web log free
May 03, 2024

தடுப்பூசி போடுவதில் ஏனைய நாடுகளை பின்னுக்குத்தள்ளி கடந்த வாரம் இலங்கை முதலிடத்தை பிடித்துள்ளது.

உலகெங்கிலும் உள்ள தடுப்பூசி திட்டத்தின் முன்னேற்றத்தை ஆராயும் Our World in Data இணையத்தளம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

நாட்டின் மக்கள் தொகையில் 13 சதவிகிதம் பேருக்கு கடந்த வாரம் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டது என World in Data-வின் தலைவர் தனது டுவிட்டர்  மூலம் சுட்டிக்காட்டினார். இதன்படி,

ஈக்வடார் 12.5 சதவிகிதத்துடன் இரண்டாவது இடத்திலும்

புருனே 11.7 சதவிகிதத்துடன் மூன்றாவது இடத்திலும்

நியூசிலாந்து 11.6 சதவிகிதத்துடன் நான்காவது இடத்திலும்

கியூபா 11.2 சதவிகிதத்துடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி தலைவர்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அமைச்சரவை கூட்டத்தில் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.


கொவிட் தொற்றினை தடுப்பதற்காக 3 வாரங்கள் நாட்டை மூடுமாறு ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பிவிட்டு அதனை ஊடகத்திடம் வழங்கிய கட்சி தலைவர்களையே மஹிந்த இவ்வாறு எச்சரித்துள்ளார். நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த கட்சி தலைவர்களுக்கு பிரதமர் கடுமையான அறிவுரைகளையும் வழங்கியுள்ளர்.


நாட்டை மூட வேண்டாம் என அமைச்சரவையில் இணக்கம் வெளியிட்டு வெளியே சென்று எதிர்ப்பு வெளியிடுவது பொருத்தமான செயல் அல்ல என பிரதமர் குறிப்பிட்டுள்ளார். எதிர்ப்பு என்றால் வாயை மூடிக்கொண்டு இருக்காமல் அமைச்சரவையில் அதனை கூறியிருக்கலாம். ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியது தவறு இல்லை என்ற போதிலும் அதனை ஊடகங்களிடம் வழங்குவது தவறு என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்

 

Page 2 of 2