web log free
May 08, 2025
kumar

kumar

புதிய பிரதமரின் தலைமையில் இடைக்கால அரசாங்கம் ஸ்தாபிக்கப்படாவிடின் அரசாங்கத்தின் இருப்பினை கேள்விக்குள்ளாக்கும் வகையில் பாராளுமன்ற மட்டத்தில் உறுதியான தீர்மானத்தை முன்னெடுப்போம். பொதுத்தேர்தல் ஒன்று இடம்பெறும் வரை ராஜபக்ஷர்கள் இல்லாத நிர்வாகத்தையே நாட்டு மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலைமை குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷவிற்கு எதிரான மக்கள் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைகிறதே தவிர குறைவடையவில்லை. அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதியை பதவி நீக்குவது தற்போதைய நிலையில் சாத்தியமற்றதாகும்.

ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தை நாட்டு மக்கள் புறக்கணிக்கிறார்கள். சமூக மட்டத்தில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு குறுகிய காலத்தில் தீர்வு காண இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும் யோசனையை முன்வைத்துள்ளோம்.

சகல கட்சிகளும் ஒன்றிணைந்து இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்கும் போது ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷபிரதமர் பதவி வகிக்க முடியாது. பொதுத்தேர்தல் ஒன்று இடம்பெறும் வரை ராஜபக்ஷர்கள் இல்லாத அரச நிர்வாகத்தையே நாட்டு மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இடைக்கால அரசாங்கத்தை அமைக்காமல் மக்களால் வெறுக்கப்படும் அமைச்சர்களை உள்ளடக்கிய அமைச்சினை மீண்டும் ஸ்தாபிக்கும் முயற்சிகளை ஒருதரப்பினர் தற்போது முன்னெடுத்து வருவதை அவதானிக்க முடிகிறது.

புதிய பிரதமரின் கீழ் இடைக்கால அரசாங்கம் ஸ்தாபிக்கப்படாவிடின் அரசாங்கத்தின் இருப்பை கேள்விக்குள்ளாக்கும் வகையில் பாராளுமன்ற மட்டத்தில் உறுதியான தீர்மானத்தை முன்னெடுப்போம். நாட்டு மக்களின் கோரிக்கைக்கு அரச தலைவர்கள் மதிப்பளிக்க வேண்டும் என்றார்.

ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் எதிராக காலிமுகத்திடலில் இடம் ஆர்ப்பாட்டங்களில் ஓமல்பே சோபித தேரர் இணைந்துகொண்டுள்ளார்.

ஆர்ப்பாட்டம் இடம்பெறும் பகுதிக்கு பௌத்தமதகுருமாருடன் வந்த ஓமல்பே சோபிததேரர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தனது ஆதரவை வெளியிட்டுள்ளார்.

மகாநாயக்க தேரர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளை அரசாங்கம் நடைமுறைப்படுத்தவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலிருந்து சிலாபம் சென்று புதையல் தோண்டிய பூசாரி உள்ளிட்ட ஆறு பேர் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பூசாரி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிலாபம் நகர சபை உறுப்பினரும் அவரது இரண்டு மகன்களும் மற்றும் கண்டியைச் சேர்ந்த இருவருமாக ஆறு பேர் சிலாபம் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த ஆறு பேரும், ஆராய்ச்சிக்கட்டுவ மானாவெரிய பகுதியில் புதையல் தோண்டுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றதனை அடுத்து குறித்த பகுதியினை பொலிஸார் சுற்றிவளைத்து இருந்தனர்.

இதன்போது யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பூசாரி, இரண்டு கோழிகளை உயிர்ப்பலி கொடுத்து புதையல் பூஜையைச் செய்துள்ளார்.

அவர்களை சுற்றி வளைத்த பொலிஸார் பூஜைக்குப் பயன்படுத்தப்பட்ட பொருட்கள், புதையல் தோண்டப் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் என்பவற்றைத் தடய பொருட்களாக மீட்டதுடன், அங்கிருந்த ஆறு பேரையும் கைது செய்து பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு சென்றனர்.

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் இடம்பெற்று வரும் நிலையில் கோட்டாபயவுக்கு ஆதரவாகவும் ஆங்காங்கே சிறிய போராட்டங்கள் இடம் பெற்று வருகின்றது.

இந்நிலையில் இன்றய தினம் கேகாலையில் ஆரம்பிக்கப்பட்ட கோட்டாபயவுக்கு ஆதரவாக போராட்டம் 10 நிமிடங்களிலேயே கலைக்கப்பட்டது.

"பெற்றோல் இல்லை" எனப்பரவும் செய்திகளில் உண்மையில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
 
இதுவரை நாடுபூராவும் உள்ள 1222 பெற்றோலிய நிலையங்களுக்கு அவசியமான எரிபொருள், வழங்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரவிக்கப்படுகிறது.
 
இம்மாதம் கடந்த பதினொரு நாட்களுக்கு மட்டும், ஒரு நாளைக்கு பெற்றோல் மெற்றிக் தொன் 4200 படி வழங்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் குறிப்பிட்டு உள்ளது.
 
இதனிடையே சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10000 லீட்டர் எரிபொருள் தற்போது பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலி கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கு எதிராக இன்று நான்காவது நாளாகவும் காலி முகத்திடலில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், குறித்த போராட்டத்தில் பங்கேற்ற ரப் பாடகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

 போராட்டத்தில் கலந்துகொண்டு பாடல்களை பாடிக்கொண்டிருந்த பாடகர் ஷிராஸ் யூனுஸ் என்பவரே உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு மாரடைப்பு காரணமாக காலி முகத்திடலில் உயிரிழந்த இவர், 1995ஆம் ஆண்டு தொடக்கம் சகோதரமொழியிலான ரப் பாடல்களைப் பாடி வந்தமை குறிப்பிடத்தக்கது.

ஏப்ரல் 13, 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 16 மற்றும் 17ஆம் திகதிகளில் காலை 8 மணி தொடக்கம் மாலை 5 மணி வரையான காலப்பகுதியில் 02 மணித்தியாலங்கள் 15 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கு ஆதரவாக இன்று அநுராதபுரத்தில் இடம்பெறவுள்ள கூட்டத்தில் கலந்துக் கொள்ள வருபவர்களுக்காக ஆங்காங்கே புல், புண்ணாக்கு மற்றும் தவிடு நீர் போன்றவை பிரதேசவாசிகளால் வைக்கப்பட்டுள்ளது. 

நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலை குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (11) இரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

ராஜபக்ச அரசியல் முடிவுக்கு வரும் என ராஜபக்ச குடும்பத்தின் முன்னாள் ஜோதிடர் சுமனதாச அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

அவர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd