web log free
May 06, 2025
kumar

kumar

பதுளை – மஹியங்கனை வீதி 4 ஆவது மைல் கல் பகுதியில் பஸ் ஒன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 மாணவிகள் உயிரிழந்துள்ளதாகவும் 35 பேர் காயமடைந்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, காயமடைந்தவர்களில் 6 பேர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவர்கள் மஹியங்கனை பக்கமாக சுற்றுலா சென்ற போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்து இடம்பெறும் போது பஸ்ஸில் 36 மாணவர்களும் விரிவுரையாளர்கள் இருவரும், இராணுவ அதிகாரிகள் இருவரும் சாரதி உட்பட 41பேர் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதில் காயமடைந்த 39 பேர் வரை பதுளை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

முட்டையின் அதிகபட்ச சில்லறை விலையான 37 ரூபாயை நிலைநிறுத்துவதற்கு முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் மொத்த வியாபாரிகள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

வர்த்தக அமைச்சின் செயலாளர் எம். எம். நைமுதீனுடன் நடந்த விவாதத்தின் விளைவாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

இதன்படி, எதிர்காலத்தில் அந்த விலைக்கு மேல் முட்டைகளை விற்பனை செய்ய வேண்டாம் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைய ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லீற்றரின் விலை 6 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

அதன் புதிய விலை 371 ரூபாவாகும்.

சுப்பர் டீசல் லீற்றரின் விலை 6 ரூபாவினால் குறைக்கப்படுவதுடன் அதன் புதிய விலை 313 ரூபாவாகும்.

ஏனைய எரிபொருட்களின் விலைகளில் மாற்றம் இல்லை என பெற்றொலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மகிந்த ராஜபக்ச ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு சலுகைகளை நீக்குவதற்கு அரசாங்கத்திற்கு செல்வாக்கு செலுத்திய காரணம் குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.

சந்திரிகாவின் கணவர் கொல்லப்பட்ட சம்பவத்தில் ஜனதா விமுக்தி பெரமுனவுக்கு தொடர்பிருப்பதாகவும், குண்டுத் தாக்குதலில் அவரது கண்ணில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

“சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க எனக்கு ஒருபோதும் ஆதரவளிக்கவில்லை. மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதற்காக மட்டுமே நாங்கள் ஒன்றிணைந்து செயற்பட்டோம்.

மகிந்த ராஜபக்ச தொடர்பில் கருத்துத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி ரணில், மஹிந்த ராஜபக்ஷவுக்கு பொதுமக்கள் மத்தியில் இருந்த செல்வாக்கு இழப்பு என்பது வேறு விடயம் எனினும் அவர் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தமை கருதி அவரின் பாதுகாப்பில் கவனம் செலுத்தப்பட வேண்டுமென சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கம் தனது அனைத்து சிறப்புரிமைகளையும் நீக்கிவிட்டு ஏனையவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகளை தொடர்ந்தும் இருக்க அனுமதிக்குமாறு அரசாங்கத்திடம் ரணில் மேலும் கோருகின்றார்.

பாராளுமன்ற முறைமையில் அரசாங்கம் தலையிட வேண்டாம் என எச்சரிக்கும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இவ்வாறான விடயங்களுக்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என வலியுறுத்துகின்றார்.

இன்றைய தினம் தீபாவளி பண்டிகையை கொண்டாடுகின்ற ஏசியன் மிரர் வாசகர்கள் ஆதரவாளர்கள் நலன்விரும்பிகள் அனைவருக்கும் தித்திக்கும் தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள்..!

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை பிணையில் விடுவிக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று(30) உத்தரவிட்டது.

தலா 5 மில்லியன் ரூபா பெறுமதியான 5 சரீரப்பிணைகளில் முன்னாள் அமைச்சரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

பதிவு செய்யப்படாத அதிசொகுசு காரொன்று கொழும்பிலுள்ள ஹோட்டலொன்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கடந்த 23ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான தற்போதைய பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி அடுத்த சில தினங்களுக்குள் உடனடியாக நாட்டுக்கு விளக்கமளிக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

 

இரத்தினபுரி கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி அனுர திஸாநாயக்க, பொருளாதார ஆலோசகர் உட்பட நிதி அமைச்சைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் ஏற்கனவே சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடி வருவதாகவும், அவர்கள் முன்வைத்த யோசனைகள் குறித்து பேசுவதாகவும் தெரிவித்தார். 

 

“சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை நிறைவடையவில்லை எனவும், அடுத்த வரவு செலவுத்திட்டத்தின் பின்னர் பேச்சுவார்த்தை நிறைவுபெறும் எனவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இது ஒரு நல்ல கதை. அனைத்து வேலைகளும் நன்றாக உள்ளது என அனுர தெரிவித்தார். இப்போது நாலு கோடிக்கு முந்திரி சாப்பிட்டேன் என்று சொல்கிறார்கள். பிறகு நான் வேறு வேலை செய்ய வேண்டியதில்லை. இதனை ஜனாதிபதி உடனடியாக நாட்டுக்கு தெரிவிக்க வேண்டும். ஜனாதிபதி என்ற ரீதியில் நாணய நிதியத்துடன் நிதியுடன் கலந்துரையாடி வேறு ஏதாவது முக்கிய தீர்மானத்தை எடுத்தால் பாராளுமன்றத்திற்கோ அல்லது மக்களுக்கோ கூறுவேன். இதுவரை ஜனாதிபதி எதனையும் அறிவிக்கவில்லை. எனவே, நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவின் வருகையின் பின்னர் கலந்துரையாடல்களின் உண்மையான நிலை குறித்து அடுத்த சில நாட்களுக்குள் நாட்டுக்கு அறிவிக்க வேண்டிய கடமை ஜனாதிபதிக்கு உண்டு. நாங்கள் கூறும் புள்ளி விவரங்கள் தவறாக இருந்தால், இந்த உண்மைகளை நாட்டுக்கு மறைக்க வேண்டாம்.

மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் உள்ள அனைத்து அரச தமிழ் பாடசாலைகளுக்கும் நவம்பர் 1 ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

நவம்பர் 31ஆம் திகதி தீபாவளியை முன்னிட்டு அந்தந்த மாகாணங்களில் உள்ள தமிழ்ப் பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்தந்த பாடசாலைகளுக்கு நவம்பர் 9ஆம் திகதி சனிக்கிழமை பாடசாலை நடத்த முடிவு செய்துள்ளதாக வட்டாரக் கல்வி இயக்குநர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த அரசாங்கம் கடன் வாங்குவதோடு மட்டுமன்றி பணத்தையும் சுருட்ட ஆரம்பித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

காலியில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், அரசாங்கத்தின் பயணம் ஆபத்தானது.

ஆனால் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி ஆட்சியின் போது கடன் வாங்காமல், கடன்களை வெட்டுவதற்கு உறுதியளித்ததன் மூலம் நாட்டை முன்னோக்கி கொண்டு சென்றதாக அவர் வலியுறுத்தினார்.

அரச ஊழியர்கள் மற்றும் தனியார் துறை ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு உள்ள பணத்தின் அடிப்படையில் மட்டுமே வழங்கப்படும் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கம் இதற்கு பணம் ஒதுக்கிய போதிலும் அதற்கான பணம் ஒதுக்கப்படவில்லை எனவும், மூலதன பொருட்களில் உள்ள பணம் போதுமானதாக இல்லை எனவும் அமைச்சர் விஜித ஹேரத் மேலும் வலியுறுத்துகின்றார்.

இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எவ்வாறாயினும், தமது அரசாங்கம் பொய்யான வாக்குறுதிகளை வழங்குவதில்லை என்று கூறிய அமைச்சர், அரச ஊழியர்களின் சம்பளம் 2025 ஆம் ஆண்டு முதல் அதிகரிக்கப்படும் என்றும், ஆனால் அது எவ்வளவு என்று கூற முடியாது என்றும் கூறினார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd