web log free
March 07, 2026
kumar

kumar

ஈரான் கடற்படைக்கு உட்பட்ட IRIS Bushier என்ற கப்பல் இலங்கையின் கடல் எல்லைக்குள் நுழைந்து திருகோணமலை துறைமுகத்துக்கு வருவதற்கு அனுமதி வழங்கிய ஜனாதிபதி எடுத்த தீர்மானத்தை பாராட்டுவதாக நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மனிதாபிமான காரணங்களின் அடிப்படையில் அந்த கப்பலில் இருந்த 208 பணியாளர் உறுப்பினர்களை கொழும்புக்கு கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

சமூக ஊடக தளமான X (Twitter) இல் வெளியிட்ட செய்தியில், தற்போதைய பிராந்திய பதற்ற நிலைமைகளின் மத்தியில் இலங்கை நடுநிலையான நிலைப்பாட்டை பேணிக் கொள்ளும் முக்கியத்துவத்தை இந்த நடவடிக்கை பிரதிபலிப்பதாக நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தேவையான நேரங்களில் மனிதாபிமான உதவிகளை வழங்குவதுடன், சர்வதேச சட்டத்தின் கீழ் உள்ள தனது பொறுப்புகளை பாதுகாப்பது இலங்கைக்கு மிகவும் அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், வளைகுடா பிராந்தியத்திலும் உலகளாவிய அளவிலும் அமைதி மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்ய மோதலில் ஈடுபட்ட அனைத்து தரப்புகளுக்கும் இடையே உரையாடலை ஊக்குவிக்க இலங்கை அரசு தொடர்ந்து செயல்படும் எனும் நம்பிக்கையையும் அவர் வெளியிட்டார்.

அத்துடன், இந்தியப் பெருங்கடலில் கடல்சார் பாதுகாப்பையும் பாதுகாப்புத் தன்மையையும் உறுதி செய்வதற்காக இந்தியா உள்ளிட்ட பிராந்திய கூட்டாளிகளுடன் அரசு நெருக்கமாக ஒருங்கிணைந்து செயல்படுவது மிகவும் முக்கியமானது என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்.

இலங்கை கிரிக்கெட் குறித்து முக்கிய விடயங்களை 
இலங்கையின் விளையாட்டு துறை அமைச்சர் சுனில் குமார கமகே வெளியிட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தை இடைக்கால குழு (Interim Committee) அல்லது அதிகாரப்பூர்வ அதிகாரி ஒருவரின் கீழ் கொண்டு வருவது குறித்து தற்போது சர்வதேச கிரிக்கெட் சபையுடன் ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.

இது கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகம் மற்றும் மேலாண்மை தொடர்பான பிரச்சினைகளை சரிசெய்யும் முயற்சியின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது.

ICC உடனான இந்த பேச்சுவார்த்தைகள் தொடர்ந்துவருவதால்,
இன்னும் சில முக்கிய தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கைக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலுக்கு உள்ளாகி மூழ்கிய ஈரானிய கப்பலில் இருந்த 84 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

 இதன்படி, காணாமல் போனவர்களைத் தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கடற்படை குறிப்பிட்டுள்ளது.

 ஈரான் கடற்படைக்குச் சொந்தமான 'ஐரிஸ் டேனா' போர்க்கப்பல், இலங்கைக்கு தென்மேற்கே உள்ள ஆழ்கடலில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்டது.

 180 பேர் கொண்ட பணியாளர்களுடன், இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற சர்வதேச கடற்படை அணிவகுப்புப் போர்ப் பயிற்சியில் கலந்துகொண்டுவிட்டு மீண்டும் ஈரான் நோக்கித் திரும்பிக் கொண்டிருந்த போதே இக்கப்பல் இந்த அனர்த்தத்திற்கு முகம் கொடுத்துள்ளது.

 அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து 'டொர்பிடோ' (Torpedo) மூலம் குறித்த கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்கப் பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளார்.

