இளைஞர் குழுவொன்றைச் சந்தித்து கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மீண்டும் நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் எந்தவொரு எதிர்பார்ப்பும் தமக்கு இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
“என்னால் மீண்டும் இந்த நாட்டைப் பொறுப்பேற்க முடியாது. எப்போதும் அதிகாரத்தில் இருக்க முடியாது. அதிகாரத்தை விட்டுவிட்டு எதிர்க்கட்சியில் இருந்து மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்காக மேற்கொண்ட சவாலான முயற்சிகளை நினைவுகூர்ந்த அவர், அரசியல் அதிகாரம் நிரந்தரமானது அல்ல எனவும் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் காலங்களில் எதிர்க்கட்சியில் இருந்து நாட்டின் அரசியலை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் எனவும் ரணில் விக்கிரமசிங்க இளைஞர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.




