2022 ஒக்டோபர் 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் மின்சாரக் கட்டணத்துடன் 2.5% சமூகப் பாதுகாப்பு வரி சேர்க்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) இன்று (26) தெரிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபையினால் மேற்கொள்ளப்படும் மின்சார விநியோகம் அண்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரிக்கு (SSCL) உட்பட்டுள்ளதால் வரி சேர்க்கப்படும் என PUCSL தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.
சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரியானது மின்சார கட்டணத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பது குறித்து தெளிவுபடுத்திய ரத்நாயக்க, மின்சார சபையிடமிருந்து மின்சாரம் பெறும் நுகர்வோர் உட்பட தரப்பினரால் மின்சாரத்தை கொள்வனவு செய்யும் போது குறித்த வரியை CEB வசூலிக்கும் என்றார்.
“சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரி மின்சாரத் தொழிலை எவ்வாறு பாதிக்கும் என்பது குறித்து மின்சார நுகர்வோர் உட்பட மின்சாரத் துறையில் உள்ள பல்வேறு தரப்பினரும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். மின் கட்டணங்கள் சமீபத்தில் திருத்தப்பட்டதால், இந்த வரியிலிருந்து மின் நுகர்வுக்கு விலக்கு அளிக்க நிதி அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்தோம். குறித்த சட்டத்தின் பிரகாரம் இலங்கை மின்சார சபையின் மின்சார விநியோகம் இந்த வரிக்கு உட்பட்டது என நிதியமைச்சு எமக்கு அறிவித்துள்ளது. அதன்படி, 2022 ஒக்டோபர் முதலாம் திகதி முதல் இலங்கை மின்சார சபையிடமிருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்யும் அனைத்து தரப்பினரிடமிருந்தும் மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கு வரி விதிக்க இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுக்கும்” என அவர் மேலும் விளக்கமளித்தார்.
21வது அரசியலமைப்புத் திருத்தத்தை ஆதரித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களுக்கும் அதனை எதிர்த்த உறுப்பினர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
திருத்தம் 22 க்கு வாக்களிக்காத உறுப்பினர்களுடன் இணைந்து செயற்படுவது கடினமாகும் என 20ஆம் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
21 பேரை எதிர்த்து எம்.பி.க்கள் ஒரே கட்சியில் இருந்து மாறுபட்ட முடிவுகளை எடுப்பதால் இந்த சிக்கல் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிரணி எம்.பி.க்கள் குறித்து முடிவெடுக்க வேண்டும், இல்லாவிட்டால் எதிர்கால வேலைகளில் சிக்கல்கள் ஏற்படலாம் என மொட்டு எம்.பி.க்கள் குழு ஆலோசித்ததாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
இதன் காரணமாக எதிர்காலத்தில் கட்சியில் முரண்பாடுகள் ஏற்படலாம் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு எதிரான பயணத்தடையை நவம்பர் 24 ஆம் திகதி வரை நீடிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், சந்தேகநபரான கப்ராலை தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவல உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தென் மாகாண முன்னாள் ஆளுநர் கீர்த்தி தென்னகோனினால் சமர்ப்பிக்கப்பட்ட தனிப்பட்ட முறைப்பாடு இன்று (26) மீண்டும் அழைக்கப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
யால விலங்குகள் சரணாலய சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகளை நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரிய திணைக்களங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானத்தை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் இன்று (26) கலந்துகொண்டு அவர் இவ்வாறு கூறினார்.
இதன்படி அரசியல் அழுத்தம் இன்றி அந்த விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
யால சரணாலயத்தில் பாதுகாவலர்கள் மற்றும் சாரதிகளை ஒதுக்கி சட்டவிரோதமாக நடந்து கொண்ட 09 பேர் இன்று (26) காலை அதிகாரிகளிடம் சரணடைந்துள்ளனர்.
யால சரணாலயத்தில் சட்டவிரோதமாக ஓட்டிச் சென்ற 07 வாகனங்களும் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக யால சரணாலய பிரதிப் பாதுகாவலர் தெரிவித்தார்.
பிரித்தானிய சுற்றாடல், உணவு மற்றும் கிராமிய அலுவல்கள் அமைச்சராக கடமையாற்றிய ரணில் ஜயவர்தன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
செப்டம்பர் 6 ஆம் திகதி, அவர் சுற்றுச்சூழல், உணவு மற்றும் கிராமப்புற விவகாரங்கள் அமைச்சராக பதவியேற்றார்.
பிரித்தானியப் பிரதமர் ரிஷி சுனக் புதிய அமைச்சரவையை நியமிக்கத் தயாராகி வருவதால், அமைச்சர் பதவியை விட்டு விலகி பிரதமராகத் தெரிவு செய்யப்பட்ட அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாக ரணில் ஜயவர்தனவின் இராஜினாமா கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாரிய குழுவொன்று தயாராகவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்துகொள்ளும் நம்பிக்கையில் தற்போது அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சுமார் நாற்பது பேர் இருப்பதாகவும் அவர் கூறினார்.
இக்குழுவினர் ஏற்கனவே பல தடவைகள் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுமாறு ஜனாதிபதி தமக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் தெரிவித்த அவர், ஒரு குழுவுடன் இணைந்து செயற்படும் போது கட்சி மாறுவது ஏற்புடையதல்ல எனவும் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் புரிந்துணர்வுடன் செயற்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
பாராளுமன்றத்துக்கு ஒப்பான மற்றுமொரு மக்கள் சபையை ஸ்தாபிப்பதற்கு சட்டத்தில் இடமில்லை எனவும் அவ்வாறு மேற்கொள்ள முயற்சிப்பது பாராளுமன்ற சிறப்புரிமைகளை மீறுவதாகும் எனவும் சபை முதல்வரும் அமைச்சருமான (கலாநிதி) சுசில் பிரேமஜயந்த கடந்த 19 ஆம் திகதி தெரிவித்தார்.
தற்பொழுது சில வாரங்களுக்கு முன்னர் பாராளுமன்றத்துக்கு ஒப்பான மற்றுமொரு மக்கள் சபையை ஸ்தாபிப்பதற்கு தயாராகுவதாக ஊடகங்கள் மூலம் அறிக்கையிடப்படுவதாகவும் அது அரசியலமைப்புக்கு முரணானது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
விசேடமாக தேர்தல் ஒன்றின் மூலம் பொதுமக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படுவதாகவும், மக்கள் பிரதிநிதிகளை மாற்ற வேண்டும் எனின் தேர்தல் மூலம் அதனை மேற்கொள்ளவேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதனால், இவ்வாறான முயற்சிகளை மேற்கொள்வது சட்டரீதியானது அல்ல எனவும் அது பாராளுமன்ற சிறப்புரிமைகளை மீறுவதாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அதற்கமைய, பாராளுமன்ற சபை முதல்வரும் அமைச்சருமான (கலாநிதி) சுசில் பிரேமஜயந்த அவர்களால் முன்வைக்கப்பட்ட பாராளுமன்ற சிறப்புரை மீறப்பட்டுள்ளமை தொடர்பான விடயத்தை ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரை பற்றிய குழுவுக்கு ஆற்றுப்படுத்தியுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அண்மையில் (20) பாராளுமன்றத்தில் அறிவித்தார்
கிரிக்கெட் வீரர்களான அசித்த பெர்னாண்டோ, மதீஷ பத்திரன மற்றும் நிரோஷன் டிக்வெல்ல ஆகியோர் அவுஸ்திரேலியா செல்வதற்கான விசாக்கள் இன்னும் நிலுவையில் உள்ளது
அணியிலுள்ள பல வீரர்களுக்கு தொடர் காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், வார இறுதியில் மூன்று துடுப்பாட்ட வீரர்களையும் காத்திருப்பு வீரர்களாக அனுப்ப இலங்கை கிரிக்கெட் தீர்மானித்திருந்தது.
இருப்பினும், டி20 உலகக் கோப்பைக்காக காத்திருப்பில் இருந்த வீரர்களுக்கு இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள் ஏன் முன்னதாக விசா எடுக்கவில்லை என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இலங்கையில் இப்போது கசுன் ராஜித மற்றும் பிரமோத் மதுஷன் ஆகியோர் கூடுதல் வேகப்பந்து வீச்சாளர்களாக உள்ளனர், பினுர பெர்னாண்டோ போட்டியிலிருந்து வெளியேற்றப்படலாம் என எதிர்பக்கபடுகிறது.
புதிய அமைச்சரவை அமைச்சர்களை நியமித்து அமைச்சரவை விஸ்தரிப்பும், புதிய ஆளுநர்கள் பலரை நியமிப்பதும் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதுடன், இந்த நியமனங்களை உடனடியாக வழங்குமாறும் கூறியிருந்தது.
ஆனால் விரைவில் எந்த முடிவும் எடுக்கப்படாது என்று அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஒன்ராறியோ மாநகர, நகர, உள்ளூராட்சி, கல்விச்சபை உறுப்பினர்களுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதில் நான்கு தமிழர்கள் அமோக வெற்றி பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இதில் இரண்டு தமிழர்கள் இரண்டாவது தடவையாக மீண்டும் வெற்றி பெற்றுள்ளனர்.
ஸ்காபுறோ வடக்கு (Scarborough North) தொகுதியில் கல்வி சபை உறுப்பினர்பதவிக்கு மீண்டும் போட்டியிட்ட யாழினி ராஜகுலசிங்கம்(Yashini Rajakulasingham )அமோக வெற்றி பெற்றார்.
ஸ்காபுறோரூச் பார்க் (Scarborough-Rouge Park) தொகுதியில் கல்வி சபை உறுப்பினர் பதவிக்கு மீண்டும் போட்டியிட்ட அனு சிறீஸ்கந்தராஜா (Anu Sriskandaraja )அமோக வெற்றி பெற்றார்.
ஸ்காபுறோ மத்தி (Scarborough Center) தொகுதியில் கல்வி சபை உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட நீதன் சாண் (Neethan Chan)அமோக வெற்றி பெற்றார்.
WARD 7 COUNCILLOR) கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட யுவனீற்ரா நாதன்(Yuvaneetra Nathan )அவர்கள் அமோக வெற்றி பெற்றார்.
இதேவேளை, வெற்றிபெற்ற நான்கு தமிழர்களுக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.