நீதி அமைச்சரின் கடமை வழக்குகளை விசாரணை செய்வதோ அல்லது வழக்குகளை முன்னெடுப்பதோ அல்ல என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
“அதற்காகவே பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவு உள்ளது. சட்டமா அதிபர் திணைக்களம் வழக்குகளை முறையாக விசாரணை செய்ய உள்ளது. மனித மற்றும் தொழில்நுட்ப வசதிகளை உருவாக்கி அவர்களின் பங்கை விரைவாக நிறைவேற்றுவது நீதி அமைச்சரின் பொறுப்பாகும்.
அரசியல் வாதிகள் தொழில் முடிவுகளில் தலையிடக் கூடாது. அதை வெற்றிகரமாகச் செய்வதற்கு நமது நாட்டின் சட்ட அமலாக்க அமைப்புகளுக்குத் தேவையான ஆதரவை வழங்க வேண்டும்."
சந்தையில் அரிசிக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக இலங்கையில் உள்ள பெரிய பல்பொருள் அங்காடிகள் அரிசியின் வெளியீட்டை கடுமையாக மட்டுப்படுத்தியுள்ளதுடன் ஒருவருக்கு மூன்று கிலோ அரிசியை மாத்திரமே விடுவிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஒருவருக்கு சம்பா, நாடு, கெக்குலு போன்ற மூன்று கிலோ அரிசி மாத்திரமே விடுவிக்கப்படும் என ஏற்கனவே காட்சிப்படுத்தியிருந்தமை காணப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியலில் இருந்து நாடாளுமன்றத்துக்கு பிரவேசித்து எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்கவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதற்கு மேலும் பல சமகி ஜன பலவேக எம்.பி.க்கள் ஆதரவளிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
சஜித் பிரேமதாசவுடன் இணைந்து தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு குறிப்பிடத்தக்க சித்தாந்த சவாலை முன்வைக்க முடியாது என அந்த எம்.பி.க்கள் குழுவின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் கருதுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
அந்த நிலைமையின் அடிப்படையில் அவர்களில் ஒரு குழு ரணில் விக்கிரமசிங்கவின் எதிர்க்கட்சித் தலைமையின் கீழ் செயற்பட தீர்மானித்துள்ளதாகவும் அறியமுடிகிறது.
புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப்பட்டியலுக்கு நியமிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவி விலகியதையடுத்து, அந்த வெற்றிடத்துக்காக ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்திற்குள் நுழையும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.
புதிய ஜனநாயக முன்னணி தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகர பொருத்தமானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே இது தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், அனுபவமிக்க தலைவரான முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன அதற்கு பொருத்தமானவர் என பந்துல குணவர்தன கருத்து தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தான் பொருத்தமானவர் என நிமல் லான்சா அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்ற இந்த சந்திப்பு இணக்கப்பாடு இன்றி நிறைவடைந்தது.
அரசாங்கத்தில் எம்.பி.யின் சம்பளம் குறித்த உண்மையான கதையை இலங்கை நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனை கூறியுள்ளார்.
தற்போது, ஒரு எம்.பி.க்கு கிட்டத்தட்ட 54,000 உதவித்தொகை பெற உரிமை உள்ளது, இது தவிர, நாடாளுமன்றக் கூட்டங்கள் நடைபெறும் நாட்களில் வருகைப் படியாக 2,500 ரூபாயும், கூட்டங்கள் நடைபெறாத நாட்களில் குழுக்களில் கலந்துகொள்வதற்காக உதவித்தொகையாக 2,500 ரூபாயும் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.
எரிபொருள் கொடுப்பனவு தூரத்தை அடிப்படையாகக் கொண்டது, இது ஒரு சூத்திரத்தின்படி கணக்கிடப்படுகிறது என்றும் அவர் கூறினார்.
மேலும், பாராளுமன்றத்தில் இருந்து 40 கிலோமீற்றருக்குள் வீடு இல்லாதவர்கள் விண்ணப்பித்து பாராளுமன்ற உறுப்பினர் வீடுகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும், மதிவெலவில் 108 வீடுகள் உள்ளதாகவும் ஆளும் கட்சியின் வேண்டுகோளுக்கு இணங்க திருமதி குஷானி ரோஹணதீர தெரிவிக்கின்றார். கோரிக்கைகளை முதலில் முன்வைக்கும் வரிசையில் வீடுகள் வழங்கப்படும்.
அத்துடன், வீட்டு வாடகையாக ரூபா 2,000 செலுத்தப்படும் எனவும், மின்சாரம் மற்றும் நீர் கட்டணங்களை சம்பந்தப்பட்ட உறுப்பினர் செலுத்த வேண்டும் எனவும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் மேலும் குறிப்பிடுகின்றார்.
மேலும், ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் மருத்துவ வசதிகளை பெற்று கொடுப்பதன் மூலம் கொடுப்பனவுகளில் இருந்து தொகையை குறைக்க பாராளுமன்றமும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சும் இணைந்து வசதிகளை செய்துள்ளதாக செயலாளர் நாயகம் தெரிவித்தார்.
புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள ரவி கருணாநாயக்கவின் வீட்டுக்கு முன்பாக பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அவரது வீட்டின் அருகே பரபரப்பு ஏற்படக்கூடும் என்ற தகவலின் அடிப்படையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 14ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணி 03 மாவட்ட ஆசனங்களைக் கைப்பற்றியதுடன் பெற்ற மொத்த வாக்குகளின்படி இரண்டு தேசியப்பட்டியல் எம்.பி பதவிகளையும் கைப்பற்றியது.
புதிய ஜனநாயக முன்னணியின் செயலாளரினால் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி ஒன்றுக்கு ரவி கருணாநாயக்க பரிந்துரைக்கப்பட்டார்.
இது தொடர்பில் அவர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்ததுடன், அதன் பிரகாரம் புதிய ஜனநாயக முன்னணியின் தேசிய பட்டியல் உறுப்பினராக ரவி கருணாநாயக்கவின் பெயரை தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று (18) வர்த்தமானியில் வெளியிட்டுள்ளது.
எவ்வாறாயினும், புதிய ஜனநாயக முன்னணியின் ஒன்றிணைந்த கட்சிகளின் அனுமதியின்றி கட்சியின் செயலாளர் அவரை தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு பரிந்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்த வகையில் செயலாளர் தன்னிச்சையாக செயற்பட்டுள்ளதாக புதிய ஜனநாயக முன்னணியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அந்த முன்னணியின் பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளார்.
தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ரவி கருணாநாயக்கவின் நியமனம் வழமையானதல்ல என அந்த முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் பல கட்சிகள் தெரிவித்துள்ளன.
மேலும் ரவி கருணாநாயக்கவின் பெயர் நாடாளுமன்றத்தின் தேசியப்பட்டியலில் உள்ளடக்கப்பட்டமை தொடர்பில் பல தரப்பினரும் ஆட்சேபனைகளை முன்வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அசாத் சாலி, ரவியின் வீட்டை முற்றுகையிட்டு இந்த முடிவை திரும்பப் பெற முயற்சி எடுக்க வேண்டும் என்றார்.
ரவி கருணாநாயக்கவின் வீட்டிற்கு முன்பாக பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக இன்று சில குழப்பங்கள் ஏற்படும் என ஊகிக்கப்படுவதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
நாடாளுமன்றத்தின் அதிக செலவைக் குறைக்க, எம்.பி.க்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை குறைக்க அரசு திட்டமிட்டுள்ளது.
இதனை வழிநடத்துவதற்கு இலங்கை நிர்வாக சேவையின் ஓய்வுபெற்ற அதிகாரியின் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எம்.பி.க்கள் இதுவரை அனுபவித்து வந்த வாகன கொடுப்பனவு, ஓய்வூதியம், வீடமைப்பு கொடுப்பனவு மற்றும் ஏனைய நிதி சலுகைகளை குறைப்பதற்கான பிரேரணையை இந்த குழு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளது.
பாராளுமன்றத்தின் வருடாந்த வரவுசெலவுத் திட்டம் 4-5 பில்லியன் ரூபா வரம்பில் உள்ளது, பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் சலுகைகளுக்காக மட்டும் ஒரு பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது என பாராளுமன்ற புள்ளிவிபரங்கள் வெளிப்படுத்துகின்றன.
புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவிப் பிரமாணம் ஆரம்பமாகியுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் புதிய அமைச்சரவை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து வருகின்றனர்.
அதற்கமைய;
1.ஹரிணி அமரசூரிய-(பிரதமர்) – கல்வி,உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர்
2.விஜித ஹேரத்-வெளிநாட்டு அலுவல்கள்,வௌிநாட்டு வேலைவாய்ப்பு,சுற்றுலாத்துறை
3.சஞ்சன அபேரத்ன -பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள்
4.ஹர்ஷண நாணயக்கார- நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு
5.சரோஜா சாவித்திரி போல்ராஜ்- மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் விவகாரம்
6.கே,டி.லால்காந்த -விவசாயம் ,கால்நடைகள்,காணி மற்றும் நீர்ப்பாசனம்
7.அநுர கருணாதிலக – நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு
8.ராமலிங்கம் சந்திரசேகர் – கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள்
9.உபாலி பன்னிலகே – கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை
10.சுனில் ஹந்துன் நெத்தி-கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி
11.ஆனந்த விஜயபால-பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள்
12.பிமல் ரத்நாயக்க-போக்குவரத்து-நெடுஞ்சாலைகள்
13.ஹினிதும சுனில் செனவி – புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள்
14.நளிந்த ஜயதிஸ்ஸ- சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சு
15.சமந்த வித்யாரத்ன – பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு
16.சுனில் குமார கமகே- இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை
17.வசந்த சமரசிங்க – வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி
18.கிருஷாந்த சில்வா அபேசேன – விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம்
19.அணில் ஜயசுந்தர பெர்னாண்டோ-தொழில் அமைச்சர்
20.குமார ஜெயக்கொடி -வலுசக்தி அமைச்சர்
21.டாக்டர் தம்மிக்க பட்டபெந்தி- சுற்றாடல் அமைச்சர்
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை இன்று(18) பதவிப் பிரமாணம் செய்துகொண்டது.
பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய கல்வி, உயர்கல்வி, தொழிற்கல்வி அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
விஜித ஹேரத் வௌிவிவகாரம், வௌிநாட்டு வேலைவாய்ப்பு, சுற்றுலா அமைச்சராகவும் பேராசிரியர் சந்தன அபேரத்ன, பொதுநிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சராகவும் பதவிப்பிரமாணம் செய்தனர்.
விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சராக கே.டி லால்காந்த நியமனம் பெற்றார்.
சரோஜா சாவித்ரி போல்ராஜ் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சராகவும் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார - நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இராமலிங்கம் சந்திரசேகரன் கடற்றொழில், நீரியல் வள மற்றும் கடல் வளங்கள் அமைச்சராகவும் நகர அபிவிருத்தி, நிர்மாணம் மற்றும் வீடமைப்பு அமைச்சராக அனுர கருணாதிலக்கவும் பதவியேற்றனர்.
சுனில் ஹந்துன்நெத்தி கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சராகவும் பேராசிரியர் உபாலி பன்னிலகே, கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு, சமூக வலுவூட்டல் அமைச்சராகவும் பதவிப்பிரமாணம் செய்தனர்.
பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சராக ஆனந்த விஜேபாலவும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சராக பிமல் ரத்நாயக்கவும் தெரிவுசெய்யப்பட்டனர்.
பேராசிரியர் ஹினிந்தும சுனில் செனவி புத்த சாசனங்கள், சமய மற்றும் கலாசார விவகார அமைச்சராகவும் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ சுகாதார மற்றும் ஊடக அமைச்சராகவும் நியமனம் பெற்றனர்.
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சராக சமந்த வித்யாரத்னவும் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக சுனில் குமார கமகேவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வசந்த சமரசிங்க வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சராகவும் பேராசிரியர் கிருஷாந்த அபேசேன விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சராகவும் பதவியேற்றனர்.
பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தொழில் அமைச்சராகவும் பொறியிலாளரான குமார ஜயகொடி வலுசக்தி அமைச்சராகவும் டொக்டர் தம்மிக பட்பெதி சுற்றாடல் அமைச்சராகவும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்
மக்கள் வங்கியின் புதிய தலைவராக பேராசிரியர் பீ.என்.டி. பெர்னாண்டோ அவர்கள் 2024 நவம்பர் 18 அன்று மக்கள் வங்கியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற வைபவமொன்றில் கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளதுடன், மக்கள் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரிஃபொது முகாமையாளர் கிளைவ் பொன்சேகா மற்றும் வங்கியின் சிரேஷ்ட முகாமைத்துவ அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்துள்ளனர்.
பேராசிரியர் பெர்னாண்டோ அவர்கள், நிதி, வங்கியியல் மற்றும் உயர் கல்வி ஆகிய துறைகளில் 25 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவத்தைக் கொண்டுள்ளார். கல்விமானாக அவர் கணிசமான பங்களிப்புக்களை ஆற்றியுள்ளதுடன், களனி பல்கலைக்கழகத்தில் நிதியியல் கற்கைப்பிரிவில் பேராசிரியராகவும், அதன் தலைவராகவும் கடமையாற்றியுள்ளார்.
ஆசிரியப்பணியில் 27 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட மகத்தான அனுபவத்துடன், கல்வித்துறையில் ஆற்றியுள்ள முன்னோடிப் பணிகளுக்காக பேராசிரியர் பெர்னாண்டோ அவர்கள் நன்மதிப்பை சம்பாதித்துள்ள அதேசமயம், பல்வேறு புத்தாக்கமான பட்டப்படிப்பு கற்கைநெறிகளை அவர் அறிமுகப்படுத்தியுள்ளதுடன், இலங்கையில் நிதித்துறைக் கல்வியின் தராதரங்களை மேம்படுத்துவதில் அவர் முக்கிய பங்கு வகித்துள்ளார். வணிகம் மற்றும் முகாமைத்துவக் கற்கைகள் பீடத்தின் பீடாதிபதியாக, உலக வங்கியின் யுர்நுயுனு மானிய உதவிகளை வெற்றிகரமாக பெற்றுக்கொண்டமை, களனி பல்கலைக்கழகத்தின் ஆடீயு கற்கைநெறிக்கு ஐளுழு 21001 சான்று அங்கீகாரத்தை ஈட்டியமை போன்றவை அடங்கலாக, பல்வேறு முயற்சிகளை அவர் முன்னின்று வழிநடாத்தியுள்ளார்.
கல்வித்துறையில் அவரது சாதனைகளுக்குப் புறம்பாக, ஊநவெசயட ஊhiயெ ழேசஅயட ருniஎநசளவைல என்ற பல்கலைக்கழகத்தில் அரச பொருளாதாரத்தில் கலாநிதிப் பட்டத்தையும் பேராசிரியர் பெர்னாண்டோ அவர்கள் பெற்றுள்ளார். பிரசித்தி பெற்ற கொழும்புத் திட்ட புலமைப்பரிசில் மூலமாக, மேற்கு வங்காள தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் ஆடீயு பட்டத்தையும் பெற்றுள்ள அவர், களனி பல்கலைக்கழகத்தில் வணிக முகாமைத்துவ (கணக்கியல்) பட்டதாரியும் ஆவார்.
கொழும்பு பங்குச் சந்தை, இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு போன்ற இலங்கையிலுள்ள முன்னணி நிதி நிறுவனங்களில் நம்பிக்கைக்குரிய ஆலோசகராகவும், வளவாளராகவும் பேராசிரியர் பெர்னாண்டோ அவர்கள் சேவையாற்றியுள்ளார்.
இலங்கையிலுள்ள மிகவும் நன்மதிப்பிற்குரிய நிதி நிறுவனங்களில் ஒன்றுக்கு தலைமை தாங்கும் வாய்ப்பு கிடைத்தமைக்காக தனது நன்றிகளையும் இவ்வைபவத்தின் போது பேராசிரியர் பெர்னாண்டோ அவர்கள் வெளிப்படுத்தினார். தேசத்தில் பரிணாம மாற்றம் கண்டு வருகின்ற தேவைகளுக்கு உதவுவதில் டிஜிட்டல் வளர்ச்சியை மேம்படுத்தி, வாடிக்கையாளரை மையமாகக் கொண்ட வளர்ச்சியை முன்னெடுத்து, வலுவான மற்றும் இன்னும் கூடுதலான அளவில் நிலைபேறு கொண்ட வங்கி வலையமைப்பாக மக்கள் வங்கியைத் திகழச் செய்வது குறித்த தனது இலக்கினையும் அவர் வலியுறுத்தினார்.