 "சர்வதேச கடற்பரப்பில் பாதுகாப்பாக இருப்பதாக நினைத்துச் செயற்பட்ட ஈரானிய போர்க்கப்பலொன்றை நேற்று அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் மூழ்கடித்தது. அது டொர்பிடோவைப் பயன்படுத்தி மூழ்கடிக்கப்பட்டது. ஒரு அமைதியான மரணம். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் டொர்பிடோவைப் பயன்படுத்தி எதிரிக் கப்பலொன்று மூழ்கடிக்கப்பட்டது இதுவே முதல்முறையாகும். நாங்கள் வெற்றிபெறவே போரிடுகிறோம். நிச்சயமாக, அழிவுகரமான முறையில், எவ்வித மன்னிப்புமின்றி அமெரிக்கா வெற்றிபெறும்," என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் எதிரிக் கப்பலொன்றை டொர்பிடோ மூலம் மூழ்கடித்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 குறித்த தாக்குதல் நடத்தப்படும் விதத்தைக் காட்டும் காணொளியொன்றையும் அமெரிக்கா தற்போது வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பின்னர் ISIS பயங்கரவாத செயற்பாட்டுடன் தொடர்புபட்டுள்ளதாக தெரிவித்து அளுத்கம பகுதியைச் சேர்ந்த மொஹமட் மில்ஹான் எனற இளைஞரை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்தமையினூடாக அவரின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம்  தீர்ப்பளித்துள்ளது.

குறித்த கைது நடவடிக்கைக்கு பொறுப்பான கல்கிசை பொலிஸ் நிலையத்தின் பிரதி பொலிஸ் இன்ஸ்பெக்டர் தனது தனிப்பட்ட நிதியிலிருந்து 30,000 ரூபா இழப்பீட்டையும் அரசாங்கம் 20,000 ரூபா இழப்பீட்டையும் மனுதாரருக்கு வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மனுதாரரின் அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்டதன் பின்னர் உயர் நீதிமன்ற நீதியரசர்களான அர்ஜுன ஒபேசேகர, பிரியந்த பெர்னாண்டோ மற்றும் சோபித ராஜகருணா ஆகியோர் இந்த உத்தரவை பிறப்பித்தனர்.

ஏனைய நீதியரசர்களின் இணக்கத்துடன் தீர்ப்பை அறிவித்த நீதியரசர் சோபித ராஜகருணா 2019 மே 05ஆம் திகதி அத்திடிய பகுதியில் மனுதாரர் கைது செய்யப்பட்டு பின்னர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவித்தார்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒருவரை கைது செய்யும் போது அதற்கான காரணங்களை சந்தேகநபருக்கு பொலிஸார் கட்டாயமாக அறிவிக்க வேண்டும் என மனுதாரர் சுட்டிக்காட்டினார்.

எனினும் தன்னை கைது செய்த சந்தர்ப்பத்தில் அதற்கான காரணங்களை பொலிஸார் அறிவிக்கவில்லை என மனுதாரர் தெரிவித்தார்.

ISIS அமைப்பின் சிந்தனைகளை கடைப்பிடிப்போரின் பட்டியலில் மனுதாரரின் பெயர் 84ஆவது இடத்தில் இருந்ததாக பிரதிவாதிகளான பொலிஸார் மன்றுக்கு அறிவித்தனர்.

இருதரப்பினரின் வாதங்களையும் ஆராய்ந்த நீதிபதிகள் குழாம் மனுதாரரை கைது செய்த சந்தர்ப்பத்தில் போதுமான ஆதாரங்கள் இருப்பதை பிரதிவாதிகள் மன்றுக்கு உறுதிப்படுத்த தவறியுள்ளதாக சுட்டிக்காட்டியது.

அதற்கமைய இந்த கைது நடவடிக்கையால் மனுதாரரின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

காலி கடற்பரப்பிலிருந்து 40 மைல் தொலைவில் விபத்துக்குள்ளான ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான 'IRIS Dena' கப்பலில் 180 பேர் இருந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த கப்பலில் இருந்து இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்ட 32 பேர் காலி கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையின் தேடல் மற்றும் மீட்புப் பகுதிக்குள் இந்த சம்பவம் நடந்ததால், கப்பலில் இருந்த பணியாளர்களை மீட்கும் பணியில் இலங்கை கடற்படை, விமான படையினர் ஈடுபட்டனர்.

1997 முதல் 2012 வரை பிறந்த புதிய தலைமுறை Gen Z, அதற்கு முந்தைய “மில்லேனியல்” (Gen Y) தலைமுறையை விட அறிவுத்திறன் அளவில் குறைந்த நிலையில் உள்ளதாக சமீபத்திய அமெரிக்க ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளதாக பேராதெனிய கல்வி மருத்துவமனையின் வைத்தியர்-நீதியாளர் பாலித பண்டார சுபசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த ஆய்வை நடத்திய நரம்பியல் விஞ்ஞானியும் கல்வியாளருமான ஜெராட் குறே, அமெரிக்காவின் வாணிகம், அறிவியல் மற்றும் போக்குவரத்து தொடர்பான நிலையான செனட் குழுவிற்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.

மனித வரலாறு தொடங்கிய காலத்திலிருந்து தலைமுறையிலிருந்து தலைமுறைக்கு அறிவுத்திறன் அதிகரித்து வந்தது (Flynn effect) எனப்படும் நிகழ்வு, Gen Z தலைமுறையிலிருந்து பின்னடைவு காணப்படுகிறது என்று அவர் வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

தொழில்நுட்ப முன்னேற்றம் கல்வியிலும் பரவலாக பயன்படுத்தப்படுதல் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் காரணமாக, இத்தலைமுறையினரின் மொழித்திறன், கணிதத் திறன், அறிவாற்றல், தர்க்க சிந்தனை மற்றும் பிரச்சினைகளை தீர்க்கும் திறன் ஆகியவை முந்தைய தலைமுறையை விட குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சஹரான் ஹாசிம் தீவிரவாத பாதைக்கு செல்கிறார் என்று நாட்டின் பாதுகாப்பு சபைக்கு எச்சரிக்கை செய்த முன்னாள் புலனாய்வு பிரிவு தலைவர் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டிருப்பது, விடுதலை புலிகளின் வெளிநாட்டு ஆதரவாளர்களை (டயஸ்போரா) திருப்திப்படுத்தும் நோக்கத்திலேயே என தேசிய சுதந்திர முன்னணி தலைவர் மற்றும் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்: 

“புலனாய்வு பிரிவு என்பது பலருடனும் தொடர்பு வைத்திருக்கும். அந்த தொடர்புகள் மூலம் என்ன நடைபெறுகிறது என்பதை அறிந்து கொள்வதே அவர்களின் பணி. இவ்வாறான பெரும் பணிகளை செய்து, அதற்கான புகழை பெற ஊடகங்களில் எப்போதும் தன்னை விளம்பரப்படுத்தாத புலனாய்வு பிரிவு தலைவர் சுரேஷ் சல்லே கைது செய்யப்பட்டு, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை நடத்திய சஹ்ரானுடன் தொடர்பு வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்படுகிறார்,” என அவர் கூறினார்.

மேலும், “சஹ்ரானின் வழக்கில் தற்போது பதவியில் உள்ள நீதியமைச்சர் ஹர்ஷணவே ஆஜராகியிருந்தார். அப்படியானால் அவரையும் கைது செய்யுங்கள். சஹ்ரான்கள் தீவிரவாத பாதைக்கு செல்கிறார்கள் என்று பாதுகாப்பு சபைக்கு எச்சரித்த நபரை சிறையில் அடைப்பது, எல்டிடிஇ டயஸ்போராவை மகிழ்விக்கவே,” என்றும் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

இவ்வாறு அவர் மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தார்.

எரிபொருள் விநியோகம் தற்போது வழமையான நிலைக்கு திரும்பி வருவதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.

இந்நிலையைக் குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், நேற்று (03) காலை 6.00 மணி முதல் 8.00 மணி வரை டீசல் 4 இலட்சத்து 15,740 லிட்டர் விநியோகிக்கப்பட்டதாக கூறினார்.

மேலும், ஓக்டேன் 95 வகை பெட்ரோல் 39,600 லிட்டரும், ஓக்டேன் 92 வகை பெட்ரோல் 4 இலட்சத்து 81,800 லிட்டரும் வெளியிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அரசுக்கு எதிராக அல்லாமல் சிதறியுள்ள எதிர்க்கட்சிக்கு எதிராக புதிய கூட்டணியை அமைக்க உள்ளதாக ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார், 

திப்பட்டுவாவெ ஸ்ரீ சுமங்கள தேரரை சந்தித்த போது அவர் இவ்வாறு தெரிவித்தார். 

தற்போதைய அரசு ஊழல் மற்றும் மோசடிகளின்றி நல்ல பாதையில் பயணித்து வருவதால், தாம் அரசுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்குவதாகவும் ஃபீல்ட் மார்ஷல் குறிப்பிட்டார்.

மேலும், எதிர்க்கட்சியில் உள்ள குழுக்கள் ஒன்று சேர்ந்து இருப்பது மக்களின் நலனுக்காக அல்லாது, தங்களின் சொந்த நலன்களுக்காகவே என முன்னாள் இராணுவ தளபதி தெரிவித்தார்.

Page 1 of 620
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd