web log free
May 14, 2025
kumar

kumar

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அலுவலகத்தின் வரிசைகளை குறைக்கும் வகையில் இ-பாஸ்போர்ட் சேவை அறிமுகப்படுத்தப்படும் என அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

கொரிய மொழி புலமை பரீட்சை காரணமாக குடிவரவு குடியகல்வு திணைக்கள அலுவலகத்திற்கு முன்பாக மீண்டும் வரிசைகள் அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே தற்போதுள்ள பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் கொரிய அரசாங்கத்துடன் கலந்துரையாடி பரீட்சையில் சித்தியடைபவர்களுக்கு மட்டும் வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்க எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய அடையாள அட்டையை ஆட்பதிவு திணைக்களத்தின் ஊடாக வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிடுகின்றார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் டிரான் அலஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க இன்று (22) இந்திய உயர்ஸ்தானிகர் ஸ்ரீ சந்தோஸ் ஜாவை சந்தித்தார்.

ஐக்கிய குடியரசு முன்னணியின் ‘எங்கள் தேசத்துக்காக ஒருமைப்பாட்டுடன் ஒரு படி முன்னோக்கிச் செல்வது’ என்ற கையேட்டை உயர்ஸ்தானிகரிடம் வழங்கிய பின்னர் சுமுகமான கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

ஐக்கிய குடியரசு முன்னணியின் தவிசாளரும், விசேட நிபுணருமான கலாநிதி அஜித் அமரசிங்க மற்றும் சர்வதேச உறவுகளின் செயலாளர் சிரேஷ்ட பேராசிரியர் ரோஹன மஹலியனாராச்சி ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பொலிஸ் மா அதிபர் பதவிக்கு தற்போதைய பதில் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனை நியமிப்பதே தமது விருப்பம் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் 26ஆம் திகதியுடன் முடிவடையவுள்ள பதில் பொலிஸ் மா அதிபரின் பதவிக்காலம் மற்றும் நிரந்தர பொலிஸ் மா அதிபர் நியமனம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் கூறியதாவது:

பொலிஸ் மா அதிபர் பதவிக்கு தேஷ்பந்து தென்னகோன் நியமிக்கப்படுவதை நான் பார்க்க விரும்புகிறேன். அதில் பிரச்சனை இல்லை. அரசு தரப்பில் இருந்து எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் அரசியல் நிர்ணய சபை உள்ளது. அவர்கள் வித்தியாசமாக வேலை செய்கிறார்கள். இந்த நாட்டில் தற்போது முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்தை அந்த மக்கள் அனைவரும் அனுமதித்தால் தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட வேண்டும்' என்றும் அமைச்சர் கூறினார்.

எதிர்கால அரசியல் நடவடிக்கைகளுக்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முனைப்புடன் கட்டியெழுப்பி வந்த கூட்டணியின் பணிகள் மீண்டும் விரைவுபடுத்தத் தொடங்கியுள்ளதாக அந்தக் குழுவின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

தற்போது அதன் அரசியலமைப்பு தயாரிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் தலைமைத்துவ சபை அறிவிப்பில் சில சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனால், தற்போது முடிவடைய வேண்டிய கூட்டணியின் துவக்கமும் தாமதமானது.

எவ்வாறாயினும், தற்போது அந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண அவசரமாக பேச்சுவார்த்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

மஹாபாகே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்பிட்டிவல சந்திக்கு அருகில் உள்ள கடையொன்றில் இன்று (21) காலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹெட்டியாராச்சி சுஜித் என்ற 39 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

இன்று காலை 07.15 அளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.

வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தொடரும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிடுகின்றார்.

ஆனால் முன்னுரிமை வகைகளில் வாகனங்களை இறக்குமதி செய்வது குறித்து ஆராய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

சுகாதார அமைச்சுக்கான இருபத்தி ஒரு வாகனம் மற்றும் விமான சேவைக்கு மூன்று வாகனங்கள் உட்பட இருபத்தி ஒரு வாகனங்கள் மட்டுமே அண்மைக் காலத்தில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி தவிசாளர், நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா, கட்சியின் எந்தக் கூட்டத்திலும் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கட்சியின் கொள்கைகளுக்கு கேடு விளைவிப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

பொன்சேகா தனது பதவியை பறிக்க போவதாகக் கூறி கட்சியின் தலைமை, பொதுச் செயலாளர் மற்றும் கட்சியின் பல தலைவர்களுக்கு எதிராக நீதிமன்றில் தடை உத்தரவும் பெற்றுள்ளார்.

இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி குழுவின் கூட்டம் நேற்று பிற்பகல் சூம் தொழிநுட்பத்தின் ஊடாக இடம்பெற்றதாகவும் அதில் பொன்சேகா சம்பந்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

எந்த நேரத்திலும் ஓய்வு பெறத் தயார் என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் ருக்ஷான் பெல்லான தெரிவித்துள்ளார்.

ஏசியன் மிரர் “புதிய பாதை” நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கலந்துரையாடலின் போது, மருத்துவமனை ஊழியர்கள், தொழிற்சங்க ஆர்வலர்கள் மற்றும் அரசியல் அடியாட்களின் நடவடிக்கைகளால் தான் தாக்கப்படுவதாக மருத்துவர் கூறினார்.

எக்காரணம் கொண்டும் மக்களுக்கு நற்பணிகளை தொடர்ந்து செய்வேன் எனவும் ஓய்வு பெற்றால் சுகாதாரத்துறையில் இடம்பெற்று வரும் பல மோசடிகள் ஊழல்களை அம்பலப்படுத்துவேன் எனவும் அந்த நிகழ்ச்சியில் மேலும் கருத்து தெரிவித்தார்.

வெலிக்கடை சிறைச்சாலைக்கு அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று (19) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

காயமடைந்த நபர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெலிக்கடை சிறைச்சாலைக்கு அருகில் ஆனந்த ராஜகருணா மாவத்தையில் அமைந்துள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் 5வது மாடியில் நேற்று இரவு 11 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட ஒருவரே துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சுடுவதற்கு ரிவால்வர் ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

முகமூடி அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த நபரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd