Homeஉள்நாட்டு செய்தி24 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகத் தடை

24 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகத் தடை

spot_img

கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பல பகுதிகளில் இன்று (03) இரவு முதல் 24 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. 

அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்று இரவு 8.00 மணி முதல் நாளை (04) இரவு 8.00 மணி வரையிலான 24 மணித்தியாலங்களுக்கு இவ்வாறு நீர் விநியோகம் தடைப்படும் என அந்த சபை குறிப்பிட்டுள்ளது. 

இதற்கமைய நுகேகொடை, கொஹுவலை, தெஹிவளை, கல்கிசை, ரத்மலானை, மொறட்டுவை, ராவதாவத்தை, சொய்சாபுரம், அங்குலானை, இதிபெத்த, கடுபெத்த, கல்தெமுல்ல, மோதறை, கொரளவெல்ல, எகொடவுயன மற்றும் கட்டுக்குருந்த ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படவுள்ளது. 

அத்துடன், செத்சிறிபாய, ஹிம்புடான, உடுமுல்ல வீதி, மாளிகாகொடெல்ல, வங்கிச் சந்தி வீதி, டபிள்யூ.ஏ. சில்வா மாவத்தை, ஹவ்லொக் வீதி, கல்யாணி வீதி, கொழும்பு 06, வைத்தியசாலை வீதி, ஜெயந்தி மாவத்தை மற்றும் சாந்தி மாவத்தை ஆகிய பகுதிகளுக்கும் இந்த நீர்வெட்டு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நீர் விநியோகம் இடை நிறுத்தப்படுவதால் நுகர்வோருக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு வருத்தம் தெரிவித்துள்ள தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, குறிப்பிட்ட காலப்பகுதியில் நீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

spot_img

Latest articles

சமூக ஊடகப் பயன்பாட்டால் 60.1% பாடசாலை மாணவர்கள் கடுமையான மன அழுத்தத்தில்

தினசரி சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதன் காரணமாக இலங்கையின் பாடசாலைகளில் 10ஆம் தரம் முதல் 13ஆம் தரம் வரை கல்வி...

ரணில் கூறுவது அடிப்படையற்ற பொய்

2028ஆம் ஆண்டில் வெளிநாட்டுக் கடன்களை திருப்பிச் செலுத்த முடியாமல் இலங்கை வீழ்ச்சியடையும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...

அர்ஜுன மகேந்திரனை இலங்கைக்கு அழைத்துவர இராஜதந்திர நடவடிக்கைகள்

முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை இலங்கைக்கு அழைத்துவருவதற்காக இராஜதந்திர ரீதியில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சரவைப்...

ஹம்பாந்தோட்டை மாநகர சபையின் முன்னாள் மேயர் தற்கொலை?

ஹம்பாந்தோட்டை மாநகர சபையின் முன்னாள் மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. திம்பிரிகஸ்யாயவில் அமைந்துள்ள தனது வீட்டில்...

More like this

சமூக ஊடகப் பயன்பாட்டால் 60.1% பாடசாலை மாணவர்கள் கடுமையான மன அழுத்தத்தில்

தினசரி சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதன் காரணமாக இலங்கையின் பாடசாலைகளில் 10ஆம் தரம் முதல் 13ஆம் தரம் வரை கல்வி...

ரணில் கூறுவது அடிப்படையற்ற பொய்

2028ஆம் ஆண்டில் வெளிநாட்டுக் கடன்களை திருப்பிச் செலுத்த முடியாமல் இலங்கை வீழ்ச்சியடையும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...

அர்ஜுன மகேந்திரனை இலங்கைக்கு அழைத்துவர இராஜதந்திர நடவடிக்கைகள்

முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை இலங்கைக்கு அழைத்துவருவதற்காக இராஜதந்திர ரீதியில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சரவைப்...