web log free
April 26, 2024
kumar

kumar

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக நாட்டின் அபிவிருத்திப் பணிகளை இயன்றவரை முடிக்குமாறு ஆளும் கட்சியின் அமைச்சர்கள் முன்னிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

ஆளும் கட்சிக் குழுக்களின் கூட்டம் நேற்று இரவு ஜனாதிபதியின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில் பிரதமர் தினேஷ் குணவர்தன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசாங்கத்தின் எதிர்கால வேலைத்திட்டம், அபிவிருத்தித் திட்டங்களை அமுல்படுத்துதல் மற்றும் சகல தொகுதிகளுக்கும் அபிவிருத்தித் திட்டங்களைத் தயாரித்தல் தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறும் ஜனாதிபதி கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் தேர்தல்களில் பங்காளி அரசியல் கட்சிகள் எடுக்கும் தீர்மானங்கள் மற்றும் குறிப்பிட்ட உடன்பாடுகளை எட்டுவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் காலம் தேர்தல் காலமாக இருப்பதால் அது தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் ஊடாக 69 மில்லியன் ரூபா எம்.பி ஒதுக்கீடாக கிடைத்ததாகவும், அதற்குரிய நிதி ஒதுக்கீடு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பரவலாக்கப்பட்ட நிதியிலிருந்து ஒதுக்கப்படுவதாகவும் சமகி ஜன பலவேகய நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

தான் மட்டுமன்றி மற்றும் பல எம்பிக்கள் குழுவும் இவ்வாறு பணம் பெற்றுள்ளதாகவும், தான் உள்ளிட்ட சிலரின் பெயர்களை மட்டும் முன்னிலைப்படுத்தி அரசியல் மோதலை ஏற்படுத்த சிலர் முயற்சிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவை சந்திப்பதற்கு தமக்கு எந்த தடையும் இல்லை எனவும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த புனித வெள்ளியன்று கொழும்பில் உள்ள தனது இல்லத்தில் இரவு விருந்திற்கு வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும், ஏனைய விடயங்கள் காரணமாக அவர் கலந்துகொள்ளவில்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்துள்ளார்.

இணைய சேனலொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலிகல் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் உடன்படிக்கைகள் மீறப்படும் பட்சத்தில், பொஹொட்டுவவில் ஜனாதிபதி வேட்பாளராக பிரதமர் தினேஷ் குணவர்தனவை முன்னிறுத்தப் போவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பொஹொட்டுவவில் உள்ள பலம் வாய்ந்த ஒருவரின் வீட்டில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை, ஜனாதிபதிக்கும் பசில் ராஜபக்ஷவுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் பிரதமரும் கலந்துகொண்டமை விசேட அம்சமாகும்.

ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைஸி மத்தள ராஜபக்ஷ விமான நிலையத்தை வந்தடைந்தடைந்தார். இவரை பிரதமர் தினேஷ் குணவர்த்தன வரவேற்றார். 

ஈரானின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தை மக்கள் பாவனைக்கான கையளிக்கும் நிகழ்வில் ஈரான் ஜனாதிபதி கலந்துகொள்ளவுள்ளார். 

இதன் மூலம் மொனராகலை மாவட்டத்தில் 4500 ஹெக்டயர் புதிய விவசாய நிலங்களுக்கும் தற்போதுள்ள 1500 ஹெக்டயர் விவசாய நிலங்களுக்கும் நீர்ப் பாசன வசதி கிடைக்கும்.

அத்தோடு பதுளை, மொனராகலை, ஹம்பாந்தோட்டை பிரதேசங்களின் குடிநீர் மற்றும் தொழிற்சாலை நீர் தேவைகளுக்கு 39 மில்லியன் கன மீற்றர் (MCM)நீரையும் வழங்க முடியும். இதனால் வருடாந்தம் 290 ஜிகாவாட் (290 GWh) மின்சாரத்தை தேசிய மின்சாரக் கட்டமைப்பிற்கு வழங்க முடியும்.

இத்திட்டத்தில், புஹுல்பொல மற்றும் டயரபா உள்ளிட்ட இரு நீர்த்தேக்கங்களை இணைக்கும் 3.98 கி.மீ நீளமான நீர்ச் சுரங்கம் (இணைப்பு சுரங்கப்பாதை), 15.2 கி.மீ நீளமான நீரோட்ட சுரங்கப்பாதை, நிலக்கீழ் மின் நிலையம், சுவிட்ச் யார்ட், பயணப் பாதை மற்றும் அதனுடன் தொடர்புடைய ஏனைய கட்டுமானங்களும் உள்ளடங்கியுள்ளன.

 514 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான இந்த ஒப்பந்தம் 2010 மார்ச் 15 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்தது. ஈரானின் ஏற்றுமதி மேம்பாட்டு வங்கி (EDBI) 2013 வரை 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியிருந்தது.

இருப்பினும், அந்த நேரத்தில் ஈரானுக்கு எதிராக விதிக்கப்பட்ட சர்வதேச தடைகள் காரணமாக அவர்களால் இத்திட்டத்திற்கு தொடர்ந்தும் நிதியளிக்க முடியாமல் போனது. பின்னர் இலங்கை அரசாங்க நிதியைப் பயன்படுத்தி, ஒப்பந்தக்காரரான பராப் நிறுவனத்துடன், திட்டத்தைத் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இலங்கைக்கான விஜயத்தில் ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைஸிக்கு பலத்த பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது. 

தேசிய பாடசாலைகளுக்கான ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பில் கல்வி அமைச்சு சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

தேசிய பாடசாலைகளில் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில வழி ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பாக இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, மார்ச் 2ஆம் திகதி நடைபெற்ற போட்டிப் பரீட்சை பெறுபேறுகளுக்கமைய, ஆட்சேர்ப்பு நேர்முக பரீட்சைகள் ஏப்ரல் 29ஆம் திகதி முதல் மே 9ஆம் திகதி வரை கல்வி அமைச்சில் நடைபெறும்.

இன்று கொழும்பின் சில வீதிகள் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் ஜனாதிபதி இன்று இலங்கை வரவுள்ள நிலையில் இவ்வாறு பாதைகள் மூடப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கட்டுநாயக்கவிலிருந்து கொழும்பு வரையிலான அதிவேக வீதி இன்று(24) பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரை மூடப்பட்டிருக்கும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் நேற்றிரவு (23) விசேட ஊடக அறிக்கை ஊடாக தெரிவித்திருந்தார்.

இந்த காலப்பகுதியில் அதிவேக வீதியில் இருந்து பேலியகொடை, ஒருகொடவத்தை சந்தி, தெமட்டகொடை, பொரளை, D.S.சேனநாயக்க சந்தி, ஹோட்டன் சதுக்கம், ஹோட்டன் சுற்றுவட்டம், கிறீன் பாத், நூலக சுற்றுவட்டம், ஆனந்த குமாரசுவாமி மாவத்தை, லிபர்ட்டி சுற்றுவட்டம், ஆர்.ஏ.டீ.மெல் மாவத்தை, புனித மைக்கல் வீதி, காலி வீதியில் இருந்து கோட்டை வரையான மார்க்கம் மற்றும் ஹில்டன் ஹோட்டல் வரையிலான மார்க்கம் ஆகியன மூடப்பட்டிருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

மொரகஹஹேன, மில்லவ பகுதியில்  உத்தரவை மீறி பயணித்த முச்சக்கர வண்டி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

மொரகஹஹேன டயர் தொழிற்சாலைக்கு அருகாமையில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது முச்சக்கரவண்டிக்குள் இருந்த மற்றுமொரு நபர் தப்பிச் சென்றுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

மே தினத்திற்கு முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவி தமக்கு கிடைக்க வாய்ப்புள்ளதாக சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

மே தின அமைப்பாளர் பதவியும் தமக்கு கிடைக்கும் என தெரிவித்த அவர், இந்த மே தினத்தை அனைத்து தரப்பினரும் உயர் மட்டத்தில் கொண்டாடவுள்ளதாக தெரிவித்தார்.

இபோச பஸ்களை பெற்றுக்கொள்ளுமாறு ஐக்கிய தேசியக் கட்சிக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான பணம் சிறிகொத்தில் இருந்து செலுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

உணவு மற்றும் பானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் வந்தவுடன் குடிக்காமல், திரும்பி வரும்போது குடிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

எதிர்வரும் மே தினக் கூட்டத்திற்கான ஐக்கிய தேசியக் கட்சியின் ஏற்பாட்டுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் அங்கம் வகிக்காத ஒருவருக்கு பதில் தலைவர் பதவி வழங்குவதை சட்டங்கள் தடுக்கும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

இதன்படி, இது தொடர்பில் நாளை நீதிமன்றில் அறிவிக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அக்கட்சியின் பொலிட்பீரோ தற்போது இரண்டாக பிரிந்து இரு கட்சிகளும் செயல் தலைவர்களை நியமித்துள்ளன.

இரண்டு நியமனங்களும் சட்டவிரோதமானது என இரு தரப்பினரும் குற்றம் சுமத்தியமையும் விசேட அம்சமாகும். 

இதேவேளை, கட்சித் தலைமையகத்தின் செயற்பாடுகளை இரு தரப்பினருக்கும் தடைசெய்து, அனைத்துக் கூட்டங்களும் அதற்கு வெளியில் நடத்தப்பட வேண்டுமென மருதானை பொலிஸார் விசேட விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பெண்களை வலுவூட்டலானது SDB வங்கியின் அதன் துவக்கம் முதலான வியாபாரத்திற்கான அணுகுமுறையின் மையமாக விளங்குவதுடன் அதனது நிறுவன சிந்தனாதளத்திலும் ஆழமாக வேரூன்றிய அம்சமாகவும் காணப்படுகின்றது.

வங்கியின் வெற்றிகரமான இருமுக அணுகுமுறையானது நிறுவனத்திற்குள்ளிருந்து பெண்களை வலுப்படுத்தல் மற்றும் வெளியிலிருந்து பெண்களிற்கு ஆதரவளித்தல் என்பவற்றை உள்ளடக்கியுள்ளது.

இவ்வர்ப்பணிப்பானது சமத்துவம், பன்மைத்துவம் மற்றும் உள்ளடக்கல் என்பவற்றிலான வங்கியின் விளம்பரப்படுத்தல்களில் சான்றாவதுடன் உயர் தலைமைத்துவ பதவிகளிலான குறிப்பிடத்தக்க பிரதிநிதித்துவத்தினையும் உள்ளடக்கியதான 48% பெண்களாகக் காணப்படும் அதனது ஊழியப்படையின் உள்ளடக்கத்திலும் பிரதிபலிக்கப்பட்டுள்ளது.

தேசம் முழுவதிலுமான பெண்களை வலுவூட்டுவதற்கு அதனது பரந்த பயணத்துடனாக நிறுவனத்திற்குள்ளான பெண்களை அங்கீகரிப்பதற்கும் அஞ்சலி செலுத்துவதற்குமான அதனது முயற்சிகளை பிணைப்பதான, ஒரு தனித்துவமான இலத்திரனியல் ஊடக பிரச்சாரத்தினை மாதம் முழுவதிலுமாக செயற்படுத்தியுள்ளமையினால் மார்ச் மாதமானது SDB வங்கிக்கு குறிப்பிடத்தக்க முக்கியத்துவமிக்கதாக விளங்கியது.

இப்பிரச்சாரத்தின் ஊடாக, வீரமும் அர்ப்பணிப்பும் மிக்க கதைகளை பகிர்ந்தும், எதிர்ப்பின் பலமிக்க செய்தியை வழங்கியும் SDB வங்கியானது தங்களது நிலைகளிலான பெண்களது அளப்பரிய பங்களிப்புக்களை காட்சிப்படுத்தியிருந்தது.

பிரச்சாரத்தின் ஊடாக வலுவினதும் எதிர்ப்பினதும் செய்திகளை வெளிப்படுத்தியதன் நோக்கமானது அக்கருத்தானது அமோக வரவேற்பினைப் பெற்றும் சமூக ஊடகங்களில் நாடளாவிய ரீதியில் உயர் ஆரோக்கிய அடைவுகளைப் பெற்றுக்கொண்டமையினாலும் அமோக வெற்றியினை அடைந்திருந்தது. பரந்தவொரு பெறுநர்களுடன் பொருளார்ந்த தொடர்புகளை ஏற்படுத்திய இக்கதைகளானவை பல பெண்களில் ஒத்த அதிர்வுகளை ஏற்படுத்தியிருந்தது.

கடந்த பலவருடங்களாக பெண்களை வலுவூட்டுவதனை, குறிப்பாக இலங்கை முழுவதிலுமான பெண் சுயதொழில் வாண்மையாளர்களிற்கான அதன் ஆதரவினை மீள்வரையறுப்பதிலான வங்கியினது தற்போதைய முயற்சிகளிற்கான ஒரு ஊக்கமாக இவ்வெற்றியானது எதிர்பார்க்கப்பட்டது.

கிராமப் புறங்களில் சிறிய மற்றும் நடுத்தர சுயதொழில்வாண்மையாளர்களை முடுக்கிச்செல்லும் ஒரு முக்கிய சக்தியாக, SDB வங்கியானது ஆயிரக்கணக்கான சுயதொழில் வாண்மையாளர்களை அடையாளப்படுத்தல், கல்வியளித்தல், வழிகாட்டுதல் மற்றும் அவர்களது வெற்றிக்குத் தேவைப்படும் நிதியுதவிகளை வழங்குதல் என்பவற்றினால் இலங்கைப் பெண்கள் மத்தியில் சுயதொழில்வான்மையை வினையூக்கப்படுத்தியுள்ளது.

இம்முயற்சிகள் சர்வதேச அங்கீகாரங்களை தேடித்தந்துள்ளதுடன், பெண்களது வலுவூட்டல் துவக்கங்களிற்காக விசேடமாக வடிவமைக்கப்பட்ட யுஎஸ் இன்டர்நேஷனல் டிவலெப்மென்ட் பினான்ஸ் கோர்ப்பரேஷனிடமிருந்து (ஐக்கிய அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனம்) 40 மில்லியன் அ.டொலர் மானியத்தினை சமீபத்தில் பெற்றுக்கொண்டமை போன்ற கணிசமான பால்நிலை நிதியிடல்களில் விளைவினை ஏற்படுத்தியுள்ளது.

பெண்களது வலுவூட்டலிற்கான வலுவான அர்ப்பணிப்புடன், SDB வங்கியானது பெண்கள் வெற்றிகொள்வதற்காக வலுவூட்டப்படும் மற்றும் பொருளாதார அபிவிருத்தி மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு அர்த்தமிகு பங்களிப்புக்களை வழங்கும் மிகவும் உள்ளீர்ப்பும் சமத்துவமும் நிலவும் சமூகமொன்றினை வளர்த்தெடுப்பதினை நோக்கிய முக்கிய நகர்வுகளை மேற்கொள்வதனைத் தொடர்கின்றது.

Page 1 of 426