முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் வசமிருந்த 8 அரச வாகனங்கள் மீள ஒப்படைக்கப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் 8 வாகனங்கள் மஹிந்த ராஜபக்ஸவின் வசம் இருப்பதாகவும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வசம் 11 அரச வாகனங்கள் தற்போது உள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1986 ஆம் ஆண்டின் 04 ஆம் இலக்க ஜனாதிபதிக்குள்ள உரிமைகள் சட்டத்திற்கமைவாக மஹிந்த ராஜபக்ஸவும் ரணில் விக்கிரமசிங்கவும் தம்வசமுள்ள மேலதிக வாகனங்களை மீள ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.
வருடத்தின் முதல் 8 மாதங்களில் தேயிலை ஏற்றுமதி வருமானம் 8.3 வீதத்தால் அதிகரித்துள்ளது.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
வருடத்தின் முதல் 8 மாதங்களில் தேயிலை ஏற்றுமதியின் மூலம் 942.3 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைத்துள்ளது.
பாரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் அரிசியின் விலையை உயர்த்திய நிலையில், இலங்கையில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்களும் அரிசியின் விலையை அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும், சந்தையில் கீரி சம்பா தவிர மற்ற அரிசி வகைகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ரூ.400 ஆக இருந்த ஒரு கிலோ கீரி சம்பா அரிசியின் விலை ரூ. 250-270 வரை விலை குறைக்கப்பட்டுள்ளது.
பாரிய அரிசி ஆலைகளின் உரிமையாளர்கள் அரிசியின் விலையை குறைப்பதாக கூறினாலும் சந்தையில் ஒரு கிலோ அரிசி 210-230 ரூபா வரை அதிக விலையில் உள்ளது.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கைகளை வெளியிடத் தயார் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு தனிநபரின் அறிக்கைகளின் அடிப்படையில் அவை ஏன் வெளியிடப்படுவதில்லை என்று கேட்ட அவர், பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையில், பணிகளைச் சரியாகச் செய்யத் தயாராக இருப்பதாகவும் கூறினார்.
கம்பஹாவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.உதய கம்மன்பில சிறு பிள்ளைகள் மைதானத்தில் விளையாட்டுப் பொருட்களை வீசி கவனத்தை ஈர்க்கும் வகையில் செயற்படுவதாகவும், அவரின் அறிக்கைகள் தொடர்பில் தாம் கவலைப்படவில்லை எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இலங்கை தனது வெளிநாட்டுக் கடனைச் செலுத்தத் தொடங்கும் 2027ஆம் ஆண்டுக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அரச வருமானத்தை 15% ஆக்கும் சவாலை புதிய அரசாங்கம் எதிர்கொள்ளும் என முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க இன்று தெரிவித்துள்ளார்.
அந்த இலக்கை எட்டுவதற்கு ஒவ்வொரு வருடமும் ஒரு வீத பொருளாதார வளர்ச்சியை எட்ட வேண்டும் என தெரிவித்துள்ள ரணில் விக்கிரமசிங்க, பொறுப்புகளில் இருந்து தட்டிக்கழிக்காத அனுபவமிக்க அணியே அடுத்த பாராளுமன்றத்திற்கு தேவை எனவும் வலியுள்ளார்.
உங்கள் எதிர்காலத்தை புதிய பாராளுமன்றம் தீர்மானிக்கும். இந்தப் பணியை வெற்றிகரமாகச் செய்தால் நாடாக மீண்டு வரலாம்.
தவறினால் நாடு மீண்டும் அழியும். மீண்டும் வரிசையில் நிற்கும் காலத்திற்கு நகரும். அதனால் கேஸ் சிலிண்டர் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
கொழும்பு - கிரேண்ட்பாஸ் மாதம்பிட்டி மயானத்திற்கருகில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
முச்சக்கரவண்டியின் பின்பக்க ஆசனத்தில் அமர்ந்திருந்த நபர் மீது காரில் வந்த சந்தேகநபர்களால் துப்பாக்கிசூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மிஹிஜய செவண குடியிருப்பு தொகுதியில் வசித்துவந்த 35 வயதான ஒருவரே துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ளார்.
கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் தப்பிச்சென்றுள்ளதாகவும் அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
நாடு தற்போது கடனில் இயங்குவதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
தனது அரசாங்கம் நியமிக்கப்பட்டதன் காரணமாக இருபத்தி நான்கு மணித்தியாலங்களுக்குள் நாட்டுக்கு புதிய வருமானம் கிடைக்காது எனவும் அமைச்சர் குறிப்பிடுகின்றார்.
எனவே, உள்நாட்டிலேயே கடன் வாங்க வேண்டியுள்ளது என அவர் சுட்டிக்காட்டினார்.
அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு நிதியமைச்சு அனுமதி வழங்காத பின்னணியிலேயே முன்னாள் ஜனாதிபதி இதனைத் தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் விஜித ஹேரத் சுட்டிக்காட்டினார்.
17.01.2025 இல் முடிவடையவிருந்த 2024 ஆம் கல்வியாண்டின் மூன்றாம் பாடசாலை தவணை மேலும் ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனால் மூன்றாம் தவணை மற்றும் 2024 கல்வியாண்டு 24.01.2025 அன்று முடிவடையும்.
இது தொடர்பில் அதிபர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளுக்கு அறிவித்து கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர விடுத்துள்ள கடிதத்தில், மூன்றாம் தவணை பரீட்சையை நடத்துமாறு அதிபர்கள் விடுத்த கோரிக்கைகளை கருத்திற் கொண்டு மூன்றாம் தவணை பாடசாலை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னேற்ற அறிக்கைகளை வழங்க மாணவர்களுக்கு போதுமான அவகாசம் கொடுக்க அறிவிக்கப்பட்டுள்ளது.
மூன்றாம் தவணை முடிவடையும் 24 ஆம் திகதிக்குள் மூன்றாம் தவணைப் பரீட்சையை நடத்தி முன்னேற்ற அறிக்கைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என கல்வி அமைச்சு கடிதத்தில் வலியுறுத்தியுள்ளது.
அதிக ஆண்டு பட்ஜெட் பற்றாக்குறை ஏற்படும் போது, அதை ஈடுகட்ட புதிய பணத்தை அச்சிட முடியாது, எனவே உள்ளூர் சந்தையில் கடன் வாங்குவதைத் தவிர அரசுக்கு வேறு வழியில்லை என்று நிதி அமைச்சகம் வலியுறுத்துகிறது.
புதிய ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட அனுரகுமார திஸாநாயக்கவின் ஆட்சிக்காலத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தையில் பெருமளவிலான கடன் பணம் எடுக்கப்பட்டுள்ளதாக சிலர் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நாம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த நிதியமைச்சின் செயலாளர் கே.எம். மஹிந்த சிறிவர்தன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று இடம்பெறுகிறது. இதில் வாக்களிப்பதற்கு 1576 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
இன்றைய தினம் வாக்களிக்க தவறுவோருக்கென எதிர்வரும் 18ம் திகதி சந்தர்ப்பம் வழங்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட 8 அரசியல் கட்சிகள் மற்றும் ஒரு சுயாதீன குழு எல்பிட்டிய பிரதேச சபைக்கென வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தன. குறித்த சபைக்கான தேர்தல் எதிர்வரும் 26ம் திகதி இடம்பெறவுள்ளது.