web log free
May 06, 2025
kumar

kumar

இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் ஸ்சொமடோ அக்கியோவிற்கும் (Isomata Akio) இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமானுக்குமிடையில் மரியாதை நிமித்தமான சந்திப்பு இடம்பெற்றது.

இச்சந்திப்பின் போது, கடந்த காலங்களில் ஜப்பான் தூதரகம் மலையக மக்களுக்கு பாரிய உதவிகளை வழங்கியது குறித்து செந்தில் தொண்டமான் நினைவூட்டியதுடன், தொடர்ந்தும் மலையக மக்களுக்காக வலுவான உதவிகளை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

மேலும் புதிய ஜப்பான் தூதுவர் தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ள நிலையில், மலையகத்திற்கு முதல் விஜயம் மேற்கொள்ளுமாறு செந்தில் தொண்டமான் அழைப்பு விடுத்துள்ளார்.

மாதாந்த எரிவாயு விலைத்திருத்தம் இன்று(02) அறிவிக்கப்படும் என லிட்​ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் எரிவாயு விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்படவில்லை.

இறுதியாக கடந்த ஒக்டோபர் மாதமே எரிவாயு விலைத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

அதற்கமைய 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை3,690 ரூபாவாக காணப்படுகின்றது.

அதேவேளை லாஃப்ஸ் நிறுவனமும் இன்று(02) தமது எரிவாயு விலைத்திருத்தத்தை அறிவிக்கவுள்ளதாக அந்த நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இலங்கையில் எரிபொருள் விலையை குறைத்தது போன்று உணவுப் பொருள் விலைகளும் குறைக்கப்படும் என பிரதி அமைச்சர் நளின் ஹேவகே தெரிவித்துள்ளார்.

காலியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போது அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் எரிபொருள் விலை சிறிதளவு குறைக்கப்பட்டது போன்று, எதிர்காலத்தில் உணவுப்பொருட்கள் மீதான வரிகளும் குறைக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.  

மேலும், எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் இவ்வாறு விலை குறைப்பு நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஜனாதிபதி உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் அதிகாரபூர்வ இல்லங்களை பெற்றுக்கொள்ளாது சாதாரண வாகனங்களை பயன்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், அமைச்சர்களுக்கு வாகனங்கள் இன்றி செயற்பட முடியாது எனவும் இதனால் சாதாரண வாகனங்கள் பயன்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பண்டிகைக் காலத்திற்காக பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைப்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும் அவர் கூறுகிறார்.

மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அதே வேளையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நிவாரணம் வழங்கி வருகின்றனர் என்றார்.

ஜனாதிபதி நாட்டிற்கு வழங்கிய உறுதிமொழியின் பிரகாரம் எதிர்வரும் மூன்று வருடங்களுக்குள் 30 வீதத்திற்கும் அதிகமான மின்சார கட்டணங்கள் குறைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் வழமை போன்று வாகனங்களை இறக்குமதி செய்யவும், பெப்ரவரி மாதம் முதல் அத்தியாவசிய வாகனங்களை இறக்குமதி செய்யவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனியார் வாகனங்களை இறக்குமதி செய்வதில் மின்சார மற்றும் ஹைபிரிட் வாகனங்களுக்கு முன்னுரிமை அளிப்பது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, குறிப்பிட்ட தனியார் நிறுவனம் ஒன்று வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக முன்பணம் பெற்றுள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி இந்த நிறுவனம் சுமார் 1,700 வாடிக்கையாளர்களிடம் இருந்து லட்சக்கணக்கான ரூபாய் பணத்தை முன்பணமாக பெற்றுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து சங்கம் இதனைக் குறிப்பிட்டுள்ளது.

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பல்பொருள் அங்காடியில் தனியாக ஷாப்பிங் செய்யும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

பிரதமருடன் பெரிய அளவிலான பாதுகாவலர்கள் இல்லை, ஒரே ஒரு பாதுகாவலரை மட்டுமே பார்க்க முடியும்.

தன் கூடையைக் கூட காவலாளியிடம் கொடுக்காமல் தானே சுமந்து வருகிறார்.

பிரதமரின் இந்த எளிய வாழ்க்கை முறை மக்களால் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது.

மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு அமைவாக பாராளுமன்றம் எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பில் அவதானம் செலுத்தி வருவதாக கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித் கர்தினால் தெரிவித்துள்ளார்.

புதிய சபாநாயகர் அசோக ரன்வலவிடம் கர்தினால் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் கொழும்பில் உள்ள பேராயர் இல்லத்திற்கு அவரைச் சந்திப்பதற்காகச் சென்றிருந்த போதே சபாநாயகர் இதனைத் தெரிவித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைப் பணிகளை கர்தினால் பாராட்டியதாகவும் சபாநாயகர் குறிப்பிட்டார்.

76 வருடங்களாக சிதைந்து போன நாட்டை ஒரே நாளில் கட்டியெழுப்ப முடியாது என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்தி வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.

சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர் 90 வினாடிகளுக்கு அவரது அமைச்சு ரூ. 1740 இலட்சம் செலவழிக்கப்பட்டதாகவும் இன்னும் விளம்பரம் வெளியிடப்படவில்லை எனவும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த பணம் விளம்பரத்திற்காக செலவிடப்பட்டதா அல்லது வேறு எங்காவது சென்றதா என்பது எதிர்காலத்தில் விசாரிக்கப்பட வேண்டும் என்றார். 

இந்த நாட்டில் தேவையற்ற விடயங்களை வீண்விரயம் செய்வதை நிறுத்துவதன் மூலம் நாடு சுத்தப்படுத்தப்படும் எனவும் அதனை ஒரே நாளில் எதிர்பார்க்கக் கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் தலையீட்டின் மூலம் இறக்குமதி செய்யத் திட்டமிடப்பட்டுள்ள அரிசி இருப்புக்கள் கிடைக்கப்பெறும் போது நத்தார் பண்டிகை முடிந்துவிடும் என உணவு இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தமக்கு இறக்குமதி செய்ய சந்தர்ப்பம் வழங்கினால் இரண்டு வாரங்களுக்குள் அரிசி இருப்புக்களை இலங்கைக்கு கொண்டு வர முடியும் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் உணவுப் பொருட்களை இறக்குமதி செய்பவர்களுக்கு அரிசியை இறக்குமதி செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் இதுவரை உரிய பதில் வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக அரிசி சந்தையில் கடும் அரிசி தட்டுப்பாடு நிலவுவதாகவும் தெரியவந்துள்ளது. அரிசி நெருக்கடிக்கு தீர்வாக இந்தியாவிலிருந்து 70,000 மெட்ரிக் டன் நாட்டு அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்தது.

சதொச மற்றும் அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தினால் சர்வதேச விலைமனுக்கள் கோரப்பட்டு இந்த அரிசியை இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எவ்வாறாயினும், இந்த அரிசி கையிருப்பு தொடர்பான மாதிரிகள் இலங்கைக்கு வருவதற்கு சுமார் இரண்டு வாரங்கள் ஆகும் என தெரியவந்துள்ளது.

இந்நிலைமையின் அடிப்படையில் இந்தியாவில் இருந்து 70,000 மெற்றிக் தொன் நாட்டு அரிசி கையிருப்பு டிசம்பர் மாத இறுதியில் இலங்கைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால், பண்டிகைக் காலங்களில் அரிசி தட்டுப்பாடு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இப்போதும் கடைகளில் இருந்து வரும் நாட்டு அரிசி 3 முதல் 5 கிலோ வரை மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி இன்று (30) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய, 311 ரூபாவாக இருந்த ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 02 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 309 ரூபாவாகும்.

283 ரூபாவாக இருந்த ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 03 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 286 ரூபாவாகும்.

மேலும், மண்ணெண்ணெய் 05 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 188 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளது.

இதேவேளை, ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையிலும், சுப்பர் டீசலின் விலையிலும் எவ்விதமான மாற்றம் மேற்கொள்ளப்படவில்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டத்தாபனம் அறிவித்துள்ளது.

ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் தற்போதைய விலை - 371 ரூபாவாகவும் சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் தற்போதைய விலை - 313 ரூபாவாகவும் உள்ள்மை குறிப்பிடத்தக்கது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd