திம்பிரிகஸ்யாயவில் அமைந்துள்ள தனது வீட்டில்...

More like this

சமூக ஊடகப் பயன்பாட்டால் 60.1% பாடசாலை மாணவர்கள் கடுமையான மன அழுத்தத்தில்

தினசரி சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதன் காரணமாக இலங்கையின் பாடசாலைகளில் 10ஆம் தரம் முதல் 13ஆம் தரம் வரை கல்வி...

24 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகத் தடை

கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பல பகுதிகளில் இன்று (03) இரவு முதல் 24 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகத்...

ரணில் கூறுவது அடிப்படையற்ற பொய்

2028ஆம் ஆண்டில் வெளிநாட்டுக் கடன்களை திருப்பிச் செலுத்த முடியாமல் இலங்கை வீழ்ச்சியடையும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...