web log free
April 27, 2024

எதிர்வரும் நாட்களில் சமையல் எரிவாயுவின் விலை தவிர்க்க முடியாது அதிகரிக்க நேரிடும் என நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

உலக சந்தையில் சமையல் எரிவாயு விலை அதிகரிப்பால், இலங்கையில் விலையை கட்டுப்படுத்த முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள பின்னணியில் அமைச்சர் இந்த கருத்துகளை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தற்போது நாளொன்றுக்கு சுமார் 70-90 மெட்ரிக் தொன் எரிவாயுவை உற்பத்தி செய்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை இணை பேச்சாளர் ரமேஷ் பத்திரண இதனை தெரிவித்துள்ளார். எனினும், இந்த தொகை நாட்டின் எரிவாயு தேவையில் 5 வீதம் முதல் 10 வீதம் வரையே பூர்த்தி செய்யமுடியும் என குறிப்பிட்டுள்ளார்.

இத்தகைய சூழ்நிலையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.  

அனைத்துக்கும் முன்னுரிமை பிள்ளைகள் என்ற தொனிப்பொருளில் சர்வதேச சிறுவர் தினம் கொண்டாடப்பட்டது. கொவிட்-19 வைரஸ் தாக்கத்தின் காரணமாக பாடசாலைகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளதனால் சிறுவர்கள் மன அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளார்கள். நிகழ்நிலை முறைமை ஊடாக கற்பித்தல் நடவடிக்கைகள் இடம் பெற்றாலும் அது வகுப்பறை கல்வி முறைமைக்கு இணையானதாக அமையாது.  

சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளுக்கு அமைய பாடசாலைகளை கட்டம் கட்டமாக திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. முன்பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இரண்டு தொலைக்காட்சி அலைவரிசை ஊடாக ஒவ்வொரு நாளும் மூன்று மணித்தியாலம் கற்றல் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புச் செய்ய உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

623 பொருட்களின் இறக்குமதி உத்தரவாத விலை நீக்கப்பட்டுள்ளது. ஆண்டின் முடிவில் 5% மற்றும் 2022ன் முதல் காலாண்டில் 6.5% பொருளாதார வளர்ச்சி ஏற்படுமென ஆறு மாத கால வரையறையை வெளியிட்டார் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால்.

அத்தியாவசியமற்ற 623 பொருட்களின் இறக்குமதி தொடர்பில் விதிக்கப்பட்டிருந்த 100% உத்தரவாத தொகை வைப்பு கட்டுபாடு உடன் அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்படும் என அஜித் நிவாட் கப்ரால் அவர்கள் தெரிவித்துள்ளார்.

தடைவிதித்திருந்த 6 நிதி நிறுவனங்களுக்கு தடை நீக்கப்பட்டு அனுமதி வழங்கப்பட்டது. மற்றும் வாகன பறிமுதல், கடன் கொடுப்பனவுகளில் அதிகம் மக்களை அழுத்தத்திற்குள்ளாக்குதல் என்பவற்றை 6மாதத்திற்கு தவிர்க்குமாறு கூறப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

நாட்டின் பேரண்டப் பொருளாதாரம் மற்றும் நிதிக்கட்டமைப்பின் ஸ்தீரத்தன்மையை உறுதிப்படுத்துவதை இலக்காக கொண்ட எதிர் வரும் 6மாத காலத்திற்கான செயற்திட்டத்தை நேற்று வெள்ளிக்கிழமை இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் உத்யோகபூர்வமாக வெளியிட்டார்.

அவர் மேலும் கூறுகையில், எமது நாட்டின் பொருளாதாரத்தை நீண்ட கால அடிப்படையில் வலுப்படுத்துவதை நோக்காக கொண்டு இந்த செயற்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனூடாக கடந்த காலத்தில் "ஆசியாவின் ஆச்சரியம்" என்றும் "ஆசியாவின் அடுத்த அதிசயம்" என்றும் வர்ணிக்கப்பட்ட எமது நாடு, கடந்த சில வருடங்களில் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்திருக்கின்றது. கொவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக எமது பொருளாதாரம் பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளபட்டது. ஆனால் இது எமது நாட்டிற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட விடயமல்ல இருப்பினும் தற்போது பொருளாதாரத்தின் முக்கிய துறைகள் நேர்மையான துலங்கலை காண்பிக்கின்றமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.

அதேவளை கொவிட்-19 வைரஸ் பரவல் நெருக்கடியை எதிர்கொள்வதில் அரசாங்கத்தினாலும் மத்திய வங்கியினாலும் வழங்கப்பட்ட பங்களிப்புகள் உரியவாறான அங்கீகாரத்தை பெறவில்லை. உண்மையில் அவை பாராட்டப்பட வேண்டியவையாகும்.குறிப்பாக கொவிட் -19 சௌபாக்கிய மீள் நிதி வழங்கள் திட்டத்திற்கென 165.5 பில்லியன் ரூபாவும் அரசாங்கத்திற்கு நிதி ரீதியான உதவிகளை வழங்க 2002 பில்லியன் ரூபாவும் மத்திய வங்கியினால் ஒதுக்கிடப்பட்டுள்ளது.

443 வருட கால அந்நியர்களின் ஆட்சி, 30 வருடகால போர், மின்சார மற்றும் வலுசக்தி நெருக்கடி, சுனாமி உள்ளிட்ட பாரிய இயற்கை அனர்த்தங்கள், உலகளாவிய தொற்றும் பரவல் உள்ளடங்கலாக இலங்கையானது காலத்திற்கு காலம் பல்வேறு சவால்களின் போது அரசாங்கமோ மத்திய வங்கியோ மாத்திரம் தனித்து செயற்பட்டு அதனை வெற்றி கொள்ள முடியாது. மாறாக வங்கி கட்டமைப்புகள், வங்கியில்லா கட்டமைப்புகள், ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்கள், அபிவிருத்தி பங்கீட்டாளர்கள் , முதலீட்டாளர்கள், சேவை வழங்குவோர், வெளிநாட்டுக்கு பணம் அனுப்புவோர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரதும் ஒத்துழைப்புடன் இணைந்து பணியாற்றுவதனூடாக பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் அவர்கள் தெரிவித்துள்ளார்.

நாம் இப்போது பொருளாதாரம் எதிர்கொண்டிருக்கக்கூடிய பிரச்சினைகளை இனங்கண்டிருக்கின்றோம். எனவே அவற்றை நிவர்த்தி செய்து பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான செயற்திட்டத்தை 3 கட்டங்களாக பிரித்துள்ளோம். 1ம் கட்டம் எதிர்வரும் 6மாத காலத்திற்கும் 2ம் கட்டம் ஒரு வருட காலத்திற்கும் 3ம் கட்டம் நடுத்தர நீண்ட காலத்திற்குரியதாக தயாரிக்கப்பட்டுள்ளது. அதன் படி எதிர்வரும் 6 மாத காலத்தில் கடன் சேவை , ஏற்றுமதி சேவை, சுற்றுலா துறை என்பவற்றை ஊக்குவிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு அரசாங்கத்தின் கடன் கொள்கையை காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்தல் , வங்கி துறையின் செயல்பாடுகள் சாதகமான மட்டத்திலுள்ள போதிலும் சில பிரிவுகள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்துதல், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி இலகுபடுத்தல் என்பன தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதி தொடர்பில் நிர்ணயிக்கப்பட்டிருந்த 100% உத்தரவாத தொகை கட்டுபாடுகள் நேற்று முதல் நீக்கப்பட்டு அமுல்படுத்தப்பட்டது. இந்த உத்தரவாத கட்டுபாடினால் இறக்குமதியாளர்கள் பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்த நிலையில் அதனை நீக்கியுள்ளோம் என அஜித் நிவாட் கப்ரால் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும், கொவிட் -19 வைரஸ் பரவலின் பின்னாரான புதிய இயல்பு நிலையின் கீழ் வங்கிகளை கண்காணிப்பது என்பது ஒப்பீட்டளவில் கடினமான ஒன்றாகும் எனவே அதற்கென கண்காணிப்பு குழுக்களை அமைப்பதற்கு முடிவேடுத்துள்ளோம். மற்றும் உள்நாட்டு உற்பத்தியை வலுப்படுத்தல் பணவீக்க நிலையை சீரமைத்து துறைமுக நகரம் மற்றும் கைத்தொழில் வலையத்தின் செயற்பாடுகளூடாக வெளிநாட்டு நேரடி முதலீடுகள் உற்பாய்சல்களை அதிகரித்தல் என்பன தொடர்பில் அதிக கவனம் எடுக்கப்படும் எனவும் பண்நாட்டு கொடுக்கல் வாங்கல்களை அறிக்கை படுத்துவதற்கான முறையினை 2022 ஜனவரி 1ம் திகதி முதல் நிறுவப்படும் எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் அவர்கள் தெரிவித்துள்ளார்.

"we will be outcome oriented" நாங்கள் விளைவு சார்ந்தவர்களாக இருப்போம் என அவர் தனது உரையில் உறுதியாக குறிப்பிட்டுள்ளார்.

அநுராதபுர சிறைசாலையில் இருக்கும் 11 தமிழ் கைதிகள் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவுடன் உடனடி சந்திப்பு குறித்து விவாதிக்க கடிதம் அனுப்பிய பின்னர் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இன்று அநுராதபுரம் சிறைச்சாலைக்குச் விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இன்று பரவலாக பேசிவரும் பிரஜைகள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று G20 சர்வமத மாநாடு! பலருக்கு தெரியாத சிலருக்கு தெரிந்த G20 மாநாட்டின் முக்கியத்துவம் தெளிவாக பாமரர் புரியும் வண்ணம் நோக்கினோமானால்,

1999 வரை G8 நாடுகளாக இருந்த அமைப்பு 1997ல் ஏற்பட்ட பாரிய பொருளாதார நெருக்கடியால் G20 நாடுகளாக மாற்றமடைந்தது.

G8 என்பதை "Group of eight" என பொருள் கொள்ளலாம். பிரான்சு, அமெரிக்கா, ஜப்பான், கனடா, இங்கிலாந்து, இத்தாலி, ஜெர்மனி மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகளே G08 நாடுகள் சபையில் அங்கம் வகிக்கித்தது. பின் 1999 ல் செப்டம்பர் மாதம் 26ம் திகதி G20 நாடுகள் சபை ஆரம்பிக்கப்பட்டது.

G20 நாடுகள் சபையில் G08 நாடுகள் உட்பட பணபலம்,ஆட்பலம் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் முன்னணி வகிக்கும் 12 நாடுகளும் இணைந்து கொண்டது.

G20 நாடுகளாக அர்ஜென்டினா, அமெரிக்கா, கொரியகுடியரசு, அவுஸ்திரேலியா, பிரேசில், சீனா, இந்தியா, இந்தோனேசியா, கனடா, பிரான்சு, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா, சவூதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி, ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என்பன இடம் பிடித்துள்ளது.

உலகின் முக்கிய பொருளாதாரம் அபிவிருத்தி மற்றும் போர் யுக்திகள் தொடர்பில் ஒன்றினைந்து கலந்துரையாடி சீரமைக்கும் சர்வதேச மன்றமே G20 அமைப்பு.

இது உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 80 சதவீதமும் உளகளாவிய வர்த்தகத்தில் 75 சதவீதமும் உலக மக்கள் தொகையில் 60 சதவீதமும் பங்களிப்பு வழங்கும் 20 நாடுகளே G20 நாடுகள் அமைப்பு கொண்டுள்ளது.

இவ்வமைப்பிற்கு நிரந்தர செயலகம் என்று ஓர் இடத்தை குறிப்பிட முடியாது. இவ்வமைப்பின் தலைமைப் பொறுப்பு சுழலும் நாற்காலி போல் வருடாவருடம் மாறுப்படும். தலைமைப் பொறுப்பை யார் முன் வந்து ஏற்கிறாரோ அவரே அடுத்த ஆண்டு வைபவத்தை கூட்ட வேண்டும்.

தலைமைப் பொறுப்பில் இருக்கும் நாடு ஏனைய G20 அல்லத நாடுகளையும் கூட்டத்திற்கு விருந்தினராக அழைக்கலாம். வருடாவருடம் அழைப்பின் பேரில் பல நாடுகளின் தலைவர்கள் அல்லது துணை அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்துக் கொள்வது வழக்கம்.

சாதாரண கூட்டமாக நடந்தேறிய நிகழ்வு 2008 முதல் உச்சி மாநாடாக மாற்றம் செய்யப்பட்டது.

இக்கூட்டணியில் குழு மற்றும் தனிப்பட்ட போச்சு வார்த்தைகளும் நடைபெறும். இங்கு உலகின் முக்கிய பொருளாதார முடிவுகள் எடுக்கப்படும்.
இவ்வமைப்பின் முக்கிய முடிவுகளுள் குறிப்பிடத்தக்க முடிவாக 2008ல் ஏற்பட்ட பாரிய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க 2009ல் G20 மாநாட்டில் 5 லட்சம் கோடி டாலர் தொகையை உலக பொருளாதாரத்தில் புலக்கத்தில் விடப்பட்டது. இந்த முடிவால் அக்காலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை சீராக்க முயன்றது.

2019 ஜப்பானில் ஒசாகாவில் நடை பெற்ற G20 மாநாட்டில் பொண்களின் பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்தப்பட்டது. அன்று முதல் G20 மாநாட்டில் கருப் பொருளுள் பொண்ணியம் என்பதும் சேர்க்கப்பட்டது.

2020 சவூதி அரேபியாவில் நடைபெற இருந்த மாநாடு கொரோனா காரணமாக இணையம் வழியாக நடைப்பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

2021 இத்தாலியில் ரோம் நகரில் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள நிலையில் முன்கூட்டிய கூட்டம் இத்தாலியின் பொலஞா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றவண்ணம் உள்ளது. இதில் இலங்கை உள்ளிட்ட சில நாடுகள் விருந்தினராக கலந்து கொண்டுள்ளது.

நோர்டிக் நாடுகள் உட்பட பாகிஸ்தான் போன்ற சில நாடுகள் இதுவரையில் G20 மாநாட்டில் கலந்து கொண்டதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் G20 நாடுகளிடம் 25.4 பில்லியன் தொகை கடன்பட்டிருப்பதே இம்மாநாட்டில் கலந்துக்கொள்ளாததற்கு பிரதான காரணமாக கூறப்படுகிறது.

2021 உச்சி மாநாட்டிற்கு அல்கேரியா, நியுசிலாந்து, புருனை, காங்கோ ஜனநாயகக் குடியரசு, ருவாண்டா, சிங்கப்பூர், ஸ்பெயின் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் G20 சர்வமத மாநாட்டின் முன்னாயத்த வைபவத்தில் கலந்து கொண்ட இலங்கையின் பிரதமர் கௌரவ புத்தசாசன மற்றும் சமய கலாசார அலுவல்கள் அமைச்சர் மதிப்பிற்குரிய மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் " ஒரு தேசத்தின் ஒற்றுமையிலே எதிர் காலம் தங்கியுள்ளது" என தனது பிரதான உரையை ஆரம்பித்தார்.

அவரது உரையிலே " கலாச்சாரங்களுக்கிடையே சமாதானம் மதங்களுக்கிடையே புரிதல் " என்ற கருப்பொருளை மையமாக வைத்து உரையாற்றினார்.
" என்னை இந்த வரலாற்று சிறப்புமிக்க இத்தாலியின் பொலஞா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் G20 சர்வமத மாநாட்டிற்கு அழைப்பு விடுத்த இத்தாலியின் ஏற்பாட்டுக் குழு தலைவர் பேராசிரியர் அல்படோ மெலொனி உள்ளிட்ட குழுவிற்கு நன்றி கூறுகிறேன்" என்ற கூற்று முதன்மைப்படுத்தப்பட வேண்டிய ஒன்றாகும்.

தெற்காசியவின் புவியியல் வலையமான இலங்கை இம்மாநாட்டின் தொனிப்பொருளுள் அமைந்திருப்பது எமக்கு பெருமையான ஒன்றாகும்.  இன மத ஒற்றுமை எமது நாட்டின் முக்கிய அம்சமாகும். தீவிரவாத சித்தாந்தங்கள் மற்றும் அதனுடைய வன்முறை சம்பவங்கள் என்பன நமது யுகத்தின் சவால். முழு உலகும் தற்போது எதிர் நோக்கியுள்ள கடுமையான சுகாதார நெருக்கடி நம் அனைவரையும் ஒன்றிணைப்பதற்கு உதவியுள்ளது. கொரோனா தொற்றானது பல்வேறு மதங்கள் இனங்கள் மற்றும் நாகரிகங்கள் வேறுபாடு இன்றி முழு உலகையும் கலங்கச் செய்துள்ளது. கடந்த கால நடந்து முடிந்த விடையங்களை பற்றி பேசாமல் இனி உலகை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதை பற்றி கலந்துரையாட வேண்டும் என பிரதமர் கௌரவ ராஜபக்ஷ அவர்கள் தன் உரையில் கூறியிருந்தார்.

Page 4 of 7