web log free
May 06, 2025
kumar

kumar

இந்த நாட்களில் வாகன இறக்குமதி குறித்து தொடர்ந்து விவாதிக்கப்படுகிறது. கார் கனவு காணும் அனைவரும் எப்பொழுது கார் வாங்க முடியும் என்று காத்துக் கொண்டிருக்கின்றனர்.

எனவே தொடர்ந்து கவனம் செலுத்தும் உங்களுக்காகவே இந்த செய்தி.

வாகன இறக்குமதி தொடர்பில் அரசாங்கமோ அல்லது எந்தவொரு அதிகாரியோ இதுவரையில் குறிப்பிட்ட திகதி எதுவும் அறிவிக்கப்படவில்லை என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பேருந்துகள் மற்றும் லொறிகளை இறக்குமதி செய்வதற்கு டிசம்பர் இறுதி அல்லது எதிர்வரும் ஜனவரி மாதத்திற்குள் அனுமதி வழங்கப்படும் என நம்பப்படுகிறது என அதன் தலைவர் பிரசாத் மானகே செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய உள்ளுராட்சி மன்ற தேர்தல் விரைவில் நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபை தனது மின்சார கட்டண திருத்த முன்மொழிவை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் கையளித்துள்ளது.

தற்போதுள்ள கட்டணங்கள் அடுத்த ஆறு மாதங்களுக்கு தொடரும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபை தனது மின்சார கட்டண திருத்த முன்மொழிவை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் கையளித்துள்ளது.

தற்போதுள்ள கட்டணங்கள் அடுத்த ஆறு மாதங்களுக்கு தொடரும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வல தனது பட்டப்படிப்பை முடித்திருந்தால் அதனை நிரூபிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய சவால் விடுத்துள்ளார்.

அவ்வாறு செய்யத் தவறினால் சபாநாயகர் பதவி விலக வேண்டும் என முகநூல் பதிவில் தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.

சபாநாயகர் பதிலளிக்கத் தவறினால், NPP நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

2025 வருடத்தின் முதல் நான்கு மாதங்களுக்கான அரசாங்கத்தின் இடைக்கால கணக்கு வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்

2025 வருடத்தின் முதல் நான்கு மாதங்களுக்கான அரசாங்கத்தின் இடைக்கால கணக்கு வாக்கெடுப்பு குறித்த தீர்மானம் பாராளுமன்றத்தில் இன்று (06) வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டது.

2025 வருடத்தின் முதல் நான்கு மாதங்களுக்கான அரசாங்கத்தின் பணிகள் மற்றும் கடன் சேவைகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கான அரசாங்கத்தின் இடைக்கால கணக்கு வாக்கெடுப்பு கடந்த 03ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதற்கமைய, நேற்றைய தினமும் (05) இன்றையதினமும் (06) மு.ப 9.30 மணி முதல் பி.ப 5.30 மணி வரை விவாதம் நடைபெற்றது. இன்றைய தினம் விவாதம் முடிவடைந்ததும் குறித்த தீர்மானம் வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேநேரம் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு குறித்து புதிய அரசமைப்பு உருவாக்கத்தின்போதே கவனத்தில்கொள்ள முடியும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்றுப் புதன்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது தமிழரசுக் கட்சி எம்.பிக்கள், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் நீண்ட காலமாக எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியிடம் விளக்கமளித்தனர்.

தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், இராசமாணிக்கம் சாணக்கியன், பத்மநாதன் சத்தியலிங்கம், சண்முகநாதன் குகதாசன், ஞானமுத்து ஸ்ரீநேசன், கவீந்திரன் கோடீஸ்வரன், இளையதம்பி சிறிநாத், துரைராசா ரவிகரன் ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

இது குறித்து சிறீதரன் எம்.பி. ஊடகங்களிடம் தெரிவிக்கையில்,

"இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசினோம். சமஷ்டி அடிப்படையிலான தீர்வு தொடர்பில் புதிய அரசமைப்பு உருவாக்கத்தின்போதே கவனத்தில்கொள்ள முடியும் என அவர் எம்மிடம் குறிப்பிட்டார்.

மாகாண சபைத் தேர்தலை அடுத்த வருட இறுதிக்குள் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எம்மிடம் உறுதியளித்தார்.

அரசமைப்பின் 13ஆவது திருத்தம் தொடர்பில் அவர் எம்மிடம் எதுவும் கூறவில்லை.

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நீதிமன்ற உத்தரவின்படி நடத்த ஏற்பாடு செய்யப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

காணாமல்போனோர் விடயத்தில் தம்மால் உடனடியாக எதுவும் செய்ய இயலாது என்றும், படிப்படியாக அந்த விடயத்துக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

தொல்பொருள் திணைக்களம், வனவளத் திணைக்களம் என்பவற்றின் செயற்பாடுகள் குறித்து தொடர்ந்து பேசுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

காணிகள் விடுவிப்பு தொடர்பிலும் கவனம் செலுத்தப்படும் என்றும் ஜனாதிபதி கூறினார்." - என்றார்.

புதிய ஜனநாயக முன்னணியின் எஞ்சிய தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகள் தொடர்பான இறுதித் தீர்மானம் நாளை (06) அறிவிக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகரவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய ஜனநாயக முன்னணிக்கு ஆதரவு தெரிவித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களின் விசேட கலந்துரையாடல் நேற்று (04) பிற்பகல் இடம்பெற்றது.

மகாவீரர் கொண்டாட்டங்கள் தொடர்பில் தவறான தகவல்களை பரப்பிய குற்றச்சாட்டின் பேரில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நிர்வாக செயலாளர் ரேணுகா பெரேரா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd