web log free
March 03, 2026
kumar

kumar

புதிய பிரதமருக்கு உணவு பரிமாறுவதற்கு தயாராகுங்கள் என அலரிமாளிகையின் சமையல்பிரிவை சேர்ந்தவர்களிற்கு பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அலரிமாளிகையின் சமையல்பிரிவை சேர்ந்தவர்களுடன் உரையாடியவேளை புத்தாண்டின் பின்னர் புதிய பிரதமர் அலரிமாளிகைக்கு வருவார் என மகிந்த ராஜபக்ச தெரிவித்தார் என தகவல்கள் வெளியாகின்றன.

எனக்கு சிறந்த முறையில் உணவுவழங்கியதை போல புதிய பிரதமருக்கும் உணவு வழங்குங்கள் என பிரதமர் தெரிவித்தார் என தகவல்கள் வெளியாகின்றன.

நாடு தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடியை தீர்ப்பதற்காக புதிய பிரதமர் நியமிக்கப்படுவார் அரசியல் மோதல் எதுவுமில்லை எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

எனினும் பிரதமரின் ஊடகபேச்சாளர் இந்த செய்தியை உறுதிப்படுத்தவில்லை என இணைய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பசறை பிரதேச சபை உறுப்பினரான ஈசன், தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து  வித்தியாசமான முறையில் தனது எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்.

அண்மையில், ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தில், யாசகம் செய்து தனிமனித எதிர்ப்பை வெளியிட்டிருந்த குறித்த உறுப்பினர், இன்று பசறை பிரதேச சபைக்கு எதிராக மொட்டையடித்து எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

அத்துடன், புண்ணாக்கையும் சமைக்கப்படாத இறைலையும் உண்டு அரசாங்கத்துக்கான எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தினால் நாடு மொட்டை அடிக்கப்பட்டுள்ளதாகவும் இதனை உணர்த்தும் வகையிலேயே தான் மொட்டையடித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் பெரும்பான்மையை இழக்கச் செய்வதாக பாராளுமன்ற உறுப்பினர்களான உதய கம்மன்பில, விமல் வீரவன்ச உள்ளிட்ட அரசாங்கத்தின் 11 பங்காளிக் கட்சிகளின் உறுப்பினர்கள் மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களிடம் இன்று தெரிவித்துள்ளனர்.

அதற்காக அரசாங்கத்தில் இருந்து விலகுவதற்கு மேலும் சிலர் தயாராக இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார, கெவிந்து குமாரதுங்க, டிரான் அலஸ், பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச உள்ளிட்ட 11 கட்சிகளின் பிரதிநிதிகள் இன்று காலை தலதா மாளிகைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் மல்வத்து பீட மகாநாயக்க தேரரை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டனர்.

இதனையடுத்து கருத்துத் தெரிவித்த முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, இந்தியாவுடனான உடன்படிக்கையில், அமைச்சரவைக்கு அதனை சமர்ப்பிக்கும் முன்னரே கையொப்பம் இடப்பட்ட விடயத்திற்கு அதிருப்தி வௌியிட்டார்.

சர்வதேச நாணய நிதியம் தற்போது அமெரிக்க வௌிநாட்டுக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் ஆயுதமாக மாறியுள்ளதாகவும் அது தொடர்பில் தாம் அச்சமடைந்துள்ளதாகவும் திப்பட்டுவாவே ஶ்ரீ சுமங்கல தேரர் குறிப்பிட்டார்.

இதனையடுத்து, குறித்த குழுவினர் மல்வத்து பீட அனுநாயக்கரையும் அஸ்கிரிய பீட மகாநாயக்கரையும் சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டனர்.

நல்லாட்சி அரசாங்கமே நாட்டை தின்றதாகத் தெரிவிக்கும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, நல்லாட்சி அரசாங்கம் தின்றத்தையே நாம் சரி செய்து வருகிறோம் எனவும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தின் நேற்றைய (23) அமர்வில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர், நாட்டு மக்களின் உணவுகளுக்காக அரசாங்கம் வெளிநாடுகளில் யாசம் பெறுவதாக எதிரக்கட்சியினர் எங்களை விமர்சிக்கிறார்கள். யாசகம் எடுத்தாவது நாட்டு மக்களுக்கு உணவளிப்போம் எனவும் தெரிவித்தார். 

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தால் நாட்டுக்கு தேவையான எரிபொருள், காஸ்களை பெற்றுக்கொள்ள முடியாத நிலையே காணப்பட்டது. எனினும் தற்போதைய அரசாங்கத்தில் அவ்வாறான நிலைமைகள் இல்லை எனவும் தெரிவித்தார். 

எவ்வாறாயினும் நாட்டில் காணப்படும் தற்போதையப் பிரச்சினைகள் அனைத்தும் தற்காலிகமானது. இவற்றை தற்போதைய அரசாங்கம் விரைவிலேயே சரி செய்யும் எனவும் தெரிவித்தார். 

ஆப்கானிஸ்தானோடு இலங்கையின் பொருளாதார வளர்ச்சியை ஒப்பிடும் நிலைக்கு நாட்டை நல்லாட்சி அரசாங்கமே தள்ளியது. நல்லாட்சி அரசாங்கமே நாட்டை தின்றார்கள். அவர்கள் தின்றதை நாம் சரி செய்து வருகிறோம் எனவும் தெரிவித்தார்.

இன்று நாட்டில் எட்டு பகுதிகளுக்கு 6 மணித்தியாலங்களுக்கும் அதிகமாக மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

அதன்படி, P, Q, R, S, T, U, V, W வலயங்களுக்கு காலை 08.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை 4 மணி 30 நிமிடங்கள் மற்றும் மாலை 5.30 மணி முதல் இரவு 11.00 மணி வரை 1 மணி 50 நிமிடங்களும் மின் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை, A, B, C, D, E, F, G, H, I, J, K, L வலயங்களுக்கு காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 3 மணி 20 நிமிடங்களும் மற்றும் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை 1 மணி நேரம் 40 நிமிடங்களும் மின் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இன்று நாட்டில் மின்வெட்டினை மேற்கொள்ள இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு தேசிய பொதுப் பயன்பாடுகள் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாண நகரப் பகுதியில் தடை செய்யப்பட்ட போதை பொருள் மாத்திரைகளுடன் மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளர்.

உப பொலிஸ் அத்தியட்சகர் மேனன் தலைமையில் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவால் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளர்.

கைது செய்யப்பட்டவரிடம் இருந்து 3000 சட்டவிரோத போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

நாளை தினமும் (24) நாட்டில் மின்வெட்டினை மேற்கொள்ள இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு தேசிய பொதுப் பயன்பாடுகள் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, P, Q, R, S, T, U, V, W வலயங்களுக்கு காலை 08.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை 4 மணி 30 நிமிடங்கள் மற்றும் மாலை 5.30 மணி முதல் இரவு 11.00 மணி வரை 1 மணி 50 நிமிடங்களும் மின் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை, A, B, C, D, E, F, G, H, I, J, K, L வலயங்களுக்கு காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 3 மணி 20 நிமிடங்களும் மற்றும் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை 1 மணி நேரம் 40 நிமிடங்களும் மின் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

சர்வகட்சி மாநாடு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.

இதில் பிரதமர் மகிந்த ராஜபக்ச, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட பல அரசியல் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டுள்ள போதும் பல முக்கிய கட்சிகள் புறக்கணித்துள்ளதாக தெரியவருகிறது.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட சில கட்சிகள் தாம் இந்த சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்க போதில்லை என ஏற்கனவே அறிவித்திருந்தன.

குறித்த சர்வகட்சி மாநாடானது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் முன்மொழியப்பட்டிருந்த நிலையில் முன்னெடுக்கப்படுகிறது.

இதேவேளை குறித்த மாநாட்டில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உரையாற்றுகையில், இந்த மாநாட்டில் கலந்து கொண்ட கட்சிகளுக்கு நன்றி.

அத்துடன் இந்த சர்வகட்சி மாநாடானது, தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியான சூழ்நிலையிலிருந்து விடுபடுவதற்கான முயற்சி என சுட்டிக்காட்டியுள்ளார்.

 

நாடாளுமன்றில் இன்றைய தினம் அதிரடித் தீர்மானங்கள் எடுக்கப்படக்கூடும் என அரசியல் வட்டாரத் தகவல்களை மேற்கோள் காட்டி தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பெரும்பாலும் முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உள்ளிட்ட பத்து கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் அரசாங்கத்தை விட்டு வெளியேறக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சுயாதீனமாக இயங்கப் போவதாக அறிவித்து ஆளும் கட்சி வரிசையிலிருந்து வெளியேறி எதிர்க்கட்சி ஆசன வரிசையில் இன்று அமரக்கூடும் என தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றைய தினம் கம்யூனிஸ்ட் கட்சி காரியாலயத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமயிலான ஆளும் கட்சிக்குள் பல்வேறு முரண்பாட்டு நிலைமைகள் ஏற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை தமிழ்த் தேசிய கட்சி செயலாளர் சிவாஜிலிங்கம் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை சந்தித்து பேசினார்.

இலங்கை நாடாளுமன்றத்தில் இரண்டு முறை உறுப்பினர் பொறுப்பு வகித்த, தமிழ்த் தேசிய கட்சி செயலாளர் சிவாஜிலிங்கம் தாயகத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்தித்தார்.

தமிழக முதல்வர், அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்து ஒரு தூதுக்குழு அமைத்து, டெல்லி சென்று குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் கட்சித் தலைவர்களை சந்தித்து, தமிழ் ஈழமா அல்லது இலங்கையுடன் சேர்ந்து வாழ்வதா என்ற தலைப்பில் இலங்கையின் வடக்கு கிழக்கு மாநில மக்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனவும் அதற்கு வைகோ உதவி செய்ய வேண்டும் எனவும் கோரினார். 

இருவரும், ஈழத்தமிழர் பிரச்சனை குறித்து நீண்ட நேரம் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd