web log free
April 28, 2024

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி தலைவர்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அமைச்சரவை கூட்டத்தில் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.


கொவிட் தொற்றினை தடுப்பதற்காக 3 வாரங்கள் நாட்டை மூடுமாறு ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பிவிட்டு அதனை ஊடகத்திடம் வழங்கிய கட்சி தலைவர்களையே மஹிந்த இவ்வாறு எச்சரித்துள்ளார். நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த கட்சி தலைவர்களுக்கு பிரதமர் கடுமையான அறிவுரைகளையும் வழங்கியுள்ளர்.


நாட்டை மூட வேண்டாம் என அமைச்சரவையில் இணக்கம் வெளியிட்டு வெளியே சென்று எதிர்ப்பு வெளியிடுவது பொருத்தமான செயல் அல்ல என பிரதமர் குறிப்பிட்டுள்ளார். எதிர்ப்பு என்றால் வாயை மூடிக்கொண்டு இருக்காமல் அமைச்சரவையில் அதனை கூறியிருக்கலாம். ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியது தவறு இல்லை என்ற போதிலும் அதனை ஊடகங்களிடம் வழங்குவது தவறு என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்

 

சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைபடுத்தல் ஊரடங்கை மீறிய குற்றசாட்டிற்காக இன்று காலை 6 மணி வரையான 24மணி நேரத்திற்குள் மொத்தமாக 502 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்தக் குற்றச்சாட்டிற்காக கடந்த ஆண்டு ஒக்டோபர் 30 முதல் இன்று வரை 56,796 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

மேலும் மேல்மாகாணத்தில் உள்நுழையும் மற்றும் வெளியேறும் எல்லைகளில் அமைக்கப்பட்டிருந்த சோதனைச்சாவடிகளில் நேற்று 757 வாகனங்களில் பயணித்த 1,509 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நாளை முதல் சமையல் எரிவாயு பற்றாகுறை தீர்க்கப்படும் என கூட்டுறவு சேவைகள் சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவித்தார்.

லிட்ரோ கேஸ் நிறுவனம் தற்சமயம் பழைய விலையிலும் லாfப் கேஸ் நிறுவனம் அதன் புதிய விலையிலும் எரிவாயுவினை விற்பனை செய்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

Page 7 of 7