web log free
November 24, 2025
kumar

kumar

பஹல கடுகன்னாவ, கனேதென்ன பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த மேலும் ஒரு நபரின் சடலம் சற்றுமுன்னர் மீட்கப்பட்டுள்ளது. 

அதற்கமைய, இந்த மண்சரிவு அனர்த்தத்தில் இதுவரையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது. 

மேலும் இந்த அனர்த்தத்தில் சிக்கியிருந்த நிலையில் காயமடைந்து மீட்கப்பட்ட 4 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இந்நிலையில் பஹல கடுகன்னாவ, கனேதென்ன பகுதியில் ஏற்பட்ட மண்சரிவின் மீட்பு பணிகள் நிறைவுக்கு வந்துள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தியின் கட்டுப்பாட்டில் உள்ள பதியத்தலாவை பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் இரண்டாவது முறையாக தோற்கடிக்கப்பட்டது.

வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 07 வாக்குகளும் எதிராக 12 வாக்குகளும் கிடைத்தன.

தேசிய மக்கள் சக்தியின் ஏழு உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர், அதே நேரத்தில் சமகி ஜன பலவேகய, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி, சர்வ ஜன பலய மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்தனர்.

மாலத்தீவில் வேலை வாய்ப்புகள் இருப்பதாகக் கூறி, இலங்கை தொழிலாளர்களை ஏமாற்றி, போலி விளம்பரங்களை வெளியிட்டு, நிதி மோசடி செய்யப்பட்டதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

மாலத்தீவில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம் இந்த விஷயத்தை அதன் பணியகத்திற்கு புகாரளித்துள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது.

இந்த கடத்தல்காரர்கள், வாட்ஸ்அப், பேஸ்புக், லிங்க்டின் போன்ற சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி, மாலத்தீவில் வேலை வாய்ப்புகள் இருப்பதாகக் கூறி, பல்வேறு முறைகள் மூலம் மக்களை மாலத்தீவுக்கு அனுப்பி பணம் வசூலித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலத்தீவுக்கு வந்த மக்களுக்கு ரூ.60,000-80,000 வரை மாத சம்பளத்துடன் கூடிய வேலைகளை வழங்குவதாக கடத்தல்காரர்கள் உறுதியளித்துள்ளதாகவும், அவர்கள் ரூ.350,000 முதல் ரூ.500,000 வரை கூடுதலாக பணம் பெற்றுள்ளதாகவும் பணியகம் தெரிவித்துள்ளது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், மாலைதீவிலோ அல்லது வேறு இடங்களிலோ வசிக்கும் இலங்கை கடத்தல்காரர்கள் குழுவினால் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் இத்தகைய பிரச்சாரங்களுக்கு வேலை தேடுபவர்கள் இரையாக வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.

பணியகத்தின் உரிமம் பெற்ற வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் மூலமாக மட்டுமே வேலை வாய்ப்புகளைத் தேடுவது முக்கியம் என்பதையும், சுயதொழில் மூலம் வேலை தேடுபவர்கள் அதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதையும் அனைத்து தரப்பினரும் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும் என்றும் பணியகம் கேட்டுக் கொண்டுள்ளது.

அரசாங்கத்திற்கு எதிராக, இன்று( 21) திட்டமிடப்பட்டுள்ள எதிர்க்கட்சியின் எதிர்ப்பு பேரணியின் ஏற்பாட்டாளர்கள், அந்தப் பகுதியில் அமைந்துள்ள உயர்தரப் பரீட்சை நிலையங்களுக்கு எந்தவித இடையூறும் விளைவிக்காமல் பார்த்துக் கொள்ளுமாறு பொலிஸ் வலியுறுத்தியுள்ளது. 

இந்த நிலையில், நுகேகொடை பகுதியின் மையத்தில் அமைந்துள்ள அனுலா மகளிர் வித்தியாலயம், புனித ஜோன்ஸ் கல்லூரி, புனித ஜோசப் மகளிர் வித்தியாலயம், சமுத்ரா தேவி மகளிர் வித்தியாலயம் உள்ளிட்ட பல பாடசாலைகளில், திட்டமிடப்பட்ட பேரணி நடைபெறும் அதே நேரத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை நடைபெறுவதாக பொலிஸ் அறிவித்துள்ளது.

வடக்கு, வட-மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லி மீற்றருக்கும் அதிகளவான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். 

சப்ரகமுவ, மத்திய, ஊவா, மேல் மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலைமை காணப்படலாம். 

இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களைக் குறைத்துக்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

நுகேகொடை ஆனந்த சமரக்கோன் திறந்தவெளி அரங்கில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள எதிர்க்கட்சி பேரணிக்காக சிறப்பு போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரமுகர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள்,பிரதிநிதிகள், ஆதரவாளர்கள் மற்றும் நிகழ்வில் கலந்துகொள்ளும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

நாவல வீதியில் நுகேகொடை மேம்பாலம் அருகே உள்ள ஹைலெவல் (High level ) சந்திலிருந்து திரையரங்கு எதிரே உள்ள நாவல சுற்றுவட்ட பாதை வரை வாகனப் போக்குவரத்து பிற்பகல் 2.00 மணி முதல் பேரணி முடியும் வரை தடை செய்யப்படும்.

வாகன சாரதிகள் சிரமத்தைத் தவிர்க்க மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

SLPP மற்றும் UNP இணைந்து இந்த எதிர்ப்பு பேரணியை ஒழுங்கு செய்துள்ளன. 

திருகோணமலை மாவட்டத்தில் அண்மையில் சிலை அகற்றப்பட்ட விடயத்தை சிலர் இனப்பிரச்சினையாக மாற்ற முயற்சிப்பதாகவும், அவர்கள் தோல்வியடைந்த அரசியல்வாதிகளின் நிகழ்ச்சி நிரலின்படி செயல்பட்டு குழப்பத்தை ஏற்படுத்த முயல்வதாகவும் வடக்கு கிழக்கிற்கான சிங்கள அமைப்பின் அமைப்பாளர் குற்றம் சாட்டியுள்ளார். ​

இத்தகைய குழப்பவாதிகள் இருவர் கொழும்பில் இருந்து சில தினங்களுக்கு முன்னர் இங்கு வந்து இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அவர்களை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார். ​

திருகோணமலையில் எவ்வித இனப்பிரச்சினையும் இல்லை என்பதை வலியுறுத்திய அவர், இங்குள்ள தமிழர்கள் மற்றும் முஸ்லீம் மக்கள் எமக்கோ அல்லது புத்தர் சிலை வைக்கப்பட்ட விடயத்திற்கோ எதிர்ப்பானவர்கள் அல்ல. எனவே நாட்டு மக்கள் குழப்பமடைய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

சிலரின் அரசியல் அபிலாஷைகளுக்கு யாரும் பலியாக வேண்டாம் என்றும், அவர்களின் குறுகிய மற்றும் இனவாத அரசியலுக்கு திருகோணமலையைப் பயன்படுத்த நாம் அனுமதிக்க மாட்டோம் என்றும் சிங்கள அமைப்பின் அமைப்பாளர் உறுதியாகத் தெரிவித்துள்ளார். ​

தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுத்த கோரிக்கைக்கு அமைவாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் அந்தக் கட்சி பிரதிநிதிகளுக்கும்  இடையிலான சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

மாகாண சபைத் தேர்தல் மற்றும் புதிய அரசியலமைப்பொன்றின் அவசியம் குறித்து இதன் போது ஆராயப்பட்டதோடு, வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தொடர்ந்தும் பழைய அரசியல் தீர்வு  பொருத்தமற்றது என்பதால் அதற்காக புதிய அரசியல் தீர்வை நோக்கிச் செல்ல வேண்டுமென அரசாங்கம் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இங்கு குறிப்பிட்டார். அதற்காக அனைவரின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் ஜனாபதி தெரிவித்தார்.

வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் நீண்ட காலமாக பிரதேச மட்டத்தில் எதிர்கொள்ளும் மீன்படி மற்றும் காணி பிரச்சினைகள்,உட்கட்டமைப்பு வசதி மற்றும் அபிவிருத்தி தேவைகள் என்பன குறித்தும் இதன் போது ஆராயப்பட்டது. பிரதிநிதிகள் முன்வைத்த சில பிரச்சினைகளுக்கு எதிர்காலத்தில் தீர்வு பெற்றுக் கொடுக்குமாறு அதே சந்தர்ப்பத்தில் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்

வடக்கு அபிவிருத்திக்காக அரசாங்கம்  முன்னெடுக்கும் எந்தவொரு திட்டத்திற்கும் தமது கட்சி ஒத்துழைப்பு வழங்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகள் இந்த சந்திப்பில் சுட்டிக்காட்டினர்.

அத்தோடு, இனவாதத்திற்கு எதிராக அரசாங்கம் மேற்கொள்ளும் எந்தவொரு தீர்மானத்திற்கும் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சி என்ற வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக உள்ளது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் இங்கு சுட்டிக்காட்டினார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தி  சி.வி.கே. சிவஞானம் பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ். ஸ்ரீ தரன், எஸ். ராசமாணிக்கம், பி. சத்தியலிங்கம், ஜி. ஸ்ரீ நேசன்,ரீ. ரவிகரன், கே. கோடீஸ்வரன், கே. எஸ். குகதாசன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன்,  ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத்  குமாநாயக்க, ஜனாதிபதியின் சிரேஸ்ட மேலதிகச் செயலாளர் ரோஷன் கமகே ஆகியோரும் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

நுகேகொட பேரணியைப் பார்த்து அரசாங்கம் மிகவும் பயப்படுவதாகவும், அரசாங்கம் போலியான தகவல்களைப் பரப்புவதாகவும், இந்த அவதூறான குற்றச்சாட்டுகள் அனைத்திற்கும் (21 ஆம் திகதி) பதிலளிப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கூறுகிறார்.

பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மேலும் கூறுகையில், 

"இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த சில வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் ஒரு பி அறிக்கையைச் சமர்ப்பித்து, எனது பட்டப்படிப்பை விசாரிக்க ஒப்புதல் பெற்றது. அதன் பிறகு, பல மாதங்களாக இது தொடர்பாக விசாரணைகள் நடந்து வருகின்றன.

இன்று வரை, நீதிமன்றத்திற்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும், வலைத்தளங்கள் சேற்றைப் பரப்புகின்றன. இப்போது அவர்கள் நுகேகொட பேரணியைப் பார்த்து மிகவும் பயப்படுகிறார்கள். அவர்கள் போலியான தகவல்களைப் பரப்புகிறார்கள். இந்த அவதூறான குற்றச்சாட்டுகள் அனைத்திற்கும் (21 ஆம் திகதி) பதில் அளிக்கப்படும்."

நாட்டில் மீண்டும் இனவாதம் ஏற்படுவதற்கு தாம் மட்டும் அல்ல எந்தவொரு இலங்கையரும் இனி அனுமதிக்கமாட்டார்கள் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சின் செலவினத் தலைப்புகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். 

திருகோணமலையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் முழுமையான அறிக்கை கோரியுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். 

இதற்கு 2014 போன்ற காலப்பகுதியில் ஒரு பழைய அனுமதிப்பத்திரம் உள்ளது. 

ஆனாலும், இது ஒரு விகாரை எனக் குறிப்பிடப்பட்டிருந்தாலும், அதன் பிறகு இது ஒரு விகாரையாக அண்மைக் காலத்தில் பயன்படுத்தப்படவில்லை. 

அது ஒரு உணவகமாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. 

அந்த உணவகத்தின் கட்டுமானங்கள் குறித்து ஒரு பிரச்சினை எழுந்தது. அதில் சட்டவிரோத கட்டுமானங்கள் இருப்பதாகக் கூறி, கடற்கரை பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அந்தக் கட்டுமானங்களை அகற்றுமாறு உத்தரவொன்றை பிறப்பித்திருந்தார். 

அந்த உத்தரவுக்கு எதிராக மேன்முறையீடு ஒன்றும் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. 

அதன்பின்னர், நகர அபிவிருத்தி அதிகாரசபையுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலின்போது, தேரர் ஒரு வார கால அவகாசம் தருமாறு கேட்டிருந்தார். 

அந்தக் கால அவகாசம் வழங்கப்பட்டது. அந்தக் கால அவகாசம் 14 ஆம் திகதியுடன் முடிவடைகிறது. 

இந்தச் சம்பவம் 16 ஆம் திகதி தான் எழுகிறது. எனவே, இது ஒரு மத ஸ்தாபனத்தை நிறுவுவது மட்டுமல்லாமல், வேறு ஒரு கதையும் இதற்குள் இருப்பது தெரிகிறது. 

பொது மக்கள் அங்கு ஒரு விகாரை இருக்கிறது என்று நினைக்கலாம். 

இல்லை... அங்கே எவ்வித மத வழிபாடுகளும் இடம்பெறவில்லை. அதுதான் உண்மை. 

சம்பவம் நடந்த பிறகு மாவட்டச் செயலகத்தில் ஒரு கலந்துரையாடல் இடம்பெற்றது. 

அந்தக் கலந்துரையாடலில், அங்கீகரிக்கப்பட்ட நில அளவையாளரைக் கொண்டு நிலத்தைப் பிரித்து, முறையாக அளவீடு செய்து, கடற்கரை பாதுகாப்புத் திணைக்களத்திற்குச் சொந்தமான பகுதி எது, விகாரைக்குச் சொந்தமான பகுதி எது என்பதைக் குறித்துக் கொடுக்க ஒரு இணக்கப்பாடு நேற்று எட்டப்பட்டது. 

தற்போது நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு என்னவென்றால், புதிய கட்டுமானங்கள் எதனையும் மேற்கொள்ள வேண்டாம், இருக்கும் கட்டுமானங்களையும் அகற்ற வேண்டாம், நீதிமன்றம் தீர்ப்பை வழங்கிய பின்னர் தொடர்புடைய பணிகளைச் செய்யலாம் என்பதாகும். 

இப்போது பார்த்தால், இந்தப் பிரச்சினை முடிந்துவிட்டது. இப்போது ஏன் மேலும் ஆடுகிறார்கள் (பிரச்சினை செய்கிறார்கள்)?... அந்த இனவாதக் குழுக்கள் இப்போது எல்லா இடங்களிலும் தீ வைத்துக்கொண்டே செல்கின்றன. 

நாம் மிகவும் உறுதியாக இனவாதத்திற்கு இடமளிக்க மாட்டோம். இந்த நாட்டின் பொது மக்களும் இனவாதத்திற்கு இடமளிக்க மாட்டார்கள். 

எனவே, யாராவது மீண்டும் பழைய இனவாத நாடகங்களை இந்த நாட்டில் உருவாக்க முயற்சித்தால், அது வரலாற்றில் மட்டுமே இருக்கும். அது நிகழ்காலமும் அல்ல, எதிர்காலமும் அல்ல." எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

Page 1 of 587
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd