web log free
June 25, 2025
kumar

kumar

நடிகை நயன்தாரா ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் வெளிநாட்டிற்கு விக்னேஷ் சிவன் உடன் சென்று கொண்டாடி வரும் நிலையில் இந்த ஆண்டு தனது பிறந்தநாளை கொண்டாட வெளிநாடு செல்லவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளன.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர் என்பதும் வாடகை தாய் மூலம் இந்த தம்பதிகள் இரட்டை குழந்தைகள் பெற்றுள்ளனர் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் பிறந்தநாள் வெளிநாட்டில் கொண்டாடப்படும் என்பதும் அது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நயன்தாராவின் 38வது பிறந்த நாள் நவம்பர் 28ஆம் தேதி வர இருக்கும் நிலையில் இந்த ஆண்டு நயன்தாரா தனது பிறந்தநாளுக்கு எந்த வெளிநாடும் செல்லவில்லை என்று கூறப்படுகிறது. திருமணமான பின்னரும் குழந்தை பெற்ற பின்னரும் வரும் முதல் பிறந்தநாள் என்றாலும் இந்த பிறந்த நாளை அவர் தனது குழந்தைகளுடன் வீட்டிலேயே கொண்டாட முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி பிறந்தநாள் தினத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களை அழைத்து ஒரு விருந்து வைக்க திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்தநிலையில் அட்லீ இயக்கி வரும் ’ஜவான்’ படத்தில் நயன்தாரா நடித்து வரும் நிலையில் இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் அவர் விரைவில் கலந்து கொள்ள உள்ளார். அதேபோல் அஜித் நடிக்கவிருக்கும் ’ஏகே 62’ படத்தின் படப்பிடிப்பை இன்னும் ஒரு சில வாரங்களில் விக்னேஷ் சிவன் தொடங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தனது முன்னோடியாக இருந்த கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட தற்போதைய ஆளுநர்களுக்குப் பதிலாக ஒன்பது மாகாணங்களுக்கும் புதிய ஆளுநர்களை நியமிக்க ஆலோசித்து வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.

ஆளுநர் என்பது மாகாண சபைகள் மீது நிறைவேற்று அதிகாரங்களை செலுத்துவதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்படும் பதவியாகும். மாகாண சபையினால் நிறைவேற்றப்படும் எந்தவொரு சட்டமும் சம்பந்தப்பட்ட ஆளுநரின் ஒப்புதலுக்குப் பின்னரே நடைமுறைக்கு வரும்.

இந்த நாட்களில் மாகாண சபைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இல்லாத நிலையில், ஆளுநர்கள் அவர்களின் விவகாரங்களில் முழு அதிகாரத்தையும் செலுத்துகின்றனர்.

அரசியல் அனுபவமுள்ளவர்களை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஆளுநர்களாக நியமிக்க ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் ஜோன் அமரதுங்கவுக்கு ஆளுநர் பதவி வழங்கப்படுமென உறுதியளிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

சர்வதேச ரி20 பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் இலங்கை அணியின் சுழல் பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

ரி20 உலகக் கிண்ண தொடரில் அவர் 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னர் 2021 ஆம் ஆண்டு நவம்பரில் ரி20 பந்துவீச்சாளர்களில் அவர் முதல் இடத்தைப் பிடித்திருந்தார்.

இதுவரை 52 சர்வதேச டிரி20 போட்டிகளில் விளையாடியுள்ள வனிந்து 86 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களை சட்டமா அதிபரின் பரிந்துரையின் பேரில் விடுவித்தமை மக்களை ஏமாற்றும் நாடகம் எனவும், ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்தாது அரசாங்கம் அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கு அமையவே செயற்படுவதாகவும் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை அறிக்கை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகளில் குறிப்பிடப்பட்டுள்ள தாக்குதலுக்கு காரணமானவர்களுக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களம் சட்டத்தை அமுல்படுத்தாமை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சமூக ஆர்வலர்களின் சுயமரியாதை மற்றும் சுதந்திரத்திற்காக தலையிட்டு நாட்டை இந்த நிலைக்கு கொண்டு வந்த தலைவர்களை ஊக்குவித்து நாட்டில் நீதி மற்றும் சுதந்திரத்தை நிலைநாட்டுவதில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு முனைப்புடன் செயற்பட வேண்டுமெனவும் கர்தினால் அவர்கள் கேட்டுக்கொள்கிறார்.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் சிபாரிசுகளின் அடிப்படையிலான சாட்சியங்களை பொதுமக்களிடமிருந்து மறைத்து வைத்திருப்பது மற்றும் உண்மையை மறைக்க அரசாங்க அதிகாரிகள் முயற்சிப்பது இந்த நயவஞ்சக முயற்சியின் மற்றொரு படியாகும் என்றும் அவர் கூறுகிறார்.

எனவே, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் சாட்சியங்களை பொதுமக்களுக்கு வெளியிடுமாறும், இந்த கொடூர கொலைகளின் பின்னணியில் உள்ள சக்திகள் குறித்து நியாயமாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் விசாரணை நடத்துமாறு அரசாங்கத்திற்கும் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் உத்தரவாதம் அளித்துள்ள கருத்து, பேச்சு மற்றும் அமைதியான போராட்டச் சுதந்திரத்தை அரசாங்கம் மீறுவதாக கர்தினால் குற்றம்சாட்டியுள்ளார்.

பல்கலைக்கழக மாணவர் பேரவையின் அழைப்பாளர் வசந்த முதலி மற்றும் பல்கலைக்கழக பிக்குகள் பேரவையின் அழைப்பாளர் கல்வெவ சிறிதம்மா ஆகியோர் 75 நாட்களாக குற்றஞ்சாட்டப்படாமல் அநியாயமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கர்தினால் தமது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளனர்.  

இன்று பிற்பகல் 3 மணி முதல் நாளை பிற்பகல் 3 மணி வரை அமுலுக்கு வரும் வகையில் 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை அறிவிப்பை கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இதன்படி, பதுளை, கண்டி, கேகாலை, மாத்தளை, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவையில் உள்ள பல அமைச்சர்கள் எதிர்வரும் காலங்களில் தமது அமைச்சுப் பதவிகளில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசாங்கத்தில் இருந்து வெளியேறும் அமைச்சர்களும் புதிய அரசியல் பிரசாரத்தை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, காணி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ எதிர்வரும் காலங்களில் தனது அமைச்சுப் பதவியிலிருந்து விலக தீர்மானித்துள்ளார்.

இவரைத் தவிர மேலும் மூன்று கேபினட் அமைச்சர்களும் இந்த அரசியல் இயக்கத்தில் இணையவுள்ளனர்.

முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் மூத்த ஊடகவியலாளர் விக்டர் ஐவன் ஆகியோரால் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்படும் நியாயமான சமூகத்திற்கான தேசிய பிரச்சாரத்துடன் இணைந்து இந்த அரசியல் பிரச்சாரத்தை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் விக்டர் ஐவன் ஆகியோர் தமது தேசிய பிரச்சாரம் தொடர்பாக அண்மையில் உரை நிகழ்த்தியிருந்தனர்.

ஆரம்பிக்கப்பட உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய அரசியல் இயக்கம் அரசியல் பொருளாதார மற்றும் சமூக மாற்றத்தை இலக்காகக் கொண்ட தேசிய கொள்கையுடன் உருவாக்க ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்காக சிவில் இயக்கங்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் பங்கேற்பாளர்களை போராட்டத்தில் ஈடுபடுத்த முன்மொழியப்பட்டுள்ளது.

கடவுச்சீட்டு வழங்குவதை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

பத்தரமுல்லையில் உள்ள அதன் பிரதான அலுவலகம் மற்றும் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பிராந்திய அலுவலகங்களிலும் கடவுச்சீட்டு வழங்குவது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

பாஸ்போர்ட் வழங்குவது தொடர்பான அதன் கணினி அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது என்று இடைநிறுத்தப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால் மறு அறிவித்தல் வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

கந்தகாடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட 202 கைதிகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலன்னறுவை வெலிகந்த கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் நேற்று முன்தினம் (06) இரவு பத்து மணியளவில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

நிலைமையைக் கட்டுப்படுத்த அரலகங்வில, மானம்பிட்டிய, வெலிகந்த, ஹிகுராக்கொட, புலஸ்திகம பொலிஸ் நிலையங்களில் இருந்தும் இராணுவத்தினர் அழைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், இச்சம்பவம் தொடர்பான முழுமையான அறிக்கையை தமக்கு விரைவில் வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவுக்கு அறிவித்துள்ளார்.

கந்தகாடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்தில் இடம்பெற்ற கலவரச் சம்பவம் தொடர்பில் 201 கைதிகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பொலன்னறுவை நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

கந்தகாடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்தில் இடம்பெற்ற சம்பவத்தின் பின்னர் 514 கைதிகள் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்ஷன் ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

எனினும் மேலும் 30 கைதிகளை காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை சுங்கத் திணைக்களம், உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மற்றும் கலால் வரி திணைக்களத்தின் வெற்றிடங்களுக்கு தற்போது அரச சேவையில் ஈடுபட்டுள்ள பட்டதாரிகளை இணைத்துக் கொள்ள ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

குறித்த திணைக்களங்களின் சேவை விதிகள் மீறப்படாத வகையில் அமைச்சரவை மற்றும் அரச சேவைகள் ஆணைக்குழுவின் அங்கீகாரத்துடன் நடத்தப்படும் போட்டிப் பரீட்சை மூலம் இந்த ஆட்சேர்ப்புகளை நடத்த எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இலங்கை சுங்கத் திணைக்களத்தில் தற்போது 773 வெற்றிடங்களும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் 434 வெற்றிடங்களும் உள்ளன.

மதுவரித் துறையில் 331 பணியிடங்கள் வெற்றிடமாக உள்ள நிலையில், ஓய்வு பெறும் வயதை 65ல் இருந்து 60 ஆகக் குறைத்துள்ள நிலையில், அனுபவம் வாய்ந்த மற்றொரு குழுவானது டிசம்பர் 31ஆம் திகதிக்குள் ஓய்வு பெற உள்ளது.

தற்போதுள்ள நிலைமையை கருத்திற் கொண்டு அரச சேவைக்கு புதிய நியமனங்கள் வழங்கப்பட மாட்டாது எனவும் தற்போது அரச சேவையில் கடமையாற்றும் திறமையான பட்டதாரிகளுக்கு அந்த வாய்ப்பை வழங்குவதே அரசாங்கத்தின் நம்பிக்கை எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

உத்தேச அமைச்சரவைத் திருத்தத்தின் பிரகாரம் புதிதாக 7 அமைச்சரவை அமைச்சர்கள் நியமிக்கப்பட உள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசியலமைப்பின் பிரகாரம் அமைச்சரவைக்கு மேலும் 12 அமைச்சர்களை நியமிக்க முடியும் எனினும் முதற்கட்டமாக 7 பேர் மாத்திரமே நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் குறித்த நியமனங்கள் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அரசியலமைப்பின் பிரகாரம் அமைச்சரவைக்கு நியமிக்கப்படக்கூடிய மொத்த அமைச்சர்களின் எண்ணிக்கை 30 ஆகும். அவர்களில் 18 பேர் தற்போது நியமிக்கப்பட்டுள்ளனர்.

பதவியேற்கவுள்ள அமைச்சர்களில் 06 பேர் மொட்டு கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துவதுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் வஜிர அபேவர்தனவுக்கும் அமைச்சுப் பதவி கிடைக்குமென அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd