2022 ஐபிஎல் மெகா ஏலம் பெங்களூருவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் மார்கியூ எனப்படும் நட்சத்திர வீரர்கள் விற்பனை நிறைவு பெற்ற நிலையில் இரண்டாம் சுற்று ஏலம் தொடங்கி நடந்துவந்தது. இலங்கை வீரர் ஹசரங்கா ஏலம் நடந்துகொண்டிருக்கும்போது ஏலத்தை நடத்தி வந்த ஹேமர்மேன் ஹக் எட்மீட்ஸ் மேடையிலேயே மயக்கமடைந்ததையடுத்தால் தடைபட்டது. பின்னர் உணவு இடைவேளை அறிவிக்கப்பட்டு, எட்மீட்ஸ்க்கு பதிலாக சாரு ஷர்மாவை ஐபிஎல் நிர்வாகம் புதிய ஏலம் நடத்துபவராக அறிவித்தது.
அதிகபட்ச விலைக்கு ஏலம் போன இரண்டாவது வீரர்:
இதுவரையிலான ஏலத்தில் இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் அதிகபட்சமாக ரூ.12.25 கோடிக்கு கொல்கத்தா அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். அவருக்கு அடுத்த இடத்தை இலங்கை வீரர் வனிந்து ஹசரங்கா பிடித்துள்ளார். இவரை ஏலத்தில் எடுக்க கடும் போட்டி நிலவியது. ரூ.1 கோடி அடிப்படையில் தொடங்கிய இவரின் தொகை இறுதியாக ரூ.10.75 கோடியில் முடிந்தது. கடந்த சீசனில் இவரை எடுத்திருந்த பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியே இந்தமுறையும் இத்தனை கோடி கொடுத்து எடுத்தது.
தமிழக வீரருக்கு டிமான்ட் :
ஆல் ரவுண்டர்கள் வரிசையில் அடுத்ததாக ஏலம் விடப்பட்டவர் தமிழகத்தைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர். அடிப்படை விலையான ரூ.1.50 கோடி தொடங்கிய அவரின் ஏலத் தொகை ரூ.8.75 கோடியில் முடிந்தது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அவரை எலாம் எடுத்தது.
லக்னோ அணியில் குர்னால் பாண்டியா:
இந்திய அணி ஆல் ரவுண்டர் குர்னால் பாண்டியாவை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ரூ.8.25 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் ஆரம்பத்தில் இவரை எடுக்க ஆர்வம் காட்ட, பின்னர் குஜராத் அணியும் போட்டியில் இறங்கியது. இறுதியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அவரை எடுத்து.
ஐபிஎல் ஏலம் 2022 - இதுவரை...
> ஸ்ரேயாஸ் ஐயர் - ரூ.12.25 கோடி (கொல்கத்தா)
> ட்ரென்ட் பவுல்ட் - ரூ.8 கோடி (ராஜஸ்தான்)
> ஷிகர் தவானை ரூ.8.25 கோடி (பஞ்சாப்)
> அஸ்வின் ரூ.5 கோடி (ராஜஸ்தான்)
> ரபாடாவை ரூ.9.25 கோடி (பஞ்சாப் )
> முகமது ஷமி - ரூ.6 கோடி (குஜராத்)
> டி காக் - ரூ.6.75 கோடி (லக்னோ)
> டு ப்ளேசிஸ் - ரூ.7 கோடி (பெங்களூரு)
> டேவிட் வார்னர் - ரூ.6.25 கோடி (டெல்லி)
> மணிஷ் பாண்டே - ரூ.4.60 கோடி (லக்னோ)
> ஷிம்ரோன் ஹெட்மெய்ர் - ரூ.8.50 கோடி (டெல்லி)
> ராபின் உத்தப்பா - ரூ.2 கோடி (சென்னை)
> ஜேசன் ராய் - ரூ.2 கோடி (குஜராத்)
> தேவ்தூத் படிக்கல் - ரூ.7.75 கோடி (ராஜஸ்தான்)
> ப்ராவோ - ரூ.4.40 கோடி (சென்னை)
> நிதிஷ் ரானா - ரூ.8 கோடி (கொல்கத்தா)
> ஜேசன் ஹோல்டர் - ரூ.8.75 கோடி (லக்னோ)
ஹர்ஷால் படேல் - ரூ.10.75 கோடி (பெங்களூரு)
2022 ஏலம் தொடங்குவதற்கு முன்பு ஐபிஎல் அணிகள் வசமிருந்த ஏல இருப்புத் தொகை விவரம்:
> பஞ்சாப் கிங்ஸ் (PBKS): ரூ.72 கோடி
> சன்ரைஸர் ஹைதராபாத் (SRH): ரூ.68 கோடி
> ராஜஸ்தான் ராயல்ஸ் (RR): ரூ.62 கோடி
> லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (LSG): ரூ.59 கோடி
> ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB): ரூ.57 கோடி
> குஜராத் டைட்டன்ஸ்:ரூ.52 கோடி
> சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK): ரூ.48 கோடி
> கொல்த்தா நைட் ரைடர்ஸ் (KKR):ரூ.48 கோடி
> மும்பை இந்தியன்ஸ் (MI):ரூ.48 கோடி
> டெல்லி கேப்பிடல்ஸ் (DC): ரூ.47.5 கோடி
ராமேசுவரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி மதிப்பிலான கோக்கைன் போதைப் பொருளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக காவலர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராமேசுவரத்தில் இருந்து இலங்கைக்கு போதைப் பொருள் கடத்த இருப்பதாக ராமநாதபுரம் மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவுபோலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, கடந்த வியாழக்கிழமை ராமேசுவரத்தில் தீவிர ரோந்து பணியை போலீஸார் மேற்கொண்டனர்.
ராமேசுவரம் பேருந்து நிலையம்அருகே போலீஸாரைக் கண்டதும்தப்பி ஓட முயன்ற 5 பேரைச் சுற்றிவளைத்து பிடித்து சோதனையிட்டதில், அவர்களிடம் அரசால் தடை செய்யப்பட்ட 1.5 கிலோ கோக்கைன் எனும் கொடிய போதைப் பொருள் இருந்தது தெரியவந்தது.
தொடர்ந்து போலீஸார் நடத்தியவிசாரணையில் அவர்கள் சிவகங்கை மாவட்டம் மேலப்பூவந்தியைச் சேர்ந்த சூர்யகுமார் (27), பாம்பனைச் சேர்ந்த மனோஜ் (20), சாதிக்(36), ராமேசுவரத்தைச் சேர்ந்த முகம்மது இஸ்மாயில் (32), அங்குராமர் (36) எனத் தெரியவந்தது. இவர்கள் அளித்த தகவலின்பேரில் தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் சரகம் காடல்குடி காவல் நிலையத்தில் காவலராக பணிபுரியும் ராமேசுவரத்தைச் சேர்ந்த பாலமுருகன் (31), பாம்பனைச் சேர்ந்த சம்பத்ரேமண்ட் (23), ஜோசப் பாஸ்டின்குமார் (23), ஆகியோரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த கோக்கைன் போதைப் பொருளை மதுரையில் இருந்து பேருந்து மூலம் ராமேசுவரம் கொண்டு வந்து அங்கிருந்து படகு மூலம் இலங்கைக்கு கடத்தவிருந்தது தெரியவந்தது.
ராஜபக்ச குடும்பத்தில் மகிந்த ராஜபக்ச மட்டுமே நன்றியுடையவர் எனவும் குடும்பத்தின் சிறப்பை அறிந்தவர் எனவும் பசில் ராஜபக்சவின் தகுதி தெரிந்ததால் அவர் பற்றி பேசக்கூட விரும்பவில்லை எனவும் நாரஹேன்பிட்டி அபயராம பீடாதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவருவதற்கு முன்வந்த விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில மீது அவதூறு பரப்புவது நன்றிகெட்ட செயல் என முருந்தெட்டுவே ஆனந்த தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள சமன் ரத்னபிரிய அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கத்தின் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் சமன் ரத்னபிரிய ஒரு பாம்பு எனவும் அவர் கூறுகிறார்.
இணையத்தளமொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஆனந்த தேரர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
காதல் தவிர்க்க முடியாதது. இயற்கையாக எழும் உணர்வும் கூட. பசி, தாகம் போல காதலும் நமக்கான உணர்வுதான். அனைத்து உயிர்களின் இலக்கும் ஏதோ ஒரு வழியில் காதலை சுற்றியே நகர்ந்து கொண்டிருக்கும். காதலில் கசிந்துருக உடலுக்கும், மனதுக்கும் சக்தி தரக்கூடிய ஆரோக்கியமான உணவும் முக்கியம். காதலை தூண்டும் உணவுகள் பற்றி பார்ப்போமா...
தக்காளி -காதலுணர்வையும், பாலுணர்வையும் தூண்டக்கூடிய சத்துக்கள் இதில் உள்ளதால், ‘லவ் ஆப்பிள்’ என்று பெயர் பெற்றது. தோற்றத்திலும் கவர்ச்சிகரமான உணவு இது.
கிவி- இதில் போலேட் சத்துக்கள் நிறைந்துள்ளன. குழந்தை பேறுக்கு திட்டமிடும் பெண்கள் அவசியம் சாப்பிடவேண்டிய பழம் இது. உடலுக்கு சக்தி கொடுக்கும். குழந்தையும் ஆரோக்கியமாக பிறக்கும்.
லெட்யூஸ்- முட்டைகோஸ் போன்ற தோற்றமுடைய இது பல வகை வைட்டமின்கள் நிறைந்திருக்கும் கீரை. இதன் சாறு, நரம்புகளை அமைதிப்படுத்தக்கூடியது. பதற்றம், பயம், கவலை ஆகியவை நீங்கி நல்ல உணர்வுகளை உருவாக்கும். காதல் உணர்வை தூண்டும்.
பட்டாணி- ‘மூட் ஸ்விங்ஸ்’ என்று சொல்லக்கூடிய இது மன ஊசலாட்டத்தைக் கட்டுப்படுத்தும். ஆன்டிஆக்சிடென்ட் நிறைந்த உணவுகளுக்கு மனச்சோர்வுக்கான அறிகுறிகளை போக்கும் தன்மை உண்டு. இதுவும் அந்த வகையை சேர்ந்ததுதான். மனச்சோர்வை குறைப்பதுடன், காதல் உணர்வுக்கும் வழி அமைத்துக் கொடுக்கும்.
மாதுளை -மாதுளையைப் பழமாகவோ, ஜூஸாகவோ தொடர்ந்து அருந்தி வர, ஆண்களின் உடல் வலிமை பெறும். காதலுக்கு மட்டுமல்ல, இல்லற வாழ்க்கைக்கும் மிகவும் ஏற்றது.
டார்க் சாக்லேட்- செரோட்டொனின் என்ற ஹார்மோனை தூண்டுவதில் டார்க் சாக்லேட்டுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. இதயத்துக்கு சீரான ரத்த ஓட்டத்தை அளித்து, ரத்த நாளங்களுக்கு ஓய்வைக் கொடுக்கும். இதனால், பாலியல் உணர்வை சீராக தூண்ட உதவும்.
காபி-காபியில் உள்ள காபின் தற்காலிக எனர்ஜியைத் தரக்கூடியது என்பதால் ஆண், பெண் இருவருமே பால் மற்றும் சர்க்கரை சேர்க்காத காபியை அருந்தலாம். காதல் உறவுக்கு எனர்ஜி தரும் அற்புத பானம் இது.
தர்பூசணி- இந்தப் பழத்தை, ‘நேச்சுரல் வயாகரா’ என சொல்லலாம். இதில், அமினோ ஆசிட் சிட்ருலீன் எனும் சத்து, வயாகராவுக்கு இணையான பலன்களை தர வல்லது.
ஆப்பிள்- ஆப்பிளில் உள்ள பைட்டோ ஈஸ்ட்ரோஜன், பாலி பீனால்ஸ், ஆன்டி ஆக்சிடென்ட் ஆகியவை காதல் உணர்வை தூண்டக்கூடியவை. உடலுக்கு அதிக சக்தியை தரக்கூடியவை. இது, திருமணமான பெண்களுக்கு மிகவும் நல்லது.
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, ஈபிஎப் மற்றும் ஈடிஎப் மீதான வரிக்கு தனது எதிர்ப்பை நாடாளுமன்றத்தில் தெரிவித்ததையடுத்து, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரச்சாரச் செயலாளர் சாந்த பண்டார " முன்னாள் ஜனாதிபதியும் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பிய பின்னர் கட்சியின் மத்திய மற்றும் நிர்வாகக் குழுக்கள் கூடி இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடி என்ன செய்வது என்பது குறித்து முடிவு செய்யும் எனத் தெரிவித்தார் .
இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கை தொடர்பாக, இன்று (சனிக்கிழமை) கலந்துரையாடலொன்று இடம்பெற உள்ளன.
பெப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் ஆகிய மாதங்களில் மின்சார துண்டிப்புக்கான அனுமதியை வழங்குவதா? இல்லையா? என்பது தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் இலங்கை மின்சார சபையின் உயர் அதிகாரிகளுக்கு இடையில் குறித்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
இதேவேளை பொதுமக்கள் மின் நுகர்வை குறைக்க வேண்டும் நாளொன்றுக்கு 300 மெகாவோட் மின்சாரத்தைக் குறைக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னாயக்க வேண்டியுள்ளார்.
குறித்த விடயத்தில் ஒத்துழைப்பு வழங்கினால் மின்சாரத்தை தடையின்றி வழங்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார் .
மாகாணசபை தேர்தல் சட்டத்தை திருத்தி, பழைய விகிதாசார முறையில் மாகாணசபை தேர்தலை நடத்தும்படியான யோசனையை அரசுக்கு முன் வைக்க தமிழ் முற்போக்கு கூட்டணி தீர்மானித்துள்ளது.
நீண்ட நாட்களுக்கு பின்னர் நேற்று வியாழக்கிழமை(10) கூடிய தேர்தல் முறை சீர்திருத்த குழுவில் இந்த விடயம் குறித்து தீர்மானிக்கப்பட்டதாக கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
அத்தோடு, உள்ளூராட்சி தேர்தல் முறையிலும் சில சீர்திருத்தங்களை செயற்படுத்தவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
அதன்படி எதிர்வரும் 22ம் திகதி அடுத்த கூட்டம் நடைபெறும்போது, இவை குறித்து ஆய்வு செய்து முடிவுகள் எடுக்கப்படும் எனவும் மனோ கணேசன் மேலும் தெரிவித்தார்.
மேலும் 31 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதன் மூலம் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15,754 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் இன்று புதிதாக 1259 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேஷ ராசிக்காரர்கள் வாரம் ஒரு முறை செவ்வாய்க் கிழமை அன்று சிவன் கோவிலுக்கு சென்று அபிஷேகத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து வருவதால் உங்களுடைய வருமானத்தில் இருக்கும் தடைகள் நீங்கும். செல்வ செழிப்பு ஏற்படும்.
ரிஷப ராசிக்காரர்கள் வேலைக்கு செல்லும் பொழுது வழியில் இருக்கும் பசுக்களுக்கு தானமாக ஏதாவது தீவனத்தை கொடுத்து விட்டு செல்லுங்கள். அருகில் இருக்கும் கடைக்கு சென்று வாழைப்பழம் வாங்கிக் கொடுத்தாலே போதும். உங்கள் வருமானத்தில் இருக்கும் தடைகள் நீங்கி, செல்வ செழிப்பு உண்டாகும்.
மிதுன ராசிக்காரர்கள் உங்கள் வருமானத்தில் இருக்கும் தடைகள் நீங்க அடிக்கடி பெருமாள் கோவிலுக்கு சென்று பச்சைப் பயறு தானம் செய்து வரலாம். அது போல் வீட்டுக்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு வளையல் மற்றும் மஞ்சள், குங்குமம் கொடுத்து வழி அனுப்புவதை வழக்கமாக்கிக் கொள்ளலாம்.
கடக ராசிக்காரர்கள் உங்கள் வீட்டில் வெளிப்புறமான இடங்களில் அல்லது மொட்டை மாடிகளில் மண் சட்டியில் தண்ணீரை எப்பொழுதும் நிரப்பி வையுங்கள். அதனை குடிக்க வரும் பறவைகளுக்கு தாகம் தீர்ந்தால் போதும். உங்களுடைய கஷ்டங்கள் எல்லாம் நீங்கி, செல்வ செழிப்பு உண்டாகும். சிவன் கோவிலுக்கு திங்கள் கிழமையில் பசும்பால் வாங்கி அபிஷேகம் செய்து வரலாம்.
சிம்ம ராசிக்காரர்கள் இரவு தூங்கும் பொழுது தலைக்கு பக்கத்தில் ஒரு செம்பு சொம்பில் தண்ணீரை நிரப்பி வைத்துக் கொள்ளுங்கள். மறுநாள் காலையில் அந்தத் தண்ணீரை உங்கள் வீட்டின் கிழக்குப் பகுதியில் தெளிக்க வேண்டும். இதனால் தோஷங்கள் நீங்கி வருமானம் பெருகும் என்பது ஐதீகம். கிழக்கு பகுதியில் செடிகள் வைத்திருந்தால் அந்த செடிகளுக்கு ஊற்றலாம் நல்ல பலன் கிடைக்கும். செம்பு அல்லது பித்தளை மட்டும் பயன்படுத்துவது உத்தமம்.
கன்னி ராசிக்காரர்கள் புதன் பகவானுடைய பச்சை நிறத்தை புதன் கிழமைகளில் உடுத்திக் கொள்வது அதிர்ஷ்டத்தைத் தரும். புதனுடைய அனுகிரகம் இருந்தால் தான் வருமான தடைகள் நீங்கும். ஒரு சிறு கைகுட்டையாவது அன்றைய நாளில் பயன்படுத்துவது மிகவும் நல்லது. கோவிலில் இருக்கும் பசுக்களுக்கு வெல்லம் கலந்த கோதுமை மாவு கொடுப்பது செல்வ செழிப்பை ஏற்படுத்தும்.
துலாம் ராசிக்காரர்களுக்கு பணம் பல வழிகளில் வந்தாலும், வந்த வழியே சென்று விடும். இந்த சூழ்நிலை மாறி செல்வ செழிப்பு உண்டாக திங்கள் கிழமை தோறும் அபிஷேகப் பிரியரான சிவபெருமானுக்கு இளநீர், பசும்பால், பன்னீர் போன்றவற்றை உங்களால் முடிந்த அளவிற்கு தானம் செய்யலாம்.
விருச்சிக ராசிக்காரர்கள் நிறைய வருமான ரீதியான பிரச்சினைகளை சந்தித்து இருப்பீர்கள். இனி வரும் நாட்களில் வருமான தடைகள் நீங்கி செல்வ செழிப்பு உண்டாக, முருகன் கோவிலுக்கு சஷ்டி நாட்களில் அபிஷேகப் பொருட்கள் மற்றும் கடலை பருப்பு நைவேத்தியம் செய்வது நல்ல ஒரு அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும்.
தனுசு ராசிக்காரர்கள் வெள்ளிக்கிழமை தோறும் மஞ்சள் நிற உடை உடுத்தி, வீட்டில் விஷ்ணு சகஸ்ரநாமம் படிப்பது, படிக்கத் தெரியாதவர்கள் அதனை பாடல்கள் மூலம் ஒலிக்கச் செய்வது நன்மை தரும். பின்னர் ஐந்து முக குத்து விளக்கு ஒன்றில் தாமரை தண்டு திரியை போட்டு, நெய் தீபம் ஏற்றிவர வருமானத்தில் இருக்கும் தடைகள் எல்லாம் நீங்கும். பகைவர் தொல்லை நீங்கி செல்வ செழிப்பும் ஏற்படும்.
மகர ராசிக்காரர்கள் துளசிச் செடியை வளர்ப்பது யோகம் தரும். கட்டாயம் இதை செய்யுங்கள். துளசிச்செடி இல்லாதவர்கள் பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி நல்லெண்ணை தீபம் ஏற்றி வரலாம். துளசி செடி வைத்திருப்பவர்கள் சனிக்கிழமைகளில் துளசி செடிக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வர வருமானத்தில் இருக்கும் தடைகள் யாவும் நீங்கும்.
கும்ப ராசிக்காரர்கள் சனிக்கிழமையில் சனி பகவானை வணங்குவது மிகவும் விசேஷமானது. கோவிலுக்கு சென்று நவகிரக சந்நிதியில் சனிபகவானுக்கு நேராக நீர்க்காமல், ஒரு புறமாக நின்று எள் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். இப்படி தொடர்ந்து சனிக்கிழமையில் உங்களால் முடியும் பொழுது செய்து வந்தால் வருமான தடைகள் நீங்கி செல்வ செழிப்பு ஏற்படும்.
மீன ராசிக்காரர்கள் வியாழக்கிழமையில் தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்து வருவது விசேஷமானது. உங்கள் ராசிக்கு குரு மற்றும் தட்சிணாமூர்த்தி செல்வ செழிப்பை கொடுப்பார்கள். அன்றைய நாளில் மஞ்சள் நிற உடை அல்லது மஞ்சள் கைக்குட்டையாவது கையில் வைத்துக் கொண்டு, இவர்களுக்கு மஞ்சள் நிற நைவேத்தியம் படைத்து வழிபாடு செய்வது யோகத்தை தரும்.
இலங்கையின் 17 ஆவது பல்கலைக்கழகமாக கடந்த ஓகஸ்ட் மாத்தில் இருந்து செயற்பட தொடங்கிய வவுனியா பல்கலைக் கழகத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு துணைவேந்தர் கலாநிதி ரி.மங்களேஸ்வரன் தலைமையில் நடைபெற்றதுடன் இதில் அதிதியாக கலந்து கொண்ட ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ பல்கலைக்கழக பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டினை அங்குரார்ப்பணம் செய்து வைத்ததுடன், பல்கலைக்கழத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மண்டபத்தினையும் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்த்தன, கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், கு.திலீபன், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அதிகாரிகள், அரச அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.