web log free
September 11, 2025

பிரதேசவாசிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய மழையில் வௌி வந்த பொருட்கள்

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோரக்கன்கட்டு பகுதியில் இராணுவ பயன்பாட்டு பொருட்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அண்மையில் பெய்த மழை காரணமாக புதைந்திருந்த குறித்த பொருட்கள் வெளியில் தெரிய ஆரம்பித்துள்ளது.

இதனை அவதானித்த பிரதேசவாசிகள் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

குறித்த பொருட்கள் இராணுவ உபயோக பொருட்கள் எனவும், அதில் 7 கண்ணிவெடிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

குறித்த வெடிபொருட்களை அகற்றுவது தொடர்பில் நீதிமன்ற அனுமதி பெறப்பட்டு பின்னர் பாதுகாப்பான முறையில் அகற்றப்படவுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